இவர்கள் பிரின்ட் ஷில்பா ஒரு ஆங்கிலோ இந்தியன் அதனால் அவள் உடுத்தும் உடை எப்பொழுதும் மோர்டென் ஆக தான் இருக்கும் .... அன்று அவள் ஒரு கவுன் அனைத்து இருந்தாள் ..
சுரேஷ் காங் கடந்துபோகும்போது ரொம்ப மோசமான பாடல்களைப்பாடி கிண்டல் செய்ய .... சிவாவுக்கு ரொம்ப கோவம் வந்து..
டேய் நீங்கல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலை ஏண்டா இப்படி மோசமா இருக்கீங்க ... குடிச்சி குடிச்சி உங்க உடம்பு நாசமபோகுது இதுல ஏன் பொண்ணுங்கள பத்தி தப்பு தப்ப பேசுறீங்க ..
மச்சி பட்சி ரொம்ப துள்ளுது உடம்பு சும்மா நல்லா ரம்பா மாதிரி இருக்கு ..
மச்சி அப்போ ரம்பா மாதிரி தொடை கூட அழகா என கேட்க ...
பாத்துட்டா போச்சி என இவள் அருகில் நெருங்கினான் அவர்கள் கேவலமாக பாடியதுடன் இப்படி பேசியதும் அவன் நெருங்கி வரவும் கோவத்தில் சிவா சில்பாவை பின் இழுத்துக்கொண்டு முன்னே வந்து அவனை அறைந்து விட்டாள்
அவன் சிவாவின் துப்பட்டாவை இழுத்து அவளை அவன் அருகில் கொண்டு வந்து விட முயன்றான் .... இவள் துப்பட்டாவை பின் செய்திருக்க அது இழுபட்டு இவள் தோள்பட்டையில் கிழித்துவிட்டது ... துப்பட்டா அவன் கைகளுக்கு போய்விட்டது .... அவன் தன் நண்பர்களை பார்த்து சிரித்துக்கொண்டு .. இவள் சுடிதாரின் இடது கை கழுத்துப்பக்கம் கைவைத்து இழுக்க இவள் காட்டன் டாப்ஸ் அவன் இழுப்புக்கு ஈடு கொடுத்து கிழிந்து கொண்டு போனது
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
அவன் ஆள் ரொம்ப ஒல்லி சிவா நல்ல திடகாத்திரமான பெண்தான் ஆனால் போதையின் ஆதிக்கத்தில் இருந்த அவனை தடுக்கும் சக்தி இவள் உடம்பில் இல்லாமல் போனது ..
அவன் இவள் கைகளை பிடித்து தான் பக்கம் இழுக்க இவள் தோழிகள் ஓடுவதற்கு தயாராகஇருந்தார்கள் ... அவன் நண்பர்களோ கை தட்டி சிரித்தார்கள் ..
அவன் அசந்த ஒரு சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவள் அவனை தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தாள் ...
அவன் அவளை துரத்தி கொண்டு போக இவள் தோழிகள் கிரௌண்ட் நோக்கி போனார்கள் ... அங்கே ரவி மட்டுறும் நண்பர்கள் விளையாடிக்கொண்டிருக்க இவர்கள் அவனிடம் போய் நடந்ததை கூறினார்கள் ..
அவன் இவள் ஓடிய திசை நோக்கி ஓடத்துவங்கினான் ..கூடவே இரு நண்பர்களும் அவனைத்தொடர மீதி இருந்தவர்களும் இவள்தோழிகளும் பிரின்சிபால் ஆஃபீஸ் நோக்கி சென்றார்கள்.....
அங்கே சிவாவிற்கு மூச்சு வாங்கியது என்னதான் நல்ல உடற்கட்டுடன் இருந்தாலும் எதிர்பாராத அதிர்ச்சி மற்றும் அவன்கையில் மாட்டினால் என்ன ஆகும் என்ற பயமும் ஒன்றுகூட கால்கள் பின்னிக்கொண்டன ...
அந்த நேரத்தில் ஆட்கள் அந்த பக்கம் இருப்பது மிக அரிது அதனால் சத்தம் போட்டாலும் கேட்காது மேலும் சத்தம் போட்டு தான் இருக்கும் இடத்தை சுரேஷிடம் கட்டிக்கொடுக்கவும் அவள் விரும்ப வில்லை ..
அதே நிலைமையில் தான் ரவியும் இருந்தான் அவன் அங்கு இருப்பதை வெளிக்காட்டவும் முடியாது ஏன்னென்றால் சுரேஷ் போதையின் ஆதிக்கத்தில் உள்ளவன் அவனிடம் கொஞ்சம் கூட மனிதத்தன்மை எதிர் பார்க்க முடியாது ...
ஒரு விஷயம். இங்கு 100% சரியான நபர் என்று யாரும் இல்லவே இல்லை. நீங்கள், நான், என எல்லோருக்கும் அடிப்படையில், மனதின் ஆழத்தில் சிறியதாகவும் பெரியதாகவும் சில முரண்பாடுகள் இருக்கும். இது இயல்பு. இதைத்தான் நாம் முன்கோபி, உணர்வுபூர்வமானவர், குழந்தை மாதிரி, அப்பாவி, முரடன், ஜொள்ளு பார்ட்டி என்று பலவிதமாக அழைக்கிறோம். அவரவரின் தன்மையைப் பொறுத்து இந்த உணர்ச்சிகளின் அளவு மாறலாம். இதுபோன்ற நடத்தைக் கோளாறுகளும், ஏன் மோசமான பாதிப்பான ‘இருதுருவ மனநிலைக் கோளாறு’ (Bipolar mental disorder) போன்றவையும்கூட ஒரு மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும். இப்படி ஒருவரின் ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் உளவியல் கோளாறுகளை உலுக்கி எழுப்பிவிடும் தன்மை மதுவுக்கு உண்டு.
ஒருவரின் மூளைக்குள் மது சென்றவுடன் அது, ‘டெட்ராஹைட்ரோஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது மொத்த மூளையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்கிறது. ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அல்லது அவசரமாகக் குறைந்த நிமிடங்களில் ஒரே மூச்சாக அதிக அளவு மது அருந்துவதால் மிதமிஞ்சிய போதை ஏற்படுகிறது.