என்னடா இது..எங்கேயோ இடிக்குதே..என்னவோ ப்ளான் பண்றா..ம்ம் ராம் அடுத்து என்ன வெடிகுண்டு காத்துட்டு இருக்கோ..என்றவாறே குளித்து முடித்து இரவு உடைக்கு மாறி வந்திருந்தான்..தானே எடுத்து போட்டு சாப்பிட்டு முடித்து கிச்சனிற்கு சென்று அடுக்கி கொண்டிருக்க பின்னிருந்து அவன் கண்களை மூடினாள் மகி..
ஹே மகி என்ன பண்ற??தூங்கலயா நீ??
……….
எந்த பதிலுமில்லை அவளிடத்தில் நேராய் அவனை தங்கள் அறை நோக்கி கூட்டிச் சென்றவள் மெதுவாக தன் கைகளை விடுவித்தாள்..கண்களை கசக்கி கண் திறந்தவன் மெய் மறந்து நின்றான்..அறை முழுதும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்க பூக்களின் வாசம்..கட்டில் மலர்களால் நிறைந்து வழிந்தது..அவசரமாய் ஏதோ சொல்ல வாயெடுத்து திரும்பியவன் அங்கு பிறந்தநாள் பரிசாய் அவனளித்த வெண்நிற பட்டில் தலைநிறைய பூவோடு கதவருகில் நாணமும் பயமுமாய் ஒரு பார்வையோடு அவனையே பார்த்திருந்தவளை கண்டு வாயடைத்து நின்றான்..திருமணத்தன்று கண்ட அதே மிரட்சி அவளிடத்தில்...கட்டிலில் கைகளை ஊன்றி அமர்ந்தவன் நிதானமாய் கேட்டான்..
என்னடீ இதெல்லாம்..??
அதே மௌனம்..இன்னும் ஒரு வார்த்தை வாய் திறக்கவில்லை மகி..
ஏய் உன்ன தான் எதாவது பேசு..
………
சரியான அடம்…பாரு இவ்ளோ வேலைய பண்ணிட்டு ஒண்ணும் தெரியாதமாறி நிக்குறத..நேத்து அவ்ளோ சொல்லியும் நீ இப்படி பண்ணிருக்க..இதுவே நேத்துதான் பொறந்து வந்தாமாறி நிக்குது இதுல இவளுக்கு ஒரு குழந்தை வேணுமாம்..கலிகாலம்டீ..ஒழுங்கு மரியாதயா வந்து படுத்து தூங்கு..
…………
எதாவது சொல்லுடீ சொன்னாதான தெரியும் வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சுருக்க??
மெதுவாய் அவனருகில் வந்தவளை கண்டு அவன் எழுந்து நிற்க,அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் தன் இதழ்களை இணைத்திருந்தாள் அவனிடத்தில்..,அவன் முகமெங்கும் முத்ததால் நனைக்க இறுக கட்டிகொண்டாள் தன்னவனை..(எவ்ளோ தாங்க ராமும் நல்லவராவே நடிக்குறது..அம்சமா பொண்டாட்டிய பக்கத்துல வச்சுகிட்டு அவரு மட்டூம் என்ன சாமியாரா போகவா ஆச பட போறாரு)அத்தனை நேரம் தான் பேசிய அனைத்தும் மறக்க தன்னவளோடு ஈருடல் ஓருயிரென கலந்தான் அவளின் ராம்……..
கண் பார்க்கும் திசையிலெல்லாம்
காட்சிகளாய் உன் முகம்..
வாய் உதிர்க்கும் வார்த்தைகளெல்லாம்
சொற்களாய் உன் பெயர்..
செவி கேட்கும் இசையிலெல்லாம்
ஸ்வரங்களாய் உன் பேச்சு..
கால் போகும் பயணங்களிலெல்லாம்
பாதைகளாய் உன் அன்பு
மொத்தத்தில் வாழ்க்கையில்
எல்லாமுமாய் என்னுள் நிறைந்தவனே
நீயின்றி இவளில்லை இவ்வுலகில்
இன்று உன்னோடு உயிர் கலந்தாள்
இந்த பெண்ணிலவு..
லவ் யூ சோ மச் ராம் என கிசுகிசுத்தாள் அவனின் செவிகளில்..அவளை கீழே தள்ளி அவள் கண்களை பார்த்தவன்,ஏண்டீ இப்படி பண்ண??இமை தாழ்த்தி கொண்டாள்…லவ் யூ டீ பொண்டாட்டி..என இமைகளில் முத்தம் பதிக்க அழகாய் சிரித்தாள் மகி..தன்னவனின் மார்பில் சாய்ந்தபடியே,
என் மேல கோபமாப்பா??
உன்ன என்ன பண்றதுன்னே தெரில டீ..கோபம்லா இல்ல ஆனா நா தான் காரணம் சொன்னேன்ல நேத்தே..அப்பறம் நீ தான்டா கஷ்டபடுவ..
இல்லப்பா என்னால உங்களுக்கு எவ்ளவோ கஷ்டம் எல்லாத்தையும் எனக்காக பொறுத்துகிட்டீங்க..அது எல்லாத்தையும் ஈடு செய்றமாறி என் காதல சொல்லனும்னு நினைச்சேன்…இதவிட அழகா காதலை சொல்லிட முடியுமா??புருஷன்ங்கிற உரிமைய நீங்க எனக்காக விட்டு கொடுத்தீங்க அதே உரிமைய நல்ல பொண்டாட்டியா நா உங்ககிட்டயே திருப்பி குடுத்துட்டேன்..என்று கூறி அவனை இன்னுமாய் இறுக்கிக் கொண்டாள்..
பெண்ணின் மனமறிந்து நடக்கும் ஆணும்,ஆணின் மனம் நோகாமல் நடக்கும் பெண்ணும் இல்லறத்தில் கணவன் மனைவியாய் இணையும் போது அவ்விடம் அமுதை விட அழகான இனிமையான ஒன்றாய் மாறிவிடும் என்பதில் ஐயமேதுமில்லை..
தொடரும்
{kunena_discuss:952}