தன் சகோதரியின் இந்த திடீர் செயலில் நிகேதன் முதலில் வியந்தாலும்.... அவன் கைகளோ அவள் தலையை கோத தவறவில்லை...
"நிரு என்னடா..??"
"ஒன்னுமில்ல நிக்கி... இன்னைக்கு அம்மா, அப்பா ஞாபகமா இருக்கு..."
தங்கை இப்படி சொல்வாள் என்று நிகேதன் எதிர்பார்க்கவில்லை... சிறுவயதிலேயே தாய், தந்தை இறந்துவிட்டதால், இப்போது வரையிலுமே ஏதாவது ஒரு தருணத்திலோ... இல்லை சூழ்நிலையிலோ... ஏன் அது சந்தோஷமான தருணமாக இருந்தாலும் இருவருமே அவர்களை நினைவுப்படுத்திக் கொள்வார்கள் தான்... ஆனால் ஒருவருக்கொருவர் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்... அதனால் அடுத்தவரும் சேர்ந்து வருத்தப்படுவர் என்று, தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வர்...
ஆனால் இன்று வாய்விட்டு தன் சகோதரி கூறுகிறாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ணிக்கிறேன்... போதுமா..??" அவள் சொன்னதும், தங்கயிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை...
"நிஜமா தான் சொல்றியா நிரு... நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா..?? அப்போ நான் சஞ்சய் கிட்ட பேசட்டுமா..??" அவன் அப்படி கேட்டதும், நீரஜாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.