அந்த அயற்சியில் தான் அவள் விளக்குகூட போடாமல் தூங்கியதே ... இதை எப்படி ரஞ்சியிடம் சொல்வதென்றும் தெரியவில்லை சொல்லாமலும் இருக்க முடியாது ஏனனென்றால் போலீஸ் ஸ்டேஷன் ரஞ்சியும் வரவேண்டும் ....
நடந்த நிகழ்வின் அதிர்ச்சியும் பயமும் சேர்ந்தே சிவாவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது ..
அந்த ஒருவாரம் ரஞ்சியின் கவனிப்பில் சிவா தெளிந்துவிட்டால் ... தயங்கி தயங்கி ஒருவாறு உண்மையை கூறினாள் ..
கேட்ட ரஞ்சிக்கோ தலை சுற்றியது .. தன் தங்கை எவ்ளோளவு பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறரால் என என்னும் போதே ஈரக்குலை நடுங்கியது ..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
ஒருவாறாக சங்கீயின் கணவரை அழைத்து சென்று போலீஸ் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது வாரம் ஒன்று காணாமல் போனது ....
ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என சந்தோஷமாக வெளியிலேயே உணவை முடித்துக்கொண்டு ... வண்டி வண்டியாய் சிவாவிற்கு அறிவுரை கூறிவிட்டு தூங்க வந்தாள் ..
இருந்த பிரச்சனையில் விக்கிரமின் நினைவு மட்டும் அகலவில்லை ... அவன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அவன் சூழ்நிலைகளை கையாளும் விதமே மிக நேர்த்தியாக இருக்கும் ..
திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விசயம்தான்...
இந்த சுகத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து பொறாமை கொண்ட விதி அதை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டது ...
நேரமின்மையால் ரஞ்சி விக்ரமின் பிரத்யோகமான காதல் காவியம் அடுத்தபகுதியில் உங்களுக்காக ..
தொடரும்
{kunena_discuss:997}