“அடிப்பாவி.....”
துளசியை மேலே பேச விடாமல்,
“ரொம்ப பசிக்குது ஒசிமம்.... சாப்பிடலாம் வாயேன்.... நானே போய் சாப்பாடு தாங்கன்னு கேட்க முடியுமா..... வா போகலாம்....” என்றாள் நந்திதா...
“அது சரி.....! நேத்து வரைக்கும் சாப்பிட கூட டைம் இல்லை.... இப்போ உனக்கு பசிக்குது????”
“பசிக்குது என்ன செய்ய? இதுக்கு எல்லாம் இனி நான் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் போட முடியுமா..... வா ஒசிமம்....”
“வரேன் வரேன்.... ஆனாலும் எஸ்கேப் ஆகிட்டேன்னு நினைக்காதே.... என் கிட்ட என்னைக்காவது மாட்டுவ அப்போ அந்த நெக்லஸ் பத்தி கேட்குறேன்.....”
நடந்தபடி துளசி சொல்ல, நந்திதா காதிலேயே விழாததை போல தோழியுடன் சென்றாள்....
...
This story is now available on Chillzee KiMo.
...் மட்டுமே இருந்தன...
இங்கேயும் அவன் சொன்னதற்காக ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டாள் அவள்....
அடுத்ததாக எங்கே செல்வான் என்ற ஊகம் இருந்தப்போதும் அமைதியாக இருந்தவள், அவள் எதிர்பார்த்தது போலவே அவன் ஆப்பிள் ஸ்டோரின் முன் காரை நிறுத்தவும் அவனை குறுகுறுவென ஒரு பார்வை பார்த்தாள்...