ஜெய்யின் கோபம், தவிப்பு, ஆங்காரம், வெறி, என அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்தவள், அவன் பிரம்மரிஷியிடம் தன் கைகளில் இருப்பதை காட்டி பேசியதைப் பார்த்துக்கொண்டிருந்த போது, மின்னல் ஒளியில் ஜெய்யின் கைகளில் இருந்தது அவளது பார்வைக்கும் தெரிய வர, அதற்கும் மேல் அவள் ஒரு கணம் கூட தாமதிக்காது ஜெய்யை நோக்கி அடி எடுத்து வைத்தாள் வேகமாக…
அப்போது “சதி………..” என தைஜூ அவளை நோக்கி செல்ல முயல, இஷான் தைஜூவின் கரம் பிடித்து தடுத்தான்…
கோரத்தை விழிகளில் பிரதிபலித்தபடி, உடலெங்கும் சாம்பலும், ஒரு கையில் திரிசூலத்துடனும், மறு கையினுள் எதையோ பொத்தி வைத்துக்கொண்டும் ஜெய் தன் கண்களுக்குத் தெரிந்த போது, உடலெங்கும் வியர்த்து கொட்டிய நினைவு வந்து போனது சதிக்கு….
மேலாடை எதுவுமின்றி உடலெங்கும் எரிந்து போன சாம்பலின் கைவண்ணமும், கீழே கிடந்த திரிசூலமும், மறு கையில் தன் பொக்கிஷத்தையும் அவன் அவள் பார்வைக்கு தெரியும்படி அவன் வைத்திருக்க, கண்கள் கலங்கி உதடு துடித்தது அவளுக்கு…
“தாட்சாயிணி…..”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
அவன் மாறி மாறி அவளை பார்த்தே உரைக்க,
அவன் இருந்த அந்த கோலம் அவளை பரிதவிக்க வைத்தது…
அந்த நேரம் அதுவரை பயமுறுத்திக்கொண்டிருந்த இடியும் மின்னலும், அவர்கள் சேரும் நொடிக்காக காத்திருப்பவர்கள் போல் மழைச்சாரலை அள்ளித் தெளிக்க, ஜெய்யின் மேல் இருந்த சாம்பல் கரைந்து நிலத்தோடு நிலமாக மண் சேர்ந்தது…
ஜெய்யின் தற்போதய நிறமும், அவனின் வெற்றுடம்பும், அவளுக்கு சொல்லிடாத பல செய்திகள் சொல்ல, அவள் முகத்தில் ஏற்பட்டிருந்த நாணம் கண்டு மனம் பூரித்தான் ஜெய்…
இதழ்கள் எங்கும் அவளுக்காக மட்டுமே தேக்கி வைத்திருந்த புன்னகை உதிக்க, மகிழ்ச்சி கண்ணீருடன் அவளைப் பார்த்து தலையசைத்தவன்,
“ம்ருதினி…………..” என அழைத்து, தன் இரு கரம் விரிக்க,
அடுத்த கணமே,
“ருத்ரன்………..” என்ற கூவலுடன் ஓடிவந்து அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் சதி….
தன் மார்போடு ஒன்றி போனவளை மென்மையாக அவளுக்கும் வலிக்காது அணைத்துக்கொண்டான் ஜெய் தன்னவளை… தன் உயிரானவளை… தன் சரிபாதியை… மனம் எங்கும் நிறைந்திருந்த காதலுடன்…
{kunena_discuss:1001}