வைஷ்ணவியின் அழைப்பை பார்த்து அதை ஏற்றவன் அவளிடம் சமாதானமாக பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே... அவனை பேச விடாமல் அவளே பேசினாள்...
"நீங்க என்ன பதில் சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன் சஞ்சய்... வருத்தப்படாதீங்க... நீங்க சொன்னதை நினைச்சு உருகிக்கிட்டு அழுதுக்கிட்டு இருப்பேன்னு நினைச்சுகாதீங்க... நான் ஏன் அழனும்..?? நீங்க என்னை வேண்டாம்னு சொன்னா.. என் வாழ்க்கையே ஒன்னும் முடிஞ்சுப் போகல...
எனக்கு தெரியும் அந்த நீரஜாவ தான் நீங்க மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க... ஆனா அவ தான் உங்களை கண்டுக்காம அந்த வெற்றிக் கூட சுத்திக்கிட்டு இருக்கா... அவளுக்காக என்னை வேண்டாம்னு சொல்லிட்டீங்கல்ல.. பரவாயில்லை அதுக்காக நான் வருத்தமெல்லாம் படல... ஆனா என்னை தங்கையா நினைச்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
?
முன்பு ஜானவி இவனை அண்ணா என்று அழைத்த போது... சஞ்சய் என்று கூப்பிடும்படி இவன் தான் கூறினான்... அப்போது அண்ணன், தங்கை உறவிலெல்லாம் இவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை... அதனால் தான் அப்படி சொன்னான்... ஆனால் ஜானவியோ இவனை பேர் சொல்லி அழைத்தாலும், அண்ணன் என்ற முறையில் தான் இவனோடு பழகினாள்...