(Reading time: 21 - 42 minutes)

வர்கள் பேசிக் கொண்டிருந்த போது... அங்கே வந்தார் செந்தில்...

"பிருத்வி, அம்மா யுக்தா... உங்க ரெண்டுப்பேரையும் தொந்தரவு செய்யறதா நினைக்காதீங்க... போட்டோகிராஃபர் பேமிலி போட்டோ எடுக்கனும்னு சொல்றாரு, அதில்லாம நீ வேற குரூப் போட்டோ எடுக்கனும்னு சொன்னல்ல பிருத்வி... அதனால கொஞ்சம் வர்றீங்களா..??" என்று அவர் கேட்க...

அப்போது தான் ரொம்ப நேரமா இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை உணர்ந்தவர்கள்... கொஞ்சம் வெட்கத்தோடு... "வரோம் ப்பா, வரோம் மாமா" என்று ஒன்று சேர சொன்னவர்கள்... செந்தில் முன்னே செல்ல பின்னே இருவரும் சென்றனர்.

பின் வரூன், பிரணதியோடு குடும்பம் குடும்பமாக போட்டோ எடுத்தனர்... பின் மூன்று ஜோடிகளும் தனியாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.. அதன்பின் மூன்று ஜோடிகளுடன் அவர்கள் பெற்றோர்களும், கூடவே தாத்தா, பாட்டியும் நிற்க... போட்டோகிராஃபர் அந்த காட்சியை கேமராவில் க்ளிக் செய்தார்.

என்றோ என்மீதான...

உன்னில் துளிர்த்த நேசம்...

மலர்ந்து கனிந்து கசிந்து உருகி...

என் இதயத்திலும் சேர்த்து...

மணம் பரப்பிய...

அந்த இன்பமான உணர்வு...!!

அதே போல் உன்மீதான என் நேசம்...

மண்ணில் புதைந்திருக்கும் வேர் போல..

எனக்குள்ளே புதைந்து...

என்னை ஆட்சி செய்த...

 

அந்த ஆழமான உணர்வு...!!

என் சிந்தை என்ன சொன்ன போதும்...

என் ஆழ் மனம்...

உன் பேரை மட்டுமே சொல்லி...

உன்னையே நினைக்க வைத்து...

என்னை ஆட்டிப் படைத்த...

அந்த அவஸ்தையான உணர்வு...!!

என் வாழ்வே இனி...

உன்னோடு தான் என்று...

என்னையே எனக்கு புரிய வைத்த...

அந்த அழகான உணர்வு...!!

ஆம் காதல் என்று பேர் கொண்ட...

அந்த இனிமையான உணர்வு...!!

அந்த காதலை நான்...

உணர்ந்தது உன்னிடமே...!!

ஆயுள் முழுவதும்...

இனி நாம் இருவருமே...

அந்த காதல் வசமே...!!

யுக்தாவுடைய காதல் அவள் கை சேர்ந்ததா..?? என்று ஒரு தவிப்போடு நாமும் இந்த கதையில் பயணம் செய்தோம்... யுக்தாவுடைய காதல் அவள் கை சேர்ந்தது மட்டுமில்லாமல்... பிருத்வியுடனான அவள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் அவளுக்கு மகிழ்ச்சியே...!!

இந்த ஜோடி மட்டுமில்லாமல், தேவா, கவி மற்றும் வரூன், பிரணதி என்று இந்த மூன்று ஜோடிகளின் வாழ்க்கை முழுவதும் இனி மகிழ்ச்சி அலைகள் தான் என்ற நிறைவோடு நாம் விடைபெறுவோம்.

சுபம்

என்னுடைய இந்த முதல் தொடருக்கு நீங்க கொடுத்த ஆதரவை பார்த்து நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்... இவர்கள் தான் கருத்தைப் பகிர்ந்துக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டு கூற முடியாத படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புது நபர் என்று கருத்து பகிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கறீகள்...

தொடர்ந்து இந்த தொடரை படித்தும்... கருத்துக்களை பகிர்ந்து கொண்டும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்... அடுத்து இதே போல் இன்னொரு உணர்வுபூர்வமான காதல் கதையில் உங்களை சந்திக்கிறேன்... அதற்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... நன்றி.

Episode # 27

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.