"கண்டிப்பா நிரு..."
அதற்குள் ஜானுவோ... "என்ன நிரு தூங்கிட்டு இருப்பன்னு பார்த்தா குளிச்சு ரெடியாகி வர... இப்போ காஃபி தரவா..?? இல்லை ப்ரேக்பாஸ்டே சாப்பிட்றியா.." என்றாள்.
"காஃபி வேண்டாம் ஜானு... நான் ப்ரேக்பாஸ்ட்டே சாப்ட்றேன்... நீங்க சாப்டீங்களா...?"
"இல்லை இனிமே தான்..."
"அப்போ எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்... உக்காருங்க..." என்றவள்..
"நிக்கி நீ ஆஃபிஸ் போய்ட்ருப்பியோன்னு நினைச்சேன்" என்றாள்.
"இல்லடா இனி தான் போகனும்... இன்னிக்கு ஜெய்யை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகனும்... அதான் இப்பப் போய்ட்டு கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்..."
"ஏன் ஜெய்க்கு என்ன..?? என்னாச்சு ஜானு...??"
...
This story is now available on Chillzee KiMo.
...றான் நிகேதன்.
"நிரு நம்மல கடவுள் தான் காப்பாத்தனும்..." என்று ஜானு சொன்னதும் நீரஜா சிரித்தாள்.
"போதும் நிரு கிண்டலெல்லாம்.... நான் சீரியஸாவே கேக்கறேன்... இன்னும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றது சரியில்ல.. உனக்கு நல்லப்படியா கல்யாணம் செஞ்சு வைக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கு...