(Reading time: 7 - 14 minutes)

"நாளைக்கு ராத்திரியோட எல்லா பிரச்சனையும் தீர போகுது!"-என்றப்படி ஆதித்யாவின் நெற்றியில் திருநீற்றை வைத்தாள் யாத்ரா.

"என்ன லூசு உளர்ற?"

"நாளையோட உங்க தோஷம் முடியப்போகுது!"

"அது முடிந்தா என்ன?முடியலைன்னா என்ன?"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"ம்..அதான் நம்ம கல்யாணம் தை மாசம்னு அம்மா சொல்லிட்டாங்களே..!"-ஏக்க மூச்சை விட்டப்படி அவன் கூற,அவள் இதயத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"நாளைக்கு எங்கேயும் போகாம!என் கூடவே இருங்க!"

"எனிதிங் ஸ்பெஷல்?"

"ம்...நாளைக்கு சிவராத்திரி ஒரு பூஜை இருக்கு!"-ஆதித்யா அவளை கடுப்போடு ஒரு பார்வை பார்த்தான்.

"என்னாச்சு?"

"உன்னை எல்லாம் அந்த காலபைரவனே நினைத்தாலும் திருத்த முடியாது!உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு என்னத்த...?"

"ஏங்க அப்படி சொல்றீங்க?"

"வேணாம்!!பேசாம போயிடு!அப்பறம் இருக்கிற கொலைவெறில...!"

"என்ன பண்ணிடுவீங்க?"

"என்ன பண்ணுவனா???"-என்றப்படி அவன் முன்னால் நகர,இவள் பின்னால் நகர்ந்தாள்.

"வேணாம்!சும்மா இருங்க!"

"ம்ஹூம்..!முடியாது!"-யாத்ரா தன்னை நோக்கி நெருங்கியவனை,தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

அவனோ!இல்லை அவளோ!அறியவில்லை..இந்த ஒரு நாள் ஒரு ஜென்மத்தின் பழி தாண்டவமாட போகிறது என்ற உண்மையை!!!!

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.