"ஓ இனி அப்போ தேவியின் தரிசனம் தினம் கிடைக்கும்..." என்று மனதில் நினைத்து சந்தோஷப்பட்டான் சஞ்சய்..
"ஆன்ட்டி அப்புறம் நான் லாஸ்ட் டைம் வந்தப்போ ஊருக்குப் போகனும்னு சொன்னீங்களே.. போய்ட்டு வந்தீங்களா..??" என்று கேட்டாள் நீரஜா..
ஆறிய வடையை மிளகாய் எல்லாம் இருக்கா என்று பார்த்து அம்பிகா ஜெய்யிடம் கொடுக்க அதை அவன் வாங்கிக் கொண்டு திரும்ப விளையாட செல்ல.. "போய்ட்டு வந்தேம்மா நிரு... ஆனால் ஏன் போனோம்னு இருக்கு..." என்றார்.
"ஏன் ஆன்ட்டி என்னாச்சு... "
"போன இடத்துல என் தம்பி பொண்ணை பொண்ணு கேட்டு ஒரு வரன் வந்துச்சு... என் தம்பி என்ன சொல்றான்னா.. சொந்தத்துல மாப்பிள்ளை இருக்க ஏன்க்கா அசல்ல கொடுக்கனும்... உன் வீட்டு மருமகளா என் பொண்ணு வரனும்னு ஆச
...
This story is now available on Chillzee KiMo.
...
டிட்டு வரேன்..." என்று சஞ்சய் வெளியே சென்றான்...
அவன் போனதும் " கவலைப்படாதீங்க ஆன்ட்டி நிக்கிக்கிட்ட சொல்லி பாஸ்கிட்ட கல்யாணம் பத்தி பேசச் சொல்றேன்... சீக்கிரமே உங்கக் கூட சண்டை போட ஒரு ஆள் வந்துருவாங்க... அப்புறம் உங்களுக்கு ஜாலியா டைம் பாஸ் ஆகும்.." என்றாள்... அம்பிகாவோ சிரித்தார்..