தன் கேவலமான புத்தியை எண்ணி அவருக்குள் சுயவிரக்கம் எழ கண்ணீர் பெருக்கெடுத்தது. சிற்பி பதறிப்போய் தந்தையின் கண்ணீரைத் துடைத்தான். அவன் கைகளைப் பற்றி தன் முகத்தில் புதைத்துக்கொண்டவர் அதில் ஒரு முத்தமும் பதித்தார். அவன் சிலிர்த்துப்போனான்.
“சிந்து இங்கே வா!”
அவர் அழைக்க அவளுக்கு தன் தாய்க்கு அவர் இழைத்த துரோகம் நினைவு வர மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. வணங்காமுடிக்கு அவளின் நிலை புரிந்தது.
“இருக்கட்டும் மாப்பிள்ளை. அவளுக்கு திடீர்னு இதை எல்லாம் கேள்விப்பட்டதும் தாங்க முடியவில்லை. அவள் நார்மலாறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும்.”
அவள் அவரை நன்றியுடன் பார்த்தாள். இப்போது இருக்கும் கோபத்தில் தந்தையிடம் தன்னை வெளிக்கொண்டுவிடுவோம் என்ற பயம் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்த தவறால் மனைவியும் குழந்தைகளும் கஷ்டப்பட நேருமோ என்ற கவலையில் இருக்கும்போது பிள்ளைகள் சொத்தை எல்லாம் அவர் பெயருக்கு மாற்றி எழுதிய காகிதங்களுடன் அவரிடம் வந்தாள்.
“வேண்டாம் அன்பு! ஏற்கனவே என் முட்டாள்தனத்தால் நிறைய கடன் வந்துவிட்டது. இப்போது இதை விற்க வேண்டுமா?” தயக்கமுடன் கேட்டார்.