அப்போது சிறுமூளை பெருமூளையின் கட்டளைக்குக் கீழ்படிவதில்லை. அல்லது பெருமூளை சிறுமூளையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழக்கிறது. ‘என்னை யார் கேட்பது? எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’, ‘என்னதான் ஆகிவிடும் பார்ப்போமே’ என்கிற பயங்கர, அதீத எதிர்மறை உணர்ச்சி நிலை மேலோங்கும். பக்கத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. வெறிபிடித்த மனநிலை அது. கொண்டாட்டமும் வெறுப்பின் உச்சமும் சோகங்களும் கைகோத்த வன்முறை மனநிலை அது. எங்கேயோ வாங்கிய அடிக்கு யாரையோ பழிவாங்க நினைக்கத் துடிக்கும் மனநிலை அது. இயல்புக்கு மாறாக, பயங்கரமாக ஒன்றை நிகழ்த்தாமல் ஓயாது அது. நடுவே மயக்கம் அடைந்து ஓய்ந்தால்தான் உண்டு. அப்போது நடப்பவைதான் இதுபோன்ற வன்முறைகள், இன்னபிற. அதாவது, திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், மதுவின் ‘மிதமிஞ்சிய ஆதிக்கம்’ அவர்களை அப்படிச் செய்ய வைத்திருக்கும்.
சுரேஷின் தற்போதைய நிலைமையும் இதுவே ...
அவள் ஓடி மறைந்து கொண்டது கெமிஸ்ட்ரி lab ..... வேறு வழி இல்லை தன் உயிர் போனாலும் பரவாயில்லை ஆனால் மானம் போகும் நிலைமை வந்தால் அவன் மீது ஆசிட் ஊற்றிவிடுவது என முடிவு செய்து குடுவையை கையில் எடுத்துக்கொண்டு தயார் நிலையில் நின்றாள்
அங்கே அவனோ வெறிகொண்ட நாய் போல் இவளை தேடிக்கொண்டிருந்தான் ..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
மறைந்து உட்கார்ந்து தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டவள் கைகளில் சிறு எரிச்சலை உணர்ந்தாள் தன்னையே பார்க்க கீலே விழுந்து எழுந்து ஓடியதில் கைகளிலும் கால்களிலும் சிறு சிறு சசிராய்ப்புகள் ..
தோள்பட்டையில் பின் கிழித்த வலியும் சேர்ந்து உடம்பு சோர்ந்து போனது சிறிது தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது ...
ஆனால் பயத்திலும் அவன் எங்கு இருப்பான் என தெரியாததாலும் இவள் அப்படியே அமர்ந்து விட்டாள் ..
அந்த ஒரு கட்டிடம் தவிர வேறே எதுவும் இல்லாததால் அவள் அங்குதான் சென்றிருக்க வேண்டும் என தோன்றி ரவி மெதுவாக அங்கே சென்றான் ..
அவனுக்கு ஒரு நம்பிக்கை ஒன்றும் பெரிதளவில் இன்னும் பிரச்சனை ஆகவில்லை என ஏனென்றால் எந்த சத்தமும் வெளியே கேட்கவில்லை ..
அவன் அந்த கட்டிடத்தை நெருங்கி வராந்தாவில் பார்க்க இவனுக்கு முதுகுகாட்டி உட்கார்ந்து அவன் தண்ணி அடித்துக்கொண்டிருந்தான் ஓடி வந்ததில் தெளிந்திருந்த கொஞ்ச போதையையும் திருப்பி கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருந்தான் ........
அவனை அங்கு பார்ப்பதில் ஒருவகை நிம்மதி தோன்றினாலும் சிவா நிலைமை என்ன என்று கவலையாகவே இருந்தது ..
மெதுவாக சுற்றி பார்க்க அங்கே ஸ்டுடென்ட் ரெகார்ட் புக் வாங்கிய கயிறுகளும் .. லாப பின் பக்கம் இருந்த புதரில் கொடிவகை ஒன்றும் இருந்தது .. ரவி மெதுவாக சென்று அவற்றை எடுத்து ஒரு கயிறுபோல் முறுக்கி கொண்டு வந்தான் ..
பூனைபோல் அடியெடுத்துவைத்து சுரேஷ் அருகே சென்று அவன் பின்னால் இருந்து அவன் அமர்ந்திருந்த தூணுடன் சேர்த்துக்கட்டினான் .. அவனோ பயங்கர போதையில் இருந்தான் ..அருகே பார்க்கும்போது அவனிடம் போதை மாத்திரைகளும் கஞ்சா போன்ற சில வஸ்துக்களும் இருந்தது அதை காலால் தள்ளிவிட்டு .. அரவம் கேட்க திரும்பி பார்த்தான் ... இவனை தொடர்ந்து வந்த நண்பர்கள் அங்கே இருக்க அவர்களிடம் சுரேஷை ஒப்படைத்து விட்டு ... சிவாவை தேட ஆரம்பித்தான்
கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் சிவாவிற்கு மீண்டும் இதயம் பந்தயக்குதிரையாய் ஓட ஆரம்பித்தது ..
காலடி ஓசை அங்கும் இங்கும் நகர்ந்தது சுரேஷ் தன்னை தேடிக்கொண்டு உள்ளே வந்துவிட்டதாய் நினைத்தால் ...
அங்கு ரவியோ பயந்து போய் இருக்கும் அவளுக்கு இவன் குரலுக்கும் சுரேஷ் குரலுக்கும் வித்யாசம் தெரியாமல் ஓடி ஏதாவது ரசாயனத்தின் மேல் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று சத்தம் இல்லாமல் அவளை தேடினான்
காலடி ஓசை நெருங்க நெருங்க ஒரு முடிவுக்கு வந்தவளாய் குடுவையுடன் எழுந்து அவனை நோக்கிவீச அவளை தேடிக்கொண்டிருந்தவன் சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்து சட்டென விலகினான் ..
அங்கே ரவியை எதிர்பாக்காதவள் தான் செய்ய நினைத்த செயலின் விபரீதத்தை உணர்ந்தந்தாலும் உடற்சோர்வினாலும் ...அவனை பார்த்த நிம்மதியிலும் .. இவ்வளவு நேரம் இருந்த ரசாயன நொடியிலும் அப்படியே மயங்கி சரிந்தாள் ..
லாவகமாக ஆசிட் ஐ கடந்து அவளை கைகளில் ஏந்திக்கொண்டு அவன் வெளியே வரவும் ... அவள் பிரிஎண்ட்ஸ் பிரின்சிபால் மற்றும் சிலருடன் வரவும் சரியாக இருந்தது ..
அவசர அவசரமகா அவளுக்கு முதலுதவி செய்துவிட்டு ... சுரேஷை பொலிஸிடெம் ஒப்படைத்தனர் ..
ஆட்டோ வைத்து அவளை வீட்டில் விட்டுவிட்டு அவள் அக்காவிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றால் சிவா வேண்டாம் என்றுவிட்டால் ..
அப்பா அம்மா இறந்தபிறகு அக்காவிற்கு நிறைய பொறுப்புகள் கூடிவிட்டன அதில் இவள் கவலையும் சொல்ல விரும்பவில்லை ..