“வேணாம் புகழ் .. நீயும் உன் விளக்கமும்..தப்பாக ஏதும் விளக்கம் சொல்லி அதுக்கும் சேர்த்து எங்கிட்ட வாங்கி கட்டிக்காதே..நானே என்னை எப்படியாவது சமாதனம் பண்ணிக்கிறேன்..இப்பவும் சொல்லுறேன்,நீதான் என் ஹஸ்பண்ட்.. நமக்கு கல்யாணம் நடந்தாலும் சரி, நிக்கா நடந்தாலும் சரி அல்லது ரிஜிஸ்டர் மேரேஜ் என்றாலும் சரி ! எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே.. உன்னை மன்னிக்க மாட்டேன்.. ஆனா உன்னோடு தான் நான் வாழ்வேன்”என்றாள் ஆயிஷா. அவளின் வார்த்தைகள் அவனுக்கு சுமையளிக்கவில்லை..மாறாக, மனதை மயிலிறகால் வருடுவது போலவே இருந்தது. அவன் அவளின் அன்பினில் நெகிழ்ந்திருந்த நொடி அந்த வீட்டின் முன் காரை நிறுத்தினாள் ஆயிஷா.
“ இறங்கு புகழ்” என்றவள் அவனுக்கு காத்திருக்காமல் வீட்டின் கதவை தட்டவும் அவனை அறைவதற்கு தயாராகிய இரு கரங்கள் அந்த கதவை திறந்தன. விழி சிவக்க,கதவை திறந்தவன் முறைக்கவும்,
“அண்ணா ப்ளிஸ் அவனை எதுவும் பண்ணாதிங்க.. நான் அவனை அடிச்சுட்டேன்” என்றாள் அவள். அவளை நம்பாமல் அவன் புகழின் முகத்தை ஆராய,
புகழோ “குமரா” என்று அவனை அணைக்க அருகில்வர, ஆயிஷாவின் ஐவிரலில் இருவிரல் அவன் கன்னத்தில் பதிந்த காயத்தை கண்டு கொண்டான் குமரன். புகழ் அவனை அணைத்து நிற்க குமரன் அசையாமல் நின்றான், அவனின் மௌனம் புகழை வெகுவாய் பாதித்தது.
“டேய்,எல்லாத் தப்பும் நான் தான் பண்ணினேன்.. ஆனா இப்போ நான் அதை சரி பண்ண நினைக்கிறேன்..தயவு செஞ்சு இப்படி எல்லாரும் என்னை ஒதுக்கி வைக்காதிங்க டா” என்று இறைஞ்சினான் புகழ்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
“ அப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லு..முதலில் உள்ளே வா” என்றான் குமரன். புகழ் குமரனின் வீட்டினுள் அமரவும் அவனுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள் ஆஷா.
பள்ளிக்கு சென்ற யாழினிக்கு இருப்பு கொள்ளவில்லை… எவ்வளவுதான் மறைத்தாலும்,தனது நண்பன் மீண்டும் வந்துவிட்டான் என்ற நிம்மதி அவளை இம்சித்தது. கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவனிடம் பேசவேண்டும் என்று உள்ளம் துள்ளியது.இது எதையும் அறியாமல் நடந்ததை குமரனிடம் சொல்லத் தொடங்கினான் புகழ்..
நாமும் புகழுடன் சேர்ந்து என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்வோம் அடுத்த அத்தியாயத்தில்!
தொடரும்
{kunena_discuss:994}