"எல்லாம் என்னால தான் நடந்துச்சு இல்லையா நிரு..?? அன்னைக்கு சஞ்சய்க்கிட்ட பொய் சொல்லி நான் தான் வர சொன்னேன்... எனக்கு உதவின சஞ்சய்க்கு நான் கெடுதல் செஞ்சுட்டேன்... ஆனா செஞ்ச தப்புக்கெல்லாம் அளவுக்கு மீறி தண்டனையை அனுபவிச்சிட்டேன் நிரு.." என்றதும் நீரஜா அவளை கேள்வியாய் பார்த்தாள்...
"என்னோட சின்ன வயசுல நாங்க ரொம்ப வசதியா வாழ்ந்தவங்க நிரு... திடிர்னு தொழில் நஷ்டமாக அப்பா அதிர்ச்சியில இறந்துட்டாரு... நஷ்ட ஈடெல்லாம் போக மீதி இருந்த பணத்தை அம்மா எனக்கும், என்னோட தங்கைக்கும் ஆன படிப்புக்கும், கல்யாணத்துக்கும் உதவும்னு பேங்க்ல போட்டுட்டாங்க... வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க... அந்த வருமானம் குடும்ப செலவுக்கே சரியாப் போக, எங்களோட ஆடம்பர செலவெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அப்படி செய்யவில்லையே... மந்த்ரா விஷயத்தில் அவனை இப்போது இவள் தவறாக நினைக்கவில்லை என்பது அவனுக்கு தெரிய வேண்டாமா..?? இப்படியிருந்தால் இவர்களுக்குள் எல்லாம் எப்படி சரியாகும்...?? இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவள்... ஏதோ முடிவெடுத்தவளாக...
"மந்த்ரா நான் கிளம்பனும்..." என்றாள்.