(Reading time: 20 - 40 minutes)

ன்ன நக்கலா..இந்த தொழில் சரி வரலேன்னா,நேரடியா வெள்ளித்திரைல என்ட்டர் கொடுப்போமில்ல.நாங்க கால் வைச்சா,வெள்ளித்திரையே சும்மா அதிரும்ல”என்று தலைவர் வசனத்தை சொல்லி அவனை கடுப்பேத்தினாள்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க,அவர்களோடு நடந்து வந்த மற்ற இரண்டு ஜீவன்களும் மெதுவாக கைகளை கோர்த்து கதை பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

“இவங்க பண்ற அலப்பறை தாங்கலை”என்று சொன்னவள்,தன்னுடைய ஸ்கூட்டியில் ஏறிக்கொண்டு சென்றுவிட,

“அடிப்பாவி”என்ற அலறல் மற்ற மூவரிடமிருந்தும் வந்தது.

“பெட்ரோல் இல்லைன்னு பொய் சொல்லிட்டு,நம்மளை இவ்வளவு தூரம் நடக்க வச்சிருக்கா..இப்போ நான் ஹாசினியை கொண்டு போய் விடணுமே”என்று சரண் புலம்பவும்,

“பக்கத்துல தானே வீடுன்னு சொன்ன.கொண்டு போய் விட்டுட்டு வந்து என்னை பிக்அப் பண்ணிக்க.நான் இங்கேயே இருக்கேன்”என்று யஸ்வந்த் சொல்லவும்,அவந்திகாவை திட்டிக்கொண்டே சரண் ஹாசினியை அழைத்துக்கொண்டு சென்றான்.

யஸ்வந்த் அங்கிருந்த மரத்தின் மேல் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க,”சரண்”என்ற அவந்திகாவின் அலறலில் அவசரமாக குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.

மிகவும் அருகில் தான் குரல் கேட்டது.இவர்களுக்கு விளையாட்டு காட்ட வேண்டுமென்று சற்று தூரத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவர்களுக்காக காத்திருந்தாள் போல...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அதற்குள் அங்கு வந்த இரண்டு ஆண்கள்,அவளது கையைப் பிடித்து இழுக்க,அவள் திமிர திமிர அவளது மூக்கில் கர்சீப்பை வைத்து மயக்கமடைய செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

அவளை பார்த்துவிட்ட யஷ்வந்த்,துரிதமாக செயல்பட்டு,அந்த இரண்டு ஆண்களிடமிருந்து அவளை பிரித்தெடுத்தவன்,”இங்க இருந்து போ”என்று சொன்ன போதும்,அவனை மட்டும் எப்படிவிட்டு செல்வது என்று,அங்கேயே சிலையாக அவள் நின்றிருக்க,அந்த இரண்டு நபர்களை அடித்த கையோடு அவளது கன்னத்திலும் ஒரு அறை வைத்தான்.

“போன்னு சொன்னா கேட்கமாட்டியா”என்று உச்சக்கட்ட குரலில் கத்தவும் அங்கிருந்து அழுதுகொண்டே ஓடியவள் ஒரு மறைவிடத்தில் மூச்சு வாங்க நின்று அங்கு நடப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன்னைக் காக்கவென்று வந்து அவனுக்கு எதுவும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற உணர்வே அவளை அங்கிருந்து நகரவிடவில்லை.

அப்போது போலிஸ் சைரன் ஒலி கேட்கவும்,மாட்டிக்கொண்டால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால்,அடி வாங்கிக்கொண்டிருந்த ஒருவன் சற்றும் யோசிக்காமல்,பாக்கெட்டுக்குள் கைவிட்டு,கத்தியை எடுத்து யஸ்வந்தின் வயிற்றில் குத்திவிட்டு  ஓடிவிட்டான்.

“அம்மா”என்ற அவனது அலறலில் மறைவிடத்தில் இருந்தவள் எதையும் யோசிக்காமல் மீண்டும் அவனிடம் ஓடி வந்தாள்.

வயிற்றில் கை வைத்து அழுத்தியும்,ரத்தம் நிற்காமல் வந்து கொண்டே இருக்கா,லேசாக மயக்கம் வருவது போல இருந்ததால்,நிற்க முடியாமல் தடுமாறியவனை தாங்கிப் பிடிக்க முயன்று முடியாமல் தோற்று அவனோடு தானும் கீழே விழுந்தவள் அவசரமாக,கீழே விழுந்த தன்னுடைய போனை எடுத்தாள்.

அது வேலை செய்ய மறுக்க,”இப்போ என்ன பண்ணுறது”அழுதுகொண்டு அவனிடமே கேள்வி கேட்டாள்.

“என் போன்”என்று எடுத்து ஆன் செய்து கொடுத்தான்.

அவள் போன் செய்வதற்கு முன்னே அங்கு வந்துவிட்ட போலிஸ் அவசரமாக ஆம்புலன்சிற்க்கு அழைத்தனர்.

அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் அவனை அனுமதித்துவிட்டு வெளியே காத்திருந்த நேரத்தில்,தன்னுடைய விளையாட்டுத்தனத்தால் தான் இப்படி ஆகிவிட்டது என்று எண்ணி எண்ணி அழுதாள்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டும் என்ற நினைவு வர,கண்ணை துடைத்தவள் முதலில் பாண்டியனுக்கு விபரம் சொல்லிவிட்டு,பின்பு யஸ்வந்தின் பெற்றோருக்கு அழைத்து சொல்லிவிட்டாள்.

அவர்களது பெற்றோர்கள் வருவதற்கு முன் இங்கே யஸ்வந்த்திற்கு சிகிச்சையை முடித்திருந்தார்கள்.

காயம் ஆழம் இல்லை என்பதை விட,தாங்கள் தப்பிப்பதற்காக லேசாக அவனது வயிற்றை கீறிவிட்டு சென்றார்கள் என்பதே சரியாக இருக்கும்.

தப்பி சென்றவர்களை போலிஸ் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அவளிடம் ஒருமுறை மட்டும் சொல்லி காவலர்கள்,அதற்குப் பின் அந்த மருத்துவமனை பக்கம் வரவேயில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.