“ என்னன்னு சுத்தி வளைக்காமல் சொல்லு”
“ மணி, நீ எப்படியாவது அவர்கூட போகாமல் இருக்க முடியுமா?”
“..”
“இல்ல, நீ அவர்கூட இருந்தால், நீ யாருன்னு எங்கள் வீட்டுல கேட்பாங்களே.. அப்போ நான் என்ன சொல்லுறது ?”
“எனக்கும் உன் வெற்றிக்கும் என்ன உறவோ அதை சொல்லு”
“ இல்ல கண்மணி அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க..” விஹாஷினி கெஞ்சும் குரலில் பேசவும் மௌனமாகினாள் கண்மணி.. வாசலில் நின்று கொண்டிருந்த நண்பனிடன் தான் அவனுடைய காதலியிடம் பேசுவதைக் காட்டிக் கொள்ளவில்லை அவள். மெல்லிய குரலில்,
“ எங்களை சந்தேகப்படுறியா நீ?” என்று கேட்டாள் கண்மணி. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல உடனே பதிலளித்தாள் விஹாஷினி..
“ அய்யோ சத்தியாமாய் இல்லை மணி.. உனக்கு தெரியும், நான் வெற்றி மேல ரொம்ப பொசசிவ்.. எத்தனை தடவை நாங்க சண்டை போட்டுருப்போம்? ஆனால், உன்னால ஒருதடவை கூட நான் சண்டை போட்டதில்லை. ஏன்னா எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும்.. உங்க நட்பை நான் மதிக்கிறேன்”
“அப்பறம் என்னத்தான் பிரச்சனை உனக்கு?”
“ ப்ளீஸ் மணி! இது என் வாழ்க்கை பிரச்சனை.. முடியாதுன்னு சொல்லாத.. ப்ளீஸ்..” என்று விஹாஷினி கெஞ்சிட, கண்மணி என்ன சொன்னாள்ன்னு அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன்.
ஹாய் ப்ரண்ட்ஸ்.. தீபாவளி வாரம் என்பதால் நிறைய வேலை அதான், சின்ன அப்டேட்.
உள்ளமெனும் கோலத்தில் வண்ணம் சேர்ந்திட
இதழெனும் மத்தாப்பு புன்னகையில் மிளிர
வதனமெனும் தீபம் களிப்பில் ஒளிவீச
வற்றாத மகிழ்ச்சியும்,
வருமையில்லா வளமும்
வாழ்வில் நிறைந்திருக்க
என் வாழ்த்துக்கள்..!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழர், தோழியர்களே !
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}