காதலென்பது யாரோ ஒரு பெண்ணை காதலிப்பது மட்டுமல்ல, அவளின் அழகினை, அவளின் அவலட்சணத்தை, அவளின் சூழலை, அவளின் கோபத்தை, அவளிடம் பிடித்ததை, பிடிக்காததை என்று அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்கும் யாவற்றையும் உள்வாங்கி நேசிப்பது. பேசினாலும், பேசாவிட்டாலும், கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மனக்கிளர்ச்சியைக் கொடுப்பவளாய் அவள் இருப்பாளாயின் அவளை விட்டு விடாதே...அவளை தொடர்ந்து கொண்டே இரு. தூர நின்றாவது அவளை விழிகளால் விழுங்கிக் கொண்டே இரு. நல்ல கவிதைகள் எல்லாம் வாசித்து கிரகித்து அந்த உணர்வில் ஊறிப்போய் திளைத்து,எப்படி மயங்கிக் கிடக்க வைக்கிறதோ அப்படித்தான் ஒரு பெண்ணோடான காதலும் இருக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் காதலென்ற பேருணர்வுப் பெருவெளிக்குச் செல்ல வேண்டுமானல் பெரும்பாலும் பெண் என்னும் பெருங்கதவைத் தட்ட வேண்டிதானிருக்கிறது....என்பது ஆண்களுக்கான விதி. பெண்களின் காதல் எப்படியிருக்கும் என்று ஆராய ஒன்று எனக்கு பிடிக்கவில்லை அல்லது நேரமில்லை. ஆணாய் இருந்து உலகத்தைப் பார்க்கும் போது பெண்ணை ஆணுக்குரியவளாய் மட்டும் பார்க்கும் போது ஏற்படும் அபத்தங்களுக்குள் நான் எப்போதும் போக விரும்பவதேயில்லை...
நான் ஆணாயிருந்து பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன்...அதில் உன்னைப் போன்று என் உணர்வுகளை உரசி தீப்பிடிக்க வைப்பவளை காதலியாகப் பார்க்கிறேன்...
எவ்வளவு பேசினான் நானும் தானே பேசினேன் அவனை கனவனாக நினைத்ததினாலே தான் இன்றுவரை தனி மரமாய் நிற்கின்றேன் ஆனால் அவனை என்ன நிலைமையில் விட்டுவந்தேன் என நினைக்கும்போதே உயரின் ஒவ்வொரு அணுவும் தகிக்கிறது ... அன்று அம்மாவின் துணை இல்லாமல் இருந்தாள் இவள் செய்துவிட்டு வந்த துரோகத்திற்கு இவளே மாண்டிருப்பால் ... இவ செத்த இடத்தில புல் இல்லை மரமே வந்திருக்கும் ...
அம்மா அவளை நினைக்கையில் கண்களில் கண்ணீர் தானாய் வழிந்தது ... அவள் அன்று வந்தது முதல் அம்மா சாகும் வரையிலும் அங்கு நடந்தது என்ன என்று கேட்கவே இல்லை ... கண்ணீரில் கரைந்து கொண்டே இருந்த இவளை தேற்றுவதிலும் இவளை உன்ன வைப்பதிலும் குறியாய் இருந்தாள்....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அனு.Rன் "நறுமீன் காதல்..." - காதல் கலந்த கவிதை தொடர்
படிக்க தவறாதீர்கள்...
அம்மா மட்டும் இல்லை அப்பா சிவா என யாரும் இவளிடம் எதுவும் கேட்கவில்லை ..கேட்டிருந்தாலும் பதில் கூறும் நிலையில் இவள் இல்லை ..
அவனை சந்தித்த நாளை எண்ணி அவள் அழுத்ததுண்டு அவனை சந்திக்காமல் இருந்திருந்தாள் இவள் நிலைமை நன்றக இருந்திருக்கும் என்று தோணினாலும் அவன் இல்லை எனினும் அவன் நினைவுகலோடு இருப்பதே சுகமாய் இருப்பதாய் தோன்றியது ..
அவனை பார்த்த நாளை நினைக்கிறாள் அந்த நாளை பலமுறை சபித்திருக்கிறாள்
இவள் பள்ளிப்படிப்பு முடிந்ததும் அம்மாவிடம் சண்டை போட்டு கோயம்பத்தூர் காலேஜ் சேர்ந்தாள் ...இவளின் கலகல சுபாவத்திற்கு இவளுக்கு என்று தனி விசிறி படையே உண்டு ..ஒரு தோழியின் பிறந்தநாளை சினிமா பாணியில் திரையரங்கில் கொண்டாடும்போதுதான் அவனை முதல் முறையாய் பார்த்தாள் ..
அங்கு இருந்த அத்தனை பேரின் முகச்சுளிப்பினூடே இவன்மட்டும் குறுநகையுடன் இவள் மனதில் பதிந்தான் ..
அன்று .......
ஏய் மாலா அவளை வெளியே கூட்டிட்டு போ .. ஏதாவது காரணம் சொல்லுடி சும்மா என்னை நச்சரிக்காத ...
மாலா அவளை கூட்டிக்கொண்டு வெளியே சென்றதும் ... மறைவாக வைத்திருந்த கேக் வெளியே எடுத்து அதை வைக்க ஒரு வழி யோசித்து ஹாண்ட் பாக் எல்லாம் ஒன்றின் மேல் இன்னொன்றாய் வைக்க ... அது நிக்காமல் கீழே விழுந்தது ..
சே என்னடி பண்ணறது மணி 12 ஆக போகுது அவளும் உள்ளே வந்துடுவா என்று கை பிசைய நின்றுகொண்டிருந்தார்கள் ... ரஞ்சி அவளின் இன்னொரு பிரின்ட் நன்றாக திட்டினாள் லூசு கொக்கி நீதானே முன்னாடிவந்து எல்லா ரெடி பண்ணறேன்னு சொன்ன ... உன் ஆள்கூட ஊர் சுத்தீட்டு கேக் மட்டும் வாங்கிட்டு வந்துட்ட லூசு லூசு என திட்டி கொண்டிருக்க ..
பின்னால் இருந்து இது உதவுமா பாருங்க என்று அவன் ஒரு பாக்ஸ் நீட்டினான் ... அவன் கையில் இரண்டு மூன்று துணி பைகள் இருக்க அதனை அவனே அடுக்கினான் .. அதன் மேல் கேக் வைத்து செட் பண்ணி பின் இவர்கள் கேக் கட் பண்ணினவுடன் இவர்களை புகைப்படமும் எடுத்து கொடுத்தான்
மற்ற அனைவரின் மிக சுளிப்புடன் இவர்கள் கொண்டாட்டம் அரங்கேறியது .... படம் முடிந்தவுடன் அவனுக்கு ஒரு நன்றி மட்டும் கூறிவிட்டு வந்தார்கள்
ரூம் வந்து படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை .. அவன் முகமே நினைவு வந்தது அதனை பேர் முகம் சுளிக்கும்போது அவன் மட்டும் உதவியது .... ஏனோ அவன்கண்களை இவளால் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் போனது ... அவனை நினைக்கும் போதே கன்னங்கள் சூடேறியது ...அவன் யார் என்று தெரியாமல் அவன் மீதான தன் எண்ணம் தவறு என்று தோணினாலும் ... அவன் பேர் கூட கேட்காத தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டாள் ..
மீண்டும் அவனை பார்த்தால் நன்றாக இருக்கும் என்கின்ற எண்ணத்தோடே தூங்கிபோனால் ..