05. சிவன்யா - ஆதித்யா சரண்
"ஏன் தான் இப்படி என் உயிரை எடுக்கிறீங்க?ஏன் அந்த ஆளு போய் வேலையை முடிக்க மாட்டானா?"-உச்சப்பட்ட கோபக் குரலில் கத்தி கொண்டிருந்தான் மகேஷ்.
"இல்லை..சார்..அது வந்து!"
"வைய்யா போனை!"-இணைப்பை துண்டித்தான்.
"என்னடா?என்ன ஆச்சு?"
"டெல்லிக்கு கிளம்பணும்டா!"
"டெல்லிக்கா?"
"ம்..புது புராஜெக்ட்!பேப்பர்ஸ் சைன் பண்ணணும்!"
"ஏன் எல்லா வேலையும் உன் தலையிலே இறக்குறான் உன் பார்ட்னர்?"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
"அவனுக்கு நேரம் சரியில்லை அதான்!"
"சரி டென்ஷன் ஆகாதே!அவனை போக சொல்லேன்!"
"அவனுக்கு நெஞ்சு வலியாம்!ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கான்!பிளடி...அப்படியே சாக மாட்றானே!"
"போதும்டா டேய்!விட்டா நீயே கொன்னுடுவ போல இருக்கே!"-மகேஷ் ஒரு பெருமூச்சுவிட்டான்.
"நான் ஈவ்வனிங் கிளம்புறேன்டா!உடனே,ப்ளைட் டிக்கெட் போட்டுவிடு!"
"சரி..அப்போ நானும் என் வீட்டுக்கு கிளம்புறேன்!"
"என்னடா?"
"என்ன என்னடா?"
"ஹெல்ப் பண்றேன்னு சொன்ன?"
"நீ திரும்பி வாடா!அப்பறம் பார்த்துக்கலாம்!"
"முடியாது!நீ இங்கேயே இருந்து முடி!"
"லூசு மாதிரி பேசாதே மஹீ!நான் மட்டும் தனியா எப்படி?"
"அதான் சிவன்யா இருக்காளே!"-திவாகர் தன் தலையில் கை வைத்துக்கொண்டான்.
"டேய்!ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது நான் எப்படிடா கூட இருக்க முடியும்?"-மெல்லிய குரலில் கூறினான்.
"அவ தனியா இருக்க கூடாதுன்னு தான் உன்னை இருக்க சொன்னேன்!"
"ஏ..அறிவாளி!உன் அறிவை எந்த மியூசியத்துல கொண்டு போய் வைக்கிறது?"
"ஆமா போடா!இவர் பெரிய உத்தம புத்திரன்!உங்களைப் பற்றி எல்லாம் தெரியும்!போடா!"
"என்ன சொல்ற நீ?"
"ஊருக்கே தெரிஞ்ச உங்க லவ் மேட்டர்!சொந்த அண்ணன் எனக்கு தெரியாதா?"
"லவ்வா?நானா?...ஏ..நான் போய்!"
"ஏ...நடிக்காதே!இங்கே யாரும் உனக்கு அவார்ட் தர போறதில்லை!சிவன்யாவை பத்திரமா பார்த்துக்கோ!"
"மஹீ...!"
"நான் காதலுக்கு வில்லன் இல்லைடா..!ஆனா,ஒரு விஷயம்!உன் நண்பனா இல்லாம அவ அண்ணனா சொல்றேன்!அவ எதுக்காவது கஷ்டப்பட்டா உன்னை கொன்னுடுவேன்!ஜாக்கிரதை!"-திவாகர் புன்னகைத்தான்.
"அது என்னிக்கும் நடக்காதுடா!"
"தெரியும்..அதான்,உன்னை இங்கே விட்டுட்டு போறேன்!ஜாக்கிரதை!"
"ம்..."
அன்று மாலை...
"அவசியம் நீங்க போய் தான் ஆகணுமாண்ணா?"-வருத்தத்தோடு கேட்டாள் சிவன்யா.
"ஆமாம்மா!முக்கியமான வேலைடா!நான் சீக்கிரம் வந்துடுவேன்!சரியா!"-சிவன்யா அவனை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
"ஏ...என்னடா?எதுக்கு அழுற?எப்போதும் நான் போவேன் தானே!"
"இப்போ நீங்க போறதில் எனக்கு விருப்பமில்லை!"
"என்னம்மா?நீயே இப்படி சொன்னா என்ன அர்த்தம்?நீ அழுதா அங்கே எனக்கு ஒரு வேலையும் ஓடாதுடா!"-என்று அவள் கண்களை துடைத்து நெற்றியில் முத்தமிட்டான் மகேஷ்.
"சீக்கிரமே வந்துடுவேன்!வந்ததும் என் செல்லத்தோட கல்யாண ஏற்பாடு எல்லாம் செய்யணும்!"-அவன் கூறியதும் அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
"அட!வெட்கத்தைப் பாரு!எவ்வளவு அழகா இருக்க!சரி..பத்திரம்!"
"ம்..."
"அந்த தடியன் எதாவது சேட்டை பண்ண சொல்லு முடிச்சிடலாம்!"
"அவர் அதெல்லாம் பண்ண மாட்டார்ணா!"
"பார்டா..!அவ்வளவு காதலா?சரிதான்!சரி...ஜாக்கிரதைம்மா!"-என்றப்படி அவள் அறையைவிட்டு வெளியே வந்தான் மகேஷ்.
"எப்பா சாமி!எவ்வளவு நேரம்?"
"நீ ஏன்டா இப்படி பறக்கிற?"
"நான் பறக்கலை...நீ இன்னுமும் லேட் பண்ணா,உன் ஃப்லைட் பறந்துடும்!"