(Reading time: 12 - 23 minutes)

ன்ன ஈமெயில் சொல்றே சசி?? தினேஷ் அனுப்பிய ஈமெயிலா?”, என்று கேட்டதும்..

“தினேஷ்ஷா??... “, என்று புரியாமல் முழித்தாள் சசி. ‘நான் என்ன சொல்ல வந்தா இவ என்ன உளறுறா?’, என்ற யோசனையுடன்..

“ஆமா.. தினேஷ் தான்!!! நம்ம டீம்ல யாரோ அலர்ஜி பெர்சன் இருக்காங்கன்னு ஈமெயில் வந்ததே! நான் லீவ்ல இருக்கேன்னு தினேஷ்  ஃபோன் செய்து ரிமைன்ட் செய்தார் தெரியுமா?”, என்று கேட்க...

அவள் சொன்ன பின் தான் சசிக்கு அந்த ஈமெயில் நினைவுக்கு வர...

“இதை போன் பண்ணி வேற சொன்னாங்களா?!!!!”, என்று சசி சிரிக்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“ஜோக் இல்லை சசி! சில பெர்ஃபியூம்ஸ் உயிருக்கே ஆபத்தாக்கிடுமாம்! அந்த அளவுக்கு ஹைப்போ அலர்ஜனிக் பெர்ஷனாம்!”, என்றாள் அஞ்சனா குரலை ஏற்றி இறக்கி தீவிரமாக..

அவள் சொன்னதும், சசியால் தீவிரமாக எதுவும் யோசிக்க முடியவில்லை...

“எனக்கு என்னமோ.. நீ அன்னைக்கு அடிச்சுட்டு வந்தியே ஒரு  பெர்ஃபியூம்!!!!  அதுல அலர்ஜி  இல்லாதவன்  கூட மூச்சடைச்சு செத்திருப்பான்! அவ்வளோ ஸ்ட்ராங்!”, என்றவள்..

“அப்படி ஏதாவது பாதிக்கப் பட்டவன் தான் தினேஷ்கிட்ட போய் ரிப்போர்ட் செய்திருப்பான்னு நினைக்கிறேன்!”, என்று சந்தேகமாக சொல்ல..

“ஹா... ஹா..” என்று சிரித்த அஞ்சனா..

“அப்படியா கூட இருக்குமோ? ப்ச்... என்னோட ஃபேவரேட் பெர்ஃபியூம்ஸ்சை ப்ளாக் செய்ய வைச்சிட்டானே! அவன்!! அந்த அவன் எவனோ??!!!”, என்று கேள்வி வைக்க...

அதற்கு பதில் சசிக்கு மட்டும் தெரியுமா என்ன?

“எவனா இருந்தால் என்ன! எமனாய் இருந்தால் என்ன!”

என்று சசி பாட்டாகவே பாட..

அதைக் கேட்ட அஞ்சனாவும்..

“எமனாய் இருந்தால் என்ன? ஆர். எமனா இருந்தால் என்ன?”

என்று டைமிங்காக  பாட... சசி விழுந்து விழுந்து சிரித்தவள்..

“எமனாய் இருந்தால் என்ன? ஆர். எமனா இருந்தால் என்னவா??? இதை அந்த எமன்... ஆர். எமன் கேட்டா அவ்வளோ தான்!”, என்று சொல்லி முடிக்கும் பொழுது,

“சசி!!!”, என்ற அழைப்பு வர.. இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து போனது சசிக்கு!! அது ஆர்யமன் குரலாயிற்றே!

‘அய்யோ... அவனா?? அவனா இருக்கக் கூடாது!!!’, என்ற திகைப்புடன் திரும்பிய அவள் அலைபேசியை துண்டிக்க மறந்திருந்தாள்...

எதிர் முனையில் அஞ்சனாவிற்கு.. யாரோ சசியை அழைப்பது மட்டும் புரிய.. ‘யார்கிட்ட பேசுறா சசி?’, என்ற ஆர்வத்துடன் அஞ்சனா காதை தீட்டிக் காத்திருக்க...

சசி எதிரே பரணிதரனுடன் நின்று கொண்டிருந்தான் ஆர்யமன்!!!

தொடரும்

Episode 16

Episode 18

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.