(Reading time: 19 - 38 minutes)

வன் முகத்தில் என்னதது பாவம்….?? இன்று நாள் முழுவதும் அவனுடன் கழிந்ததில் அவள் ஒன்றை கவனித்திருந்தாள்….. அதி அவனது மத்த சகோதரர்கள் போல கல கலப்பவன் கிடையாது…. அதற்காக ஒருவித விலக்கத்தில் இருப்பான் என்றால் அதுவும் இல்லை…அவர்களிடம் அவன் பேசிக் கொண்டுதான் இருந்தான்…. என்ன எல்லாம் சிறு சிறு வாக்கியங்களாக இருக்கும்….

ஆனால் அவன் இவளிடம் பேசும் போது அது  இயல்பாகவே நீண்டுவிடும்….

வினி பேசுவது எதைப் பற்றியாய் இருந்தாலும் ஒரு உரிமையுடன் அவள் பழகுவது போல் இருக்கும்….. அதிலும்  இந்த யூத் கேங் மட்டுமாய் இருக்கும் போது  அவள் உரிமையாகவே கிண்டல் கேலி என எல்லோரையும் நன்றாக வாருவாள்…. அதியிடமும் அதே தொனியில் தான் அவள் பேசுவாள்….

அவளையும் பவியையும் அதி ஒரு வித ஆழமான அக்கறையுடன்  நடத்தினாலும் வினியின் வாரல்களுக்கு அதியிடம் இருந்து ஒரு புன்னகைதான் பதிலாக கிடைக்கும்…. கவனித்ததில் அவன் பெண்களை நடத்தும் விதம் அது என இவளுக்கு தெரிகிறது….மனதில் இவர்கள் என் குடும்பம் என எத்தனை அக்கறை இருந்தாலும் அது செயலில்தான் வருமே தவிர…..வார்த்தையில் அந்த நெருக்கம் வராது அவனுக்கு….. அது இரண்டு அல்லது நான்கு வார்த்தை வாக்கியங்களாகவே இருக்கும் அவர்களிடம்….

ஆனால் இவளிடம்  மட்டும் அவனது நடபடிகைகள் எல்லாவற்றிலும் வித்யாசத்தை உணர்கிறாள் இவள்….. அதற்காக வார்த்தையில் உருகி வழிந்தான் என்றெல்லாம் இல்லை…. இவளைப் பெண்ணென்றோ அவனை ஆண் என்றோ உணர வைக்கா வார்த்தைகள் அவை….

ஆனால் அவனுக்கு வெகு இயல்பாக இவளிடம் பேச முடிகிறது என்பது இவளுக்கு புரிகிறது….நினைப்பதை பேசி விடுகிறான்……

அதே போல் வினிக்கோ பவிக்கோ இவன் எதாவது உதவி செய்ய சூழ்நிலை அமைந்தால் அவர்கள் முகம் பார்த்து அவர்களது மானசீக அனுமதியைப் பெற்றுக் கொண்டுதான் அதை செய்து கொடுப்பான்..

இவளிடம் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது….. ஸ்பான்டேனியஸ் ஆக்ட்….அவனுக்கு தோணியதை செய்துவிடுவான்….. அவன் அம்மாவிடம் மட்டும் தான் அவன் அப்படி நடந்து கொள்வதை இவள் கண்டிருக்கிறாள்….

இதில் அவன் தன்னை வேறுநாட்டுகாரியாக பார்கிறான் என்ற உணர்வு சுத்தமாய் தொலைந்து போய்…... அவனுக்கு எல்லோரையும் விட  மனதளவில்  இவள் மிகவும் நெருக்கம் என ஒரு உண்மை புரிதல்  வந்திருந்தது இன்று இவளுக்கு……

தனிமையை…. தள்ளி நிறுத்தலை….திரும்பிப் போ என்ற பதத்தை எல்லாவகையிலும் அனுபவித்துக் கொண்டிருந்த இவளுக்கு இது அன்னை மடி இதம்…..

ஆனால்  இதையெல்லாம் அதி உணர்ந்திருக்கிறான் என்றே இவளுக்கு தோன்றவில்லை….. ஏனெனில் அவன் செயல்கள் அத்தனையும் வெகு இயல்பானவை…. இவளிடம் அவன்  அவனாகவே இருக்கிறான் அவ்வளவே….

அந்த அவனது இயல்பினை அடிப்படையாய் வைத்து அவனது இப்போதைய முக பாவத்தை மொழி பெயர்க்க முயன்றாள்…..

அவனை புரிவதைக் காட்டிலும் அவனை அப்படி பார்ப்பது இவளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதுதான் இப்போது இவளுக்கு அதிகமாக புரிகிறது…..

‘ அதிபனுக்கு மட்டுமல்ல மனதளவில் இவளோடு நெருக்கம்…..இவளுக்கும்  அவன் அப்படித்தான்’    இந்நொடி தேன்மின்னலாய் இவளுள் ஒரு புரிவுச் சிதறல் ….

இப்போதெல்லாம் அவனது இவள் பற்றிய அத்தனை செயல்களும் ஒதுக்கமோ, விலக்கமோ, சேர்ப்போ, நட்போ எத்தனையாய் பாதிக்கிறதாம் இவளை…???

ஆம் அவன் இவளுக்கு மிகவும் முக்கியமானவன்….  அதிக்காய் அமில வீரியமாய் அவளுள் ஒரு வகை அறியா ஆர்பாட்டம்… அது எதற்காய் என்றெல்லாம் இவள் உணரும் முன்னம் அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அவநம்பிக்கை சுயபட்சாதாபத்தின் விளைவாய்…

‘என் கூட சேர்ந்தா இவனுக்கும்  நல்லதில்ல….’ எனதான் அவளால் நினைக்க முடிகிறது…. தலை குனிந்த படி திரும்பி தன் வீட்டை நோக்கி நடந்துவிட்டாள்….

ஆனாலும் பின் புறமாய் இவளைத் தீண்டிக் கொண்டிருக்கும் அவன் பார்வைக்குள் தன்னைத்தானே தாண்டி விழுந்து புதைந்து கொள்ள நினைக்கிறது உள்ளே அவள் அறியா வெகு அடி ஆழத்தில் நினைவொன்று…..

திபனால் அப்போதோ அடுத்து உடனேயோ கிளம்பிப் போய் அனுவை பார்க்க முடியவில்லை…. பவிஷ்யாவின் குடும்பம் அன்று கிளம்பிப் போன பின்பும் கூட உடனடியாக அனுவிடம் போய் நிற்க வழி இல்லை இவனுக்கு….

பவிஷ்யா வீட்டில் திருமண அழைப்பை தொடங்குகிறார்கள் எனில்…….நாளையே கூட பத்திரிக்கை அடிக்கவோ…..இல்லை நிச்சயத்திற்கு அழைக்கவோ கூட தொடங்கலாம்….அப்படி அவர்கள் வெளி ஆட்களை அழைக்க தொடங்கிய பின் பொது உறவினர்கள் கூட திருமண பேச்சை மாற்றி பேச முடியாது…. மணி பெரியப்பாவே ஒத்துக் கொள்ள மாட்டார்….

ஆக உடனடியாக அப்போதே கிளம்பிப் போய் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தேவையான ஏற்பாடு செய்துவிட்டு வர வேண்டியதாய் இருந்தது…..

அதுவும் இதில் அபயை நேரடியாக சம்பந்தப் படுத்துவது சரியாய் வராது என்பதால் இவனும்  யவ்வனுமாகத்தான் எல்லாம் செய்ய வேண்டும்……  அது முடியும் போதே இரவாகி இருக்க……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.