“நீங்க இல்லாம பிள்ளைங்களுக்கு என்ன சந்தோசம் சொல்லுங்க. நீங்க நல்லபடியா எழுந்து வந்து இழந்ததை எல்லாம் மீட்டுடுங்க.”
தைரியம் சொன்னாள்.
“என்னால் முடியுமா அன்பு?”
“ஏன் முடியாது? இவ்வளவு நாட்கள் தொழிலில் கொடி கட்டி பறந்தவர்தானே? ஏதோ சின்னதாய் சறுக்கி விட்டது. எல்லாம் சரியாயிரும்.”
அவரது அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. அதன்பிறகு தன் தந்தையைப் பார்க்க என்று சிந்தனா அங்கே செல்லவில்லை. வீட்டை கவனிக்கிறேன் என்று அங்கேயே தங்கிவிட்டாள். அவளது பொறுப்பைக் கண்டு அன்பரசிக்கு கொள்ளைப் பெருமை.
அறுவைச் சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச்செல்லும்போது கவலையுடன் தன் மனைவியைப் பார்த்தார். அவள் புன்னகையுடன் அவர் கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
என் கணவருக்கும் இது தெரியும். நீயும் என் மேல் பைத்தியமாகி எனக்கு வேணுங்கிறதை அள்ளி அள்ளி கொடுத்தே. ஆனால் உன் அப்பன் உன்னை மாதிரியில்லை. அந்த ஆளு என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கலைன்னாலும் நான் உன் பணத்துக்காகதான் உன்னோட பழகறேன்னு நினைச்சு அவசரம் அவசரமா உன்னை மிரட்டி கல்யாணம் செய்து வச்சிட்டார்.