அப்போது அங்கே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அவர்களது குடும்ப வக்கீல் இறங்கினார். கதவு சாத்தப்பட்டிருப்பதையும் வெளியில் அன்பரசி நிற்கும் நிலையையும் கண்ட பிறகு என்ன நடந்திருக்கும் என்று அவருக்குப் புரிந்தது.
ஏற்கனவே உயில் எழுதும்போது தன் மகனைப் பற்றி தர்மதுரை சொல்லியிருந்தார். அன்பரசியின் நிலைகண்டு பரிதாபப்பட்டார். வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்.
“உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை. நீ எவ்வளவுதான் கத்தினாலும் கதவைத் திறக்கமாட்டேன்.”
“இந்த வீட்டில் யாருக்கும் இடமில்லைன்னு நீங்க சொல்ல முடியாது மிஸ்டர் புகழேந்தி. அதைப் பத்தி பேசத்தான் நான் வந்திருக்கேன்.”
வக்கீலின் குரல் கேட்டு கதவைத் திறந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிள்ளைங்களுக்கு எல்லாமா நான் இருப்பேன்.”
“அதுக்கு அவன் உன்னை இங்கே விடனுமே.”
அவள் பேசாமல் நின்றாள். அப்போது புகழேந்தி உள்ளே வந்தான். அவளருகில் வந்தவன்
“நீ இங்த வீட்டில் ஒரு வேலைக்காரியா இருக்கேன்னு சொன்னியே அதில் எந்த மாற்றமுமில்லையே?”
அவள் முகம் ஒளிர்ந்தாள்.