03. அனு என் அனுராதா - VJ G
சுந்தரத்தின் அருகே அவர்கள் எல்லோரும் போனார்கள் ஆனால் அனு மட்டும் ரூம் உள்ளேயே இருந்தாள். அனுவின் தந்தை சந்திரசேகர், அவள் அண்ணன் வெங்கடேசன் அவன் மனைவி அனுவின் அம்மா எல்லோரும் “அப்போ நாங்க கிளம்புகிறோம் மாப்பிள்ளை” என்றார்கள் .
சுந்தரம், “என்னை யாரும் தவறாக எடுத்துகொள்ளக் கூடாது எனக்கும் அவளுக்கும் கொஞ்சம் தனியாக இருந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிந்துகொள்ளலாம் என்றுதான்” என்று கூறி “மறுபடியும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் , உங்களுக்கு உங்க பெண்ணை தனியாக விட்டு செல்ல எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்” என்றான்
“இல்லை மாப்பிள்ளை அப்படியெல்லாம் இல்லை அனுவே நான் அவர் பெண்டாட்டிப்பா அவர் என்னை நல்ல பார்த்துப்பார் கவலைபடாதீர்கள் என்றாள்" என்றார் அனுவின் அப்பா
சுந்தரத்திற்கோ ஒரே சந்தோசம் என் அனு என்னை புரிந்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
“ஆ! கொஞ்சம் இருங்க” என்று, “அனு இங்கே வா” என்றார். அனு அங்கு வந்தாள், வந்தவளை உள்ளே வெத்திலை பாக்கு தட்டு இருக்கு கொண்டு வா” என்றான், தன் ரூமுக்கு கொண்டு வா என்று சொல்லி அங்கு அனுவின் அப்பாவிற்கும் அவர் அம்மாவிற்கும் செயினும் புடவையும் அவர்கள் அண்ணனுக்கும் அண்ணிக்கும் அதே மாதிரி பட்டு புடவையும் செயினும் வைத்துக் கொடுக்கச் சொன்னார் சுந்தரம். அவர்களும் “என்ன மாப்பிள்ளை இவ்வளவு எதற்கு” என்றார்கள்.
அதற்கு “அவர் இந்த தேவதை என் வீட்டிற்கு வந்த இந்த நாளுக்காகவும், இந்த தேவதையை எனக்கு கல்யாணம் செய்து வைத்ததுக்காகவும் நீங்கள் இதை வாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்” என்றார் சுந்தரம்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
அதை கேட்ட சந்திரசேகர் “இந்த சின்ன வயதில் நீங்கள் எப்படி இவ்வளவு யோசித்து ஒவ்வொன்றும் செய்கிறீர்கள்” என்றார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா எனக்கு யார் இருக்கா நீங்கள்தான் இனி என் உறவு, அனுக்கு மட்டுமில்லை எனக்கும் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி எல்லாம் நீங்கள்தான்”.என்றார். அதைக் கேட்ட ஜானகிக்கு கண்கள் பனித்துவிட்டன. அவர்கள் வெத்திலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினர் அவர்கள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு அனுவின் அம்மா மறுபடியும் அறிவுரை சொன்னாள், அனுவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது அதைக் கண்ட சுந்தரம் அவள் அருகில் சென்று அவள் தோள் மேல் தன் கையை வைத்து அழுத்தி அப்படியே தன்னோடு அணைத்துக்கொண்டான்.
அவருடைய கை தன் தோளை தொட்டு அணைத்தவுடன் அவளுக்கு உடம்பு முழுவதும் நடுங்கியது, அவள் பெற்றோரை நிமிர்ந்து பார்க்கவே வெட்கப்பட்டாள், அவளால் அவர்களிடமும் ஒன்றும் பேசமுடியவில்லை " இவர் என்ன தன் மேல் கையை போட்டுகொண்டு இவ்வளவு கூலாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று வெட்கபட்டாள்.
அவர்களுக்கு புரிந்தது இனிமேல் நம்ம இங்கே அவங்களுக்கு தொந்தரவாய் இருக்ககூடாது” நாங்கள் போய் வருகிறோம்” என்று கிளம்பிவிட்டார்கள்.
டிரைவரிடம் “அவர்களை வீட்டில் விட்டு விட்டு வந்து விடு என்னை டிஸ்டர்ப் செய்யாதே” என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றவுடன் கதவைப் பூட்டிக்கொண்டு அப்போதும் அவளை தன் பிடியிலிருந்து விடாமல் வைத்துக்கொண்டே கதவை பூட்டியவுடன் அவளை கண் சிமிட்டக்கூட மறந்து அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தரம்
அந்த பார்வையில் அவள் உடம்பு முழுவதும் நடுக்கம் கொண்டு அவள் வேதனையில் தொய்ய, அவளுக்கு பேச்சே வரவில்லை வெட்கத்தில் கண்ணை மூடிக்கொண்டு அந்த இன்ப வேதனையை அனுபவித்தாள்
நிலைமையை புரிந்து கொண்ட சுந்தரம் அவன் பார்வையை அகற்றாமல் அப்படியே அவளை அள்ளி தூக்கிக்கொண்டு தங்கள் பெட் ரூமுக்கு போனான்.
சுந்தரம் தன் கட்டிலில் உட்கார்ந்து மெதுவாக சாய்ந்து கொண்டான் ஆனால் அப்பொழுதும் அவளை கீழே இறக்கிவிடாமல் தன் மேலே அப்படியே சாய்த்துக்கொண்டான். அவளுக்கோ மூச்சே வரவில்லை இதயமே நின்றுவிட்டது போல் இருந்தது.
சுந்தரமோ "கண்ணை திற அனு என்னைப் பார் "என்றான், ஆனால் அவளோ "நான் மாட்டேன்” என்றாள்.
“ஏன் என்னைப் பார்க்க பிடிக்கவில்லைய நான் எவ்வளவு ஆவலா காத்திருந்தேன் தெரியுமா இந்த நேரத்துக்காக” என்றான்.
“இல்லை அப்படியெல்லாம் இல்லை, நீங்கள் இப்படி என்னை கீழே இறக்கிவிடாமல் இருந்தால் நான் எப்படி கண்ணை திறக்க முடியும் எனக்கு வெட்கமாக இருக்கு” என்றாள்
“அனு இனி நீயும் நானும் வேறே இல்லடி கண்ணை திறந்து பாரு”.
“உன்ன பார்த்ததிலிருந்து நான் இப்படி உன்னை என் கையிலே வைச்சு கொஞ்சவேனும் என்று எவ்வளவு ஆவலா இருந்தேன் தெரியுமா.. அதுக்கு இப்படி தடை போடற முதல்லே கண்ணை திற கண்ணம்மா” என்றான் சுந்தரம்
அந்த வார்த்தையைக் கேட்டு மனம் பாகாய் உருகியது அனுவிற்கு என் மேல் இவருக்குத்தான் எவ்வளவு ஆசை என்று நினைத்தவள் இனி இவர் ஆசையை நிறைவேற்றவேண்டும்.