(Reading time: 21 - 42 minutes)

துவா... KU ன்னா உன்மேல நான் வச்சிருந்த காதலை உணர்ந்ததுக்கு அப்புறம்... இல்ல இல்ல, உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம்னு வச்சிக்கலாம்... இப்போ சொல்லு அப்போயிருந்து நான் உன்மேல அக்கறையா தானே இருக்கேன்..??"

"KU க்கு அப்புறம் நீங்க அக்கறை காட்றீங்களோ இல்லையோ..?? ரொம்ப மொக்கைப் போட்றீங்க ரித்வி..." என்றவள்... உடனே வயிற்றில் கை வைத்து... "குட்டி நீங்க தான் அப்பாவோட மொக்கையில இருந்து சீக்கிரம் என்னை காப்பாத்தனும்..." என்றாள்.

"போதும் போதும்... நீ மட்டும் என்னவாம்... முன்னல்லாம் என்னை தவிர எல்லோர்க்கிட்டேயும் நல்லா பேசுவ... இப்போ என்கிட்ட தானே இப்படி வாயாட்ற.. " என்று அவன் சொன்னதும்... அவள் சிரித்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே சமயம்... மேடையில் இருந்த வரூன், பிரணதிக்கு கொஞ்சம் ஓய்வுக் கொடுத்து அவர்களை தனியாக விட்டிருந்தனர்... அது அவங்களுக்கான தனிமை இல்லை... போட்டோகிராஃபர்க்கான டீ ப்ரேக்... அந்த கிடைத்த இடைவெளியை வரூன் பயன்படுத்திக் கொண்டான்.

"ப்ரனுக்குட்டி.."

"என்ன வரூன்.."

"இப்போ இந்த நேரம்... நீ எப்படி ஃபீல் பண்ற..."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு வரூன்... நான் இப்போ உங்க மனைவி... நீங்க லவ் சொன்னப்போ... நம்ம கல்யாணம் நடக்குமா..?? அண்ணன் இதுக்கு ஒத்துக்குமான்னு பயந்தேன்... இப்போ எல்லாம் நல்லப்படியா நடந்து உங்க மனைவியா நான் உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்கேன்... இந்த நேரம் இப்படியே நீடிச்சிக்கிட்டே இருக்கனும்னு எனக்கு தோனுது வரூன்..."

"ஹே... நீ என்ன, எனக்கு எதிராவே எப்பவும் நடக்கனும்னு முடிவு செஞ்சிருக்கியா..??"

"ஏ வரூன் இப்படி சொல்றீங்க..."

"ப்ரனுக்குட்டி... நமக்கு கல்யாணம் ஆகி 4 நாள் ஆச்சு... நாள் நல்லா இல்லன்னு இன்னைக்கு தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு செஞ்சிருக்காங்க... கல்யாணம் தான் லேட்டாகுது... ஃபர்ஸ்ட் நைட்டாவது சீக்கிரம் நடக்கும்னு பார்த்தா... அது கூட லேட்டாகுதேன்னு நானே நொந்துப் போயிருக்கேன்... இன்னைக்கு நைட் எப்போ வரும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா இந்த நேரம் நீடிக்கனும்னு சொன்னா வேற எப்படி சொல்வாங்களாம்..."

"என்ன வரூன்... எப்போ பார்த்தாலும் இப்படியேவா பேசுவீங்க... உங்களுக்கு வேற எதுவுமே பேச தோனாதா..??"

"ஹே... நமக்கு இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு... தெரியுமில்ல... அங்கப்பாரு உன்னோட அண்ணனை... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது... வந்தவங்கள கவனிக்கிறத விட்டுட்டு பொண்டாட்டிக் கூட நின்னு கடலைப் போட்டுக்கிட்டு இருக்கான்... அவனே அப்படி இருக்கும்போது நாம இப்போ இதெல்லாம் தான் பேசனும்... அதனால நைட் பத்தி யோசிச்சிக்கிட்டு இரு..." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போட்டோகிராஃபர் டீ ப்ரேக் முடித்து வந்தார்.

என்னத்தான் இந்த நான்கு நாட்களும் இரவில் இருவரும் தனி தனி அறையில் படுத்துக் கொண்டாலும், இவளோட திங்க்ஸ் அவர்கள் இருவருக்கான அறையில் இருந்ததால் இவள் அந்த அறைக்கு போக வேண்டிய நேரத்திலெல்லாம் அவன் சும்மாவா இருந்தான்... இவளை சீண்டிக் கொண்டு தானே இருப்பான்... அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி அவனிடம் இருந்து தப்பித்து வருவதற்குள் இவளுக்கு போதும் போதும் என்றாகி விடும்... அதையெல்லாம் இவள் இப்போது நினைத்து பார்க்கும் போது ஒரு பக்கம் இன்று இரவை நினைத்து இவளுக்கு படபடப்பாகவும் இருந்தது... ஒரு பக்கம் வெட்கமாகவும் இருந்தது..

வரூன் ஏதோ சொன்னதற்கு, பிரணதி வெட்கப்படுவதை கீழே இருந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்த தேவாவிற்கு நன்றாக தெரிந்தது... அதைப் பார்த்த போது இவர்களின் திருமணத்தன்று சங்கவி வெட்கப்பட்டது தேவாவிற்கு ஞாபகம் வந்தது... (அன்னைக்கு மட்டும் தான் அந்த ஸ்பெஷல் வெட்கமெல்லாம்... அதன்பிறகு அவன் அதை எதிர்பார்த்தாலும், அந்த தருணம் எல்லாம் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்) சரி மனைவியிடம் கொஞ்சம் ரொமான்ஸா பேசலாம் என்று தன் மனைவியின் பக்கம் திரும்பினால், அவள் வேறு எங்கோ வேடிக்கைப் பார்த்தப்படி இருந்தாள்.

"என்னத்த அப்படி வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கா.." என்று மனதில் நினைத்துக் கொண்டு... அவள் வேடிக்கைப் பார்க்கும் திசையில் இவனும் பார்க்க... கொஞ்சம் கடுப்பானான் இவன்....

"சங்கு... சங்கு டார்லிங்..." இவன் மெதுவாக கூப்பிட, "என்ன..??" கொஞ்சம் சத்தமாக கேட்டப்படியே அவனிடம் திரும்பினாள் அவள்.

"சங்கு உனக்கே இது ஓவரா இல்ல... அங்கப் பாரு மேடையில இப்போ தான் புதுசா கல்யாணம் ஆன ஜோடி ஏதோ பேசி சிரிச்சிக்கிறாங்க... அதை வேடிக்கைப் பார்த்தாக் கூட பரவாயில்ல... இல்ல அதுக்கப்புறம் நியூ கப்பிள்ன்னு சொன்னா அது நாம தான்...

நாம தனியா உட்கார்ந்திருக்கோம்... இந்த வாய்ப்பை யூஸ் பண்ணி... மாமான்னு ஆசையா, ரொமான்ஸா ஏதாவது பேசிக்கிட்டு இருக்காம..." அவன் தனியா உட்கார்ந்திருக்கோம் என்று சொன்னதும் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் திரும்பி பார்த்தாள்... என்னத்தான் அவர்களுக்கு அருகில் யாரும் இல்லன்னாலும் முன் சீட்டிலும், பின் சீட்டிலும் ஆட்கள் உட்கார்ந்து தான் இருந்தனர். அதைப் பார்த்து அவள் அவனை முறைத்தாள்.

"சரி தனியான்னா தனியாவா...?? நமக்கு பக்கத்துல யாரும் இல்லைல்ல அதை சொன்னேன்... அப்படி ஜாலியா பேசறதை விட்டுட்டு... கொஞ்சம் ஓல்ட் ஜோடியான பிருத்வியையும், யுக்தாவையும் பார்த்துக்கிட்டு இருக்கியே இது நியாயமா..??"

"ம்ம் நியூ கப்பிள் தான் நாம, ஏதோ அன்னைக்கு பிருத்வி தெரியாம வாய் விட்டதால தான் நாம நியூ கப்பிள் ஆனோம்... இல்லன்னா இன்னும் ஐயா என்கிட்ட காதலை சொல்லியிருப்பீங்களான்னு டவுட்டு தானே..."

"என்ன சங்கு அப்படி சொல்லிட்ட... நான் கண்டிப்பா சொல்லியிருப்பேன்... ஆனா நீதான் என்னை முதலில் காதலிச்ச.. ஆனா நீ மனசுக்குள்ள தானே வச்சிருந்த... யுக்தா மட்டும் சொல்லலன்னா எனக்கு உன்னோட காதல் தெரிஞ்சிருக்குமா..??"

"ம்ம் ஏதோ சம்யூ சொன்னதால தான் ஐயாக்கு என்னோட காதல் தெரிஞ்சுது... இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு எனக்கு தெரியாது..??"

"என்ன நடந்திருக்கும்...??"

"இந்நேரம் உங்கம்மா பார்த்து வச்ச பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டு ஐயா ஜாலியா இருந்திருப்பீங்க... இங்க ஒருத்தி உங்களையே நினைச்சுக்கிட்டு இருந்தது தெரிஞ்சிருக்குமா என்ன..?? ஒரு பொண்ணு மனசுல இருக்கறது கூட புரிஞ்சிக்க முடியல... இவங்கல்லாம் ரொமான்டிக்கா பேசப் போறாங்களாம்..." என்று முனு முனுத்துக் கொண்டே அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.