10. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ
“அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்”
விஜியுடன் கல்யாண ஏற்பாடுகள் பற்றி போனில் பேசிக் கொண்டிருந்த ராஜி பாடல் சத்தத்தை கேட்டு,என்ன அண்ணி நம்ம மகியா பாடுறது??
ஆமா அண்ணி அவ தான் ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கா,..
ஓ சரி சரி ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க என்றவாறே வெளியில் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ராமின் காதில் வைத்தார்..திடீரென்று கேட்ட பாடலில் குழம்பியவனுக்கு தன்னவளின் குரல் என்றதும் தானகவே புன்னகை அரும்பியது..கேட்டு மெய் மறந்து நின்றவன் விஜியின் குரலில் நிஜவுலகிற்கு வந்தான்..அவசரமாக தாயிடம் போனை கொடுத்துவிட்டு அவர் கன்னத்தில் இதழ்பதித்து,தேங்கஸ் மை டியர் ராஜி என்றவாறு தன் அறையை நோக்கி ஓடினான்..மகியிடம் பேசுவதற்காக…
ஹே குட்மார்னிங் ராம் உங்களைதான் நினைச்சுட்டு இருந்தேன் கால் பண்ணிட்டீங்க..
ம்ம்ம் எனக்கும் அந்திபகல் உன்னோடவே இருக்கனும்நு தான் ஆசை எங்க விடமாட்றாங்களே குட்டிமா என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு..
நா என்ன சொல்றேன் நீங்க என்ன பேசுறீங்க எனக்கு ஒண்ணும் புரில..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
அதே பாடலை இரண்டு வரி பாடியவன்..பாட்டெல்லாம் நல்லாதான் பாடுற பக்கத்துல இருந்தாதான் கண்டுக்கவே மாட்ற மகி நீ,
ஏதோ புரிந்தவளாய்..ராம் உங்களுக்கு எப்படி தெரியும் நா பாடினது??உங்க டிடெக்டிவ் மூளையை என்ட்டயே யூஸ் பண்ணிருக்கீங்களா??
ஹே ச்சச்ச ஆனாலும் ரொம்ப யோசிக்குற நீ..அம்மா ஆன்ட்டியோட பேசிட்டு இருந்தாங்க அப்போ கேட்டேன்..
ம்ம்ம் ராஜிம்மா உங்களை நல்லா கெடுத்து வச்சுருகாங்க..அது சரி சார் எப்போயிருந்து லீவ் போட்ற ஐடியால இருக்கீங்க??நெக்ஸ்ட் வீக் கலல்யாணம் நியாபகம் இருக்கா??
என்னடா இப்படி கேட்டுட்ட நீ எப்போ போடனும்நு சொல்லு போட்ருவோம்..அம்மா த்ரீ டேஸ் முன்னாடி என் அவைலப்லிட்டி இருந்தா போதும்நு சொன்னாங்க அதான் கேஸ் விஷயமா அலைஞ்சுட்டு இருக்கேன்..உனக்கு யாரையும் இன்வைட் பண்ண போனுமா சொல்லு ப்ரீ ஆய்ட்றேன்..
அதெல்லாம் இல்லப்பா..பட் மெஹந்தி போட்டுக்க போணும் நீங்க என் பக்கத்துல இருந்தா நல்லாயிருக்கும்நு தோணிச்சு இங்க பக்கத்துலயே ஷாப் இருக்கு ஹாவ் டேயாவது ஆகும்,நீங்க எப்போ ப்ரீநு சொல்லுங்க..போலாம்..
அதுலா வீட்ல வச்சுதான பண்ணுவாங்க எதுக்கு ஷாப்க்கு போனும்..
அது நார்த்ல தான் ராம் அப்படி பண்ணுவாங்க நம்மக்கு அதெல்லாம் பெரிய ஈவன்ட் இல்ல..
இதுவரையில்லைனா என்ன இனி பெருசாக்கிடுவோம்..சரி நீ எப்போயிருந்து லீவ்?
நாளை மறுநாள் இருந்து,எதுக்கு கேக்குறீங்க..
ஓ.கே அப்போ அன்னைக்கு உனக்கு மெஹந்தி போட்றோம் பஸ்ட் நா தான் போட்றேன்..
ராம் உங்களுக்கு மெஹந்திலா போட தெரியுமா??
பாக்கதான போற..சரிடா நீ ஆபீஸ் கிளம்பு ஈவ்னிங் உனக்கு நா அப்டேட் பண்றேன்..