(Reading time: 15 - 30 minutes)

ங்கு ராமும் மகியும் நண்பர்களாய் தங்களின் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொண்டு தங்களின் மீதான புரிதலை அதிகரித்து கொண்டிருந்தனர்..ராம் நா ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே??

என்னடா கேளு??

இல்ல என் மேல உங்களுக்கு கோபமே வரலையா??

உன் மேல எதுக்குடா கோபபட போறேன்..

வந்து…உங்க கல்யாணத்தை பத்தி நிறைய ட்ரீம்ஸ் இருந்துருக்கும்..இப்போ என்னடானா எல்லா உரிமையும் இருந்தும் ஏதோ ஒரு கோடு போட்டு வாழ்றதுக்கு கஷ்டமாயில்லையா??

லேசாக சிரித்தவன்..மகி அதெல்லாம் நீ சொல்றமாறி கல்யாண வாழ்க்கைய பத்தி நிறைய யோசிச்சு வச்சுருக்கவங்களுக்கு..நா என் லைவ்ல கல்யாணம்னு ஒண்ணு நடக்கும்னே நினைச்சது கிடையாது உன்ன பாக்குறவர..உன்ன ஏன் பிடிச்சுது எப்போ  பிடிச்சதுநுகூட தெரில..ஆனா ஏனோ நீ தான் இனி என் லைவ்னு மனசுல பதிஞ்சுடுச்சு..என்னோட ஒரு ப்ரெண்டா நல்ல கம்பனியனா உன் கை கோர்த்து வாழ்க்கைய ரசிச்சு ரசிச்சு வாழணும்நு ஆசைபட்டேன் மத்தபடி நம்ம ரிலேஷன்ஷிப் புருஷன் பொண்டாட்டி குழந்தைங்கிற கான்சப்பட் மட்டுமே பேஸ் பண்ணி இருந்ததில்லடா..பட் அப்கோர்ஸ் உன்ன அடிக்கடி சீண்டிட்டேயிருப்பேன் அந்த முத்தமோ அணைப்போ நிச்சயமா என் லவ்வ எக்ஸ்ப்ரெஸ் பண்ண தானே தவிர வேற எதுக்காகவுமில்லை...நீயே எனக்கு குழந்தையாதான் தெரியுற..தாம்பத்தியம்ங்கிறது லைவ்வோட ஒரு பார்ட்தான்டா அதுவே வாழ்க்கையில்லை..அதையும் தாண்டி என் அழகழகான மகியோட அனுபவிக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு..இப்போ உன் சந்தேகம் போச்சா??

என்ன கூறுவாள் இப்படி அன்பை அருவியாய் கொட்டுபவனிடம் என்ன பேசிவிட முடியும்..இதற்காகவே இவனுக்காகவே பழசனைத்தும் சீக்கிரம் நினைவு வர வேண்டுமென்று இறைவனை வேண்டினாள்..உங்களை இன்னோரு விஷயம் கூட கேக்கனும்னு நினைச்சேன்..

அதுசரி இன்னைக்கு ஒரு முடிவுல தான் இருக்க போல சரி சொல்லு??

நீங்க எங்க வொர்க் பண்றீங்க??திடீர்நு வீட்டுக்கு வரீங்க திடீர்நு கிளம்பி போய்ட்றீங்க..

யோசனையாயிருந்தவன் மகி அவனையே பார்த்திருப்பதை கண்டு இல்ல குட்டிமா அத மட்டும் கேட்காத வேண்டாம் என் வேலையால தான் உனக்கு இந்த நிலைமை மறுபடியும் அத நீ உன் தலையில போட்டுக்காத..கொஞ்சநாள்தான் என்னோட கரண்ட் ப்ராஜெக்ட் முடிஞ்சுரும் அதுக்கப்பறம் உனக்கு எல்லாத்தையும் சொல்றேன் சரியா??ப்ளீஸ்…

ஹே பரவால்ல ராம் நீங்க எதுபண்ணிணாலும் என் நல்லதுக்காகதான் இருக்கும் இனி கேக்கமாட்டேன்..என மென்மையாய் சிரித்தாள்…

தேங்க்ஸ்டா அப்பறம் ஈவ்னிங் பரணியையும் சாக்ட்சியையும் வர சொல்லிருக்கேன்..எங்கயாவது டின்னர் போலாம்..ரெடி ஆயிரு..

ஹா சாக்ட்சியோட உட்பில அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்தாரே??

மகிஅதுக்கு முன்னாடி உனக்கு அண்ணன்..நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் தெரியுமா..இன்பாக்ட் அவங்க கல்யாணம் நடக்குறதுக்கு காரணமே நீதான் என அவர்களை பற்றி கூற மகியின் முகத்தில் சந்தோஷ சாயல்..

இந்த ரெண்டு வருஷத்துல நா ரொம்பவே மாறிருக்கேன் போல ராம்..நா எங்கம்மாகிட்டயே பேச பயப்படுவேன்..இப்போ என்னடானா இவ்ளோ பண்ணிருக்கேன்..என சிரித்தவளை! கண்களில் நிரப்பினான் அந்த அன்பு கணவன்..

மாலை ராம் ரெடியாகி ஹாலில் பரணிக்காக காத்திருக்க உளள்ளிருந்து வெளிப்பட்ட மகியை பார்த்து மயங்கி விழாத குறையாக நின்றான்..நீல நிற ஜீன்ஸும் அதற்கேற்றவாறு கருப்பு வண்ண குர்தாவுமாய் சென்டர்க்ளிப் போட்டு வி.ரித்துவிட்ட முடியோடு வந்து நின்றவளை கண்டு பேச்சிழந்திருந்தான்..

என்ன ராம்??நல்லாயில்லயா??டின்னர்நு தான சொன்னீங்க அதான் கஷ்வலா இருக்கட்டுமேநு…

குட்டிமா நைஸ்…லுக்கிங் குட்டா..உன்ன இந்த காஸ்டியூம்ல இப்போதான் பாக்குறேனா அதான் அப்படியே நின்னுட்டேன்..

எனக்கு ஜீன் குர்தா ரொம்ப பிடிக்கும்..பட் அம்மாக்கு பயந்து அவ்வளவா போட மாட்டேன்..இதுகூட எப்பவோ எடுத்தது டூ ஆர் த்ரீ டைம்ஸ்தான் போட்ருப்பேன்..உங்களுக்கு பிடிக்கலனா சொல்லிடுங்க நா வேணா சுடிதாரே போட்டுக்குறேன்..

ஹே அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நல்லாயிருக்கு..பைவ் மினிட்ஸ்ல அவங்க வந்துருவாங்க எல்லாரும் சேர்ந்தே போலாம் நீ வெயிட் பண்ணு மகி..அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே பரணியும் சாக்ட்சியும் உள்ளே வர ராமை போன்றே ஆச்சரிய பார்வை அவர்களிடத்திலும்..

வாங்கண்ணா வா சாக்ட்சி புன்னகையோடு வரவேற்றாள்..பரணிக்கோ சந்தோஷம் தாளவில்லை..மகி பழையபடி அண்ணாவென்று அழைக்க அவள் தலையை பாசமாய் வருடினான்..என் குட்டிபொண்ணு திரும்ப கிடைச்சா மாறியிருக்குடா மகி..ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உன்கிட்ட பேசிருவேன்டா இந்த10 நாளும் உன்கிட்ட பேசாம என்னவோ போலயிருந்தது..இப்போ ரொம்ப ஹேப்பிடா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.