(Reading time: 18 - 35 minutes)

03. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

"பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும், நாடும் இயங்க முடியாதிருக்கும். அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகிறாள்."

சிவா குழந்தைபோல் சோபாவில் படுத்து தூங்கி கொண்டு இருந்தாள் ... அவள் தூங்கிகொண்டு இருப்பதை பார்த்தவுடன் மனதில் ஒருவித நிம்மதியும் அதே நேரம் தான் பயத்துடன் கழித்த நிமிடங்களை நினைக்கும் போது அதீத கோபமும் வந்தது ஆனால் குழந்தை போல் நிர்மூலமான முகத்துடன் தூங்கும் அவளை பார்த்தவுடன் ...

பொங்கிவரும் கங்கையாய் ஒரு இதமான சந்தோசம் இவள் கோவத்தை அனைத்தது ...

வீட்டில் லைட் போட்டுவிட்டு சிவாவை எழுப்ப மனம் இல்லாமல் இவள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பார்த்தாள் ..

சிவாவுக்கு பிடித்த ரவா கிச்சடியும் தேங்காய் துவையலும் செய்தாள் .. துணிகளை துவைத்து மொட்டைமாடியில் காயவைத்துவிட்டு கீழே வந்த போதும் சிவா தூங்கிக்கொண்டே இருந்தாள்.

இவள் மெதுவாக சிவாவை எழுப்ப எழுந்தவள்  மலங்க மலங்க விழித்தால் .... 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

ஏய் சிவா என்ன ஆச்சு ஏன் இப்படி முழிக்கிற இந்த மாதிரியா தூங்குவாங்க ???? நான் வந்ததுகூட உனக்கு தெரியவில்லை .. என்ன ஆச்சுடா என தலையில் கை வைத்து பார்த்தாள் .. தலை கூட சுடலையே ???

சிவா பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் 

சரி நீ ப்ரஷ் ஆகிட்டு வா நான் டிபன் எடுத்துவைக்கிறேன் ..

சிவா எழுந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் ..

சிவா வந்த உடன் இருவரும் டிவி பார்த்துக்கொண்டே உணவு உண்டார்கள் .. சிவா எப்பொழுதும் தொனதொனப்பவள் ...அமைதியாக சாப்பிட்டால் ... ரஞ்சிக்கும் தான் இன்று இருந்த மன நிலையில் எதுவும் பேச தோனவில்லை ..

சாப்பிட்டவுடன் தூக்கம் வருகிறது என்று சிவா சென்றுவிட  இவள் டிவி பார்ப்பதை தொடர்ந்தாள் ..

ஆனால்  அன்று அவளை நிறுத்தி பேசி இருந்தாள் இன்று இப்படி தவிக்க வேண்டியது இல்லை என அவள் நினைத்து நினைத்து மருகுவாள் என்று இப்போது அறியவில்லை .. 

டிவிஇல் செல்லமே படத்தின் பாடல் ஓடியது 

நினைவு பின்னோக்கி சென்றது ..

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான் உன்னை நான் முன்னாள்

என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி திதிதாய்

சந்திர சூரியர் எழுகையிலே

உன் முக ஜாடைகள் தெரிகிறதே

பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே

சரிகிறதே ........ விரிகிறதே ........

அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ

 நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ

ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)

உன் முகம் கொண்ட பருவினிலும்

வின் மீன் ஒலிகள் வீசுதடி

கோபம் வழியும் வேளையிலும்

இதயம் கண்ணில் மின்னுதடி

மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............

எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்

அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்

உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே 

அவன் விக்ரமன் இவளை பார்த்து கூறியதும் இதுவே ... 

ரஞ்சி உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு .. நான் பார்த்த முதல் பொண்ணு நீனு சொல்ல மாட்டேன் என் கூட படிச்சவங்களையும் .. ஏன் உறவுகார பொண்ணுங்களையும் நான் பார்த்து பழகி இருக்கேன் ... பட் உன்னை பார்த்ததும் ஏன் மனசில நீ பதிஞ்சு போய்ட .. கட்டினா இவளைத்தான் கட்டணும்னு முடிவு எடுத்திட்டேன் ...

அவன் கூறிய வார்த்தைகள் இன்றும் அடிநாக்கில் தித்திகின்றன ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.