(Reading time: 29 - 57 minutes)

மா குரங்கு அளவுக்கு க்யூட்டா, கொரில்லா அளவுக்கு சார்மிங்காதான் இருக்கீங்க…” கவ்ண்டர் கொடுத்தாள் வினி…. ‘அதென்ன இவ சைட் அடிச்சத அவன் எப்டி  நேருக்கு நேரா கேட்கலாம்?’

வாய்விட்டு சிரித்தவன்,  கோபம் போல் விலுக்கென விலகி நிற்க முயன்ற இவள் தடுமாறுவதைக் கண்டு, அவசரமாக அவள் கையை பற்றினான். “என் மேல கோபமா குட்டிப் பொண்ணு…. சாரி…”

“சண்ட பாறைல வச்சு சண்டதான் போடனும்…. ” வெடுக்கென அவன் கையை தட்டிவிட்டவள் அடுத்த பாறைக்கு மாறினாள்….

“ஹேய் இதென்ன சண்ட பாற…. எப்பவுமே அபை எங்க ரெண்டு பேருக்கும் விட்டு கொடுத்துடுவான்…. அந்த வகையில் இது சமாதான பாறை…..சின்னவங்க விட்டு கொடுத்துப் போற இடம்… அப்டின்னா உன் லாஜிக்படி நீ எனக்கு விட்டுக் கொடுத்து போகனும்”  அந்த விட்டுக் கொடுத்துப் போகனுமை பூவோடு உரசும் காற்றைப் போல் அவன் சொன்ன விதத்தில் அதன் அர்த்தம் அடுத்த அவதாரம் எடுக்க…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மன முடிச்சு... εїз...!

படிக்க தவறாதீர்கள்...

இப்போது திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள் வினி. ‘எதுல இருந்து இவன் எங்க தாவுறான்…அதுவும் இப்டி இல்லாத லாஜிக்க சொல்லி…..?’

“எந்த வீட்ல கடைசி குழந்த விட்டு கொடுத்துப் போறாங்களாம்? உங்க மூனு பேர்ல அதி அத்தான்தான் விட்டுக் கொடுத்து போற ஆளா இருக்கும்……” அவள் ஆர்க்யூமென்டுக்கு தயாரானாள்.

“நிஜமா வினு….. நானும் அதியும் ஸ்கூலிங் ஹஸ்ட்டல்ல இருந்து படிச்சோம்….. 6த் ல இருந்து கொடைக்கனல்…… ஆனா அபை மட்டும் அம்மா அப்பா கூட வீட்ல இருந்து தூத்துகுடி போய்ட்டு வருவான்…… சோ நாங்க வீட்டுக்கு வர்றப்ப அவன் எப்பவும் எல்லாத்துலயும் எங்களுக்கு விட்டு கொடுத்துடுவான்….”

ஆச்சர்யமாய்  பார்த்தாள் வினி…

“அதி பிறக்கப்ப அம்மாவுக்கு வயசு 47….அடுத்தடுத்த வருஷம் நானும் அபையும்…...லேட் ஏஜ்ன்றதால அம்மா அப்பாக்கு  மூனு பேரையும் பார்க்க ரொம்பவே சேலஞ்சிங்கா இருந்திருக்கும்….. அதோட உள்ளூர்ல 5த்க்கு மேல ஸ்கூலும் கிடையாது….

சோ நானும் அதியும் ஹாஃஸ்டல் போய் ஒரு மாதிரி செட்லாகிட்டோம்…..பட் அபை 6த் வர்றப்ப ஹாஸ்டல் வர மாட்டேன்னு ரொம்ப அழுது ஃபீவராகி……அம்மா அப்பா அவனை டேஸ்காலரா தூத்துகுடி அனுப்புனாங்க…

அவனுக்கு எப்டி புரிஞ்சுதோ…..அதனால நாங்க எப்ப வீட்டுக்கு வந்தாலும் எங்களுக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்வான் அப்பவே….. அப்றம் அதுவே பழகிட்டோ என்னவோ….. நீ கவனிச்சுப் பார்த்தா உனக்கே தெரியும்…. இப்பவரை அவன் எங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்னு ரொம்ப கவனிச்சு செய்வான்…. பொதுவா ரொம்ப கேரிங்க் நேச்சர்ட் அவன்….. “

பேச்சை ஒரு கணம் நிறுத்தியவன் “நம்பி நீ பவிஷ்யாவுக்கு அவனை அப்ரூவ் செய்தது தப்பே இல்ல……பவியையும் சரி அவங்க வீட்டையும் சரி நல்லாவே பார்த்துப்பான்….” என முடித்தான்.

ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது நிலவினிக்கு….. இத இவன்ட்ட சொன்னது யாரு…? இவளா வந்து இவன்ட்ட சொல்லலைனு இருக்கும்தானே….

“ சா…சாரி யவி…” திக்கினாள் இவள். “உங்கட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல….” அடுத்து அதை எப்படி தொடர என தெரியாமல் விழித்தவள்…… “அப்போ உங்க மேல….உங்கள நான் சரியா புருஞ்சுகலை இல்லையா…. அதான் இதெல்லாம் பேச முடியலை…. சாரி…” அவன் முகத்தை அதிலிருந்த அவன் கண்களை பார்த்து திக்கி திக்கி அவள்….

“ஹேய் நான் ஒன்னும் தப்பாவே நினைக்கல…. என் மேல நல்ல ஒபீனியன் இல்லாதப்பகூட அபைய நீ அதுக்காக வேண்டாம்னு சொல்லலையே….. அவனை புரிஞ்சுகிடதான செய்த…..நீ வேண்டாம்ன்னு சொன்னது பவி அப்பாக்காகதான….  நீயும் அபையும் பேசிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு“ அவன் விளக்க

இப்பொழுது இன்னுமாய் சுண்டுகிறது இவள் முகம்….. இவன் தம்பியை வரை புரிந்து கொண்டவள் இவனை தப்பாக நினைத்தாளே என்றாகிறது தானே…. அது இவனுக்கு எப்படி இருக்கும்….? எந்த ஒரு ஆணுக்கும் தன் மனைவிக்கு தன்னை தாண்டிதான் மற்ற எவரும் எதுவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் தானே…. ஏன் இவளுக்கே யவிக்கு இவள்தான் முதலும் முக்கியமுமான நபராக இருக்க வேண்டும் என்று உண்டுதானே…..

“ வெரி சாரி யவிப்பா….” இப்போது பரிதவிப்பாய் அவன் கைகளை பற்றியவள்   “அபைய புரிஞ்சுகிட்டு உங்கள புரியலைனு…..” என வெகு கெஞ்சலாக தொடங்க அடுத்து இவள் எதுவும் சொல்லும் முன் “லூசு” என்றபடி இழுத்து சேர்த்திருந்தான் அவன் தன்னோடு…..

“நான் என்ன சொல்றேன்…...நீ என்ன நினைக்கிற…. அதோட  தப்பு என் பக்கமும்தானே…… வெட்டிங் வேண்டாம்னு என்ட்ட வந்து நேரடியா நீ சொன்ன பிறகும் உனக்கு நான் ஹெல்ப் பண்ணலை…. மேரேஜ் ப்ரபோசலை ப்ரொசீட் பண்ணத்தான செய்தேன்….” அவன் என்ன சொல்ல வந்தானோ

வெடுக்கென அவனிடமிருந்து உருவிக் கொண்டு வந்து அவனுக்காக அவனிடமே லாயரானது வினி “அதெல்லாம் பெரியத்தான் இருக்கப்ப நீங்க செய்றீங்கன்னா…..வீட்ல சிச்சுவேஷன் அப்டி இருந்திருக்கும்….அதோட உனக்கு இஷ்டம் இல்லைனு நீ சொல்லுன்னு தான சொன்னீங்க என்னை கம்பெல் செய்யலையே….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.