(Reading time: 10 - 20 minutes)

ன் கண்ணை திறந்து அவனைப் பார்த்தாள் அவனோ அவள் பார்த்த பார்வையில் தன்னையே மறந்து அவைளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

அவள் உடம்பு அந்த அழுத்தத்தில் வலித்தாலும் ஒரு விதமான இன்ப வேதைனையாகவே இருந்தது.

சுந்தரம் தன் இதழை அவளது கன்னத்தில் பதித்தான். அவள் முகம் செவ்வானமாகியது, அதை அவள் உணர்ந்தாள்.

 அவன் விடாமல்,அவளது முகம் முழுவதும் தன் இதழை பதித்த சுந்தரம் அவள் இதழ் தேடி தன் இதழால் மூடினான்,அவளுக்கோ உடம்பில் மின்சாரம் பாய்ந்தது, அவள் உடம்பில் சக்தியே இல்லை.

அடுத்து அவன், அவள் உடம்பில் தன் கையை தவழவிட்டான். இவள் தன் மனைவி, என்னுடையவள் என்ற என்னம் அவனை இன்னும் உத்வேகத்துடன் அவளை முழுவதுமாக ஆட்கொள்ள வைத்தது.

அவளும் இவன் என் கணவன், என் மேல் மிகுந்த ஆசை வைத்திருப்பவன் இவன் என்ன ஆசை பட்டாலும் கொடுக்க வேண்டுமென்று அவனுடன் ஒத்துழைத்தாள். அவர்களுக்கு அது முதல் இரவு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அந்த முதலிரவில் இருவரும் ஒருவருகொருவர் தங்களது தேவையை கொடுப்பதும், எடுபதுமாக பூர்த்தி செய்துக்கொண்டனர். அந்த இரவு சுந்தரம் தன் மனைவியை தன் கை அனைப்பிலேயே வைத்துக்கொண்டான். 

அவர்கள் தூங்கும்போது விடிகாலை ஆகிவிட்டது ... 

சுந்தரத்திற்கு ஆறு மணிக்கே விழுப்பு வந்து விட்டது தன் அனைப்பில் இருந்த தன் மனைவியை பார்த்தான் எவ்வளவு அழகாய் இருக்கிறாள் இவள், நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவன் என்று நினைத்துகொண்டே அவள் தூக்கம் கலைக்காமல் அவள் கையை தன் மீதிருந்து எடுத்து மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்து வெளியே வந்தான்.

அனுவிற்கு அப்போதுதான் விழிப்பு தட்டியது…

காலையில் அவள் எழுந்திருக்கும் போது தன் கணவனை அருகில் காணவில்லை. ரூமில் கட்டிலுக்கு அருகில் இருந்த மணிக்கட்டில் மணியைப் பார்த்தாள் மணி ஏழாகி இருந்தது. அவசர அவசரமாக எழுந்து உடனடியாக குளித்து நல்ல அரக்கு கலர் மைசூர் சில்க் புடவையும் அதற்கு மேட்ச்சான ப்ளவுஸ் போட்டு அதே கலர் நெக்லஸ்ம் வளையலும் போட்டு தலை குளித்திருந்ததால் அதை அப்படியே லூசாக விட்டு தன் கணவனைக் காண வெளியே வந்தாள்.

அங்கே அவன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

அவனோ காலடியோசை கேட்டு திரும்பி பார்கையில் தன் மனைவி அன்று பூத்த புது ரோஜாவை போல் அழாகாக வந்துக் கொண்டிருந்தாள், அவளை ரசித்தவண்ணம்,அவன் மனசுக்குள் தன்னையே திட்டிக்கொண்டான் எப்படி அவள் எழுந்திருக்கும் போது ரூமுள்ளே இல்லாமல் மிஸ் பண்ணிட்டயேடா... என்று நினைத்துகொண்டிருந்த போது 

அவன் தன்னை பார்க்கிற பார்வையில் உள்ளர்த்தம் அவளுக்கு புரிந்துவிட அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.

அதை கண்ட சுந்தரதிற்கோ உடலில் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. அனு, அவன் அருகில் வந்தாள்

 "வா அனு, குட் மார்னிங்! " என்றான் சுந்தரம் 

அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவாறு.

அவளோ அந்த தொடுகையில் தன் வசம் இழந்துக் கொண்டிருந்தாள்.

"என்ன அப்படி பார்கிறீங்க" என்றாள் அனு. 

அவள் கையை தான் தொட்டவுடன் அவளை தன் மேல் இருத்தி அவளை முத்தமிடும் ஆசை தூண்ட அதை நிறைவேற்றும் பொருட்டு அவளை இழுத்து தன் மடி மேல் உட்கார்தி வைத்துக் கொண்டான் அவள் கணவன்.

அவளோ வெட்கமும் பயமும் சூழ "ஐயோ விடுங்கள் யாரவது பார்க்கப் போகிறார்கள்" என்றாள். "பார்க்கட்டுமே என் பொண்டடியை நான் என் வீட்டில் எங்கே வேணும்னாலும் கொஞ்சுவேன், அவங்க வேணா அவங்க கண்ணை மூடிக்கொண்டு போகட்டும்" என்றான்..

அவளைக் கொஞ்ச நேரம் கொஞ்சினான் முத்தம் கொடுத்தான்.

சிறுது நேரத்தில் லோகாம்பிகை காபி எடுத்துக்கொண்டு அங்கே வந்தாள் " ஐயா அம்மாவுக்கு காபி" என்றாள்..

அதுவரை அவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை.

குரல் கேட்டவுடன், அவள் அவன் மேலிருந்து இறங்க போனாள், ஆனால், அவனோ அவளை உடும்பு பிடியாய் பிடுதிருந்தான்.

"சரி, அங்கே காபி டேபிளில் வைத்துவிட்டு நீ போ" என்றான் சுந்தரம்.

அவள் சென்றவுடன் "என்ன நீங்க அவள் வந்தவுடன் கூட என்னை இறக்கிவிடாமல் கெட்டியாக பிடித்து வைத்திருகிறீர்களே" என்றாள் அனு. 

அது இல்லடி அவதான் வந்து விட்டாளே அவள் எதிரில் நீ இறங்கினால் என்னவோ அவளுக்கு பயந்து மரியாதை கொடுத்து இறங்கினால் போல இருக்கும். நீ இந்த வீட்டு எஜமானிடி அதனாலே தான் நான் உன்னை இறக்கி விடவில்லை " என்றான் அவளின் புது கணவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.