ஒரு முக்கிய குறியீடு மூலம் செய்தி எல்லை பகுதிகளில் பரிமாறப்பட்டு வருவதாக தகவல் வரவே அந்த குறியீட்டின் பொருள் அறிய நிபுணர்கள் முயன்று தோல்வியுற்றனர். நாட்டின் பாதுகாப்பு தொடர்புள்ளதாகையால் ரகசியம் காக்க பட வேண்டிய ஒன்று. அதனாலே மோகன் ராய் யேசுதாசை நாடினார். அப்போது யேசுதாசிற்கு ஒரு முறை விஜயகுமார் சித்தார்த்தின் இந்த ஹாபி பற்றி சொல்லவும் விஜயகுமாரை தொடர்பு கொண்டு தகவல் சொல்லவும் சித்தார்த்தை அழைத்து வந்தார் விஜயகுமார்.
மோகன் ராய் சித்தார்த்தை அழைத்து வந்து கணினியை திறந்து அந்த என்க்ரிப்டட் கோட்ஸ் காண்பித்தார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். கணிணி விட்டு சித்தார்த் பார்வை வேறு எங்கும் பதியவில்லை.
“மிஸ்டர் தாஸ். நீங்க அந்த சிறுவன சிரமத்துக்கு உள்ளாக்குறீங்கன்னு தோணுது. அது டீ கோட் செய்ய முடியாத ஒன்றா தான் தெரியுது” தனது அதிருப்தியை மோகன் ராய் வெளிப்படுத்திய சமயம் அவர் கையில் பிரிண்ட் அவுட்டை நீட்டினான் சித்தார்த்.
“ஓ மை காட்” மோகன் ராய் அதிர்ந்து யேசுதாஸிடம் காண்பிக்க அவரும் அதைப் பார்த்து அதிர்ந்தார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“சித்தார்த் யூ ஹாவ் டன் எ கிரேட் ஜாப் டுடே. என்னால உனக்கு விரிவா எதையும் சொல்ல முடியாது. வி கேன் ஒன்லி தேங்க் யூ மை பாய்” யேசுதாஸ் உணர்ச்சி பெருக்கோடு சித்தார்த்தை அணைத்துக் கொண்டார்.
இன்று வரை தான் என்ன கோட் கிரேக் செய்தோம் என்று சித்தார்த்துக்கு தெரியாது. ஒரு வேலை தெரிந்தால் அன்று அதை செய்திருக்க மாட்டானோ. இல்லை தெரிந்தும் கண்டிப்பாக அவன் செய்திருப்பான். ஏனெனில் இனி அவன் செய்ய போகும் செயலே அதை உணர்த்துவதாக இருக்கும்.
அந்த பாதாள பைரவி அறையில் பொழுது போகாத நேரத்தில் சிக்னல் ப்ராசஸ் செய்வதும் கோட்ஸ் பற்றி ஆராய்வதுமாய் தான் இருப்பான் சித்தார்த். அப்படி ஒரு அறை அவன் வீட்டில் இருப்பது அபூர்வா தவிர யாருக்குமே ஏன் சுசீலா கிருஷ்ணமூர்த்திக்குமே தெரியாது.
அபூர்வாவிடம் கூட அது என்ன என்று அவன் சொன்னதில்லை. அவளும் கேட்டுக் கொண்டதில்லை.
பின்னாட்களில் ஓரிரு முறை சித்தார்த் இது போல சிக்னல் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சில தகவல் தெரிய வர ரகசியமாய் அதை யேசுதாஸிடம் தெரிவித்தான்.
“சித்து நீ கவர்மன்ட் சர்வீஸ் ஜாயின் செய்து கொள்ளலாமே” ஒரு முறை யேசுதாஸ் கேட்க சித்தார்த் மறுத்து விட்டிருந்தான்.
“என்னோட ப்ரீடம் போய்டும் அங்கிள். சீனியர் சொல்றத கேட்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு சில ப்ளாக் ஷீப் இருக்காங்க தானே. அத நீங்களும் மறுக்க முடியாதே. என்னால அதை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. என்னால முடிந்த அளவு திரைமறைவில் உங்களுக்கு ஹெல்ப் செய்யறேன்” சொன்னது போல அவ்வப்போது உதவிகள் செய்து கொண்டிருந்தான்.
அபூர்வாவிற்கும் தெரியாத சித்தார்த்தின் அந்த ஒரு ரகசியம் இது தான்.
யேசுதாஸ், மோகன் ராய் கூறிய செய்திகளை அசை போட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்த சித்தார்த்தை அபூர்வாவின் சிரிப்பு சத்தம் தான் வரவேற்றது.
“நேத்து நைட் நடந்த எதுவும் அவளுக்கு நினைவு இல்லையா” மனதில் நினைத்துக் கொண்டே உள்ளே வந்தவன் அங்கே சந்தோஷ் அமர்ந்திருக்கவும்
“மாப்ள எப்போடா வந்த” உற்சாகாமாய் கை அசைத்தான்.
“சித்து..நேத்துல இருந்து நானும் பார்க்குறேன். கேட்டதுக்கு ஒழுங்கா பதில் கூட சொல்லல. இவன எப்போ இருந்து நீ மாப்பிள்ளைன்னு கூப்பிட ஆரம்பிச்ச” குற்றம் சாட்டும் குரலில் அதிகாரமாய் கேட்டாள் அபூர்வா.
“இப்போ கொஞ்ச நாளா தான். என்ன மாப்ள இன்னும் அபி கிட்ட சொல்லலையா”
“அது தானே நான் மறந்தே போயிட்டேன். நேத்தே நீ என்னவோ தயங்கி தயங்கி சொல்ல வந்த” சந்தோஷிடம் திரும்பி வினவினாள் அபூர்வா.
“அது வந்து அபி” அப்போதும் தயக்கமாய் சந்தோஷ் இழுத்தான்.
“அது தான் வந்திட்டியே மாப்ள. அப்புறம் என்ன. பில்லி கிட்ட இம்புட்டு பயமா” சித்தார்த் சந்தோஷை சீண்டினான்.
“அடடா இதை யாரு சொல்றது” சந்தோஷ் சித்தார்த்தின் காலை வாரினான்.
“சரி விடு விடு. பில்லி சகவாசத்தில் இதெல்லாம் சகஜம்”
சித்தார்த் சொல்லவும் அவனை முறைத்த அபூர்வா அவன் கையில் ஹெல்மட் வைத்திருக்கவும் “பைக்கிலா போயிட்டு வந்த” என்று கேட்டுக் கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து கிச்சனுள் சென்று கையில் மூன்று ஜூஸ் கோப்பைகளுடன் வந்தாள்.
“ஏதாச்சும் சாப்டியா சித்து” கேட்டுக் கொண்டே அவனிடம் ஜூஸ் கோப்பையை நீட்டினாள்.
“சான்ட்விச் சாப்டேன் டா”
“இந்தா சந்தோஷ் தெம்பா ஜூஸ் குடிச்சிட்டு என்ன விஷயம்ன்னு சொல்லு” அபூர்வா அவனிடமும் ஜூஸ் கோப்பையை நீட்டினாள்.
மெல்ல சந்தோஷ் விஷயத்தை சொல்லவும் அபூர்வா ஒரு கணம் அதிர்ந்தாள்.
“என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே வந்து இத நீ சொல்லுவ” கோபமாய் சந்தோஷிடம் ஆரம்பித்து “இதுக்கு நீயும் உடந்தையா சித்து” வெடித்தாள் அபூர்வா.
தொடரும்
{kunena_discuss:1080}