(Reading time: 18 - 35 minutes)

ரியுமா ஆரம்பத்துலதான் அப்டி நினச்சேன்…..ஆனா  நீ செலக்ட் செய்திருக்கியே டாக்டர்…..அவன் னேம் ஒரு ஃபெமிலியர் ஃபீல்…..எனக்கு தெரிஞ்சவனா இருக்கலாம்….அப்டின்றப்ப நான் அங்க வந்தா நீ என் வைஃப்னு அவனுக்கு தெரியலாம்….அப்றம் ஒரு டைம் இல்லனா ஒரு டைம் பேபி பத்தி அவன் நம்ம சர்க்கிள்ள எதுவும் சொல்லிட கூடாது……இப்பன்னா அவனுக்கு நீ யாரோ ஒரு பேஷண்ட் அவ்ளவுதான்…..” விவன் தன் பக்க காரணத்தை சொல்ல…

‘சே இதுக்கு வேற இவன்ட்ட காஞ்சமே’ என்று நினைத்துக் கொண்டாலும்….ரியா அவள் பேச வந்ததையே பேசினாள்.

“அப்ப என் ட்ரீம்ஸ் பத்தி இப்ப உங்க்ட்ட சொல்லலாமாபா..…?” கேட்டுக் கொண்டவளுக்கு முன்பு அவன் சொன்ன அவ்ளவுதான் வந்திருக்கா….என்ற ட்ரீம்ஸ் பத்திய கமென்ட்டெல்லாம் நியாபகம் வர…

“உங்களுக்கு என் ட்ரீம் பத்தி தெரியுமோ….?” என அடுத்த கேள்விக்கு போனாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“நோ நோ எக்‌ஸாக்ட்லி என்னதுன்னு தெரியாது…..ஆனா பீச்ல வச்சு முதல் நாளே என்ன பிடிச்சுறுக்குன்னு சொன்னியே….அப்ப இருந்து  எனக்கு ஒரு ஃபீல்……நீ என்ன விரும்புற…..அதை ஒத்துக்க உன் மனசுக்கே விருப்பம் இல்ல…..அப்டி உன் மனச உன்னாலே அக்செப்ட் செய்ய முடியாம, உன் உணர்வுகள உன்ட்டயே உண்மையா வெளிப்படுத்த முடியலைன்றதால……. மைன்ட் அதெல்லாத்தையும் ட்ரீமா எக்‌ப்ரெஸ் செய்துன்றது என் அண்டர்ஸ்டாண்டிங்…..

நீ வேற தென்காசி, தளபதின்னு சொன்னியா….சரி வர்ற கனவு ராயலா வருது போலன்னு நினச்சேன்….

ஒருத்தங்கள பெஸ்ட்ன்னு மனசு வெளிப்படுத்த விரும்பிச்சுன்னா…. ராயல் பேக்ரவ்ண்ட்ல பெஸ்ட் கிங்க் தான…… சோ இன்னும் நான் தளபதி தானா?  கிங்க் இல்லையான்னு அப்ப மீன் செய்தேன்…. ஆனா அடுத்து உன் ட்ரீமைப் பத்தி தெரியாம நான் டீஸ் செய்யபோய் உன்னை இன்னும் குழப்பிடக் கூடாதுன்னு அதுப் பத்தி பேசுறதே இல்ல…. “

அவன் விளக்கத்தை பதிலின்றி கேட்டிருந்தவள்…… தன் கனவுகளை சொல்லி முடித்து….. அதோடு அந்த  பாத்ரூம் குரல்கள் மற்றும் முழு இன்சிடென்டையும் விளக்க..

“உன் ட்ரீம்ஸ் நிஜமாவே ரொம்ப பெக்யூலியர்தான்…..” என ஒத்துக் கொண்டான் அவன். ஆனாலும் ட்ரீம்ஸ் என்னைப் பொறுத்தவரைக்கு சைன்டிஃபிக்ன்றதுதான் நம்பிக்கை….. ஐ மீன் அறிவு சார்ந்த விஷயமாத்தான் நம்புறேன்…. ப்ராப்பரா ஹேண்டில் செய்ய தெரிஞ்சவங்க….பெர்ஃபெக்டா இன்டர்ப்ரெட் செய்ய முடியும்னுதான் தோணுது……  சேம்டைம் நான்தான் கரெக்ட்னு என்னால இந்த சிச்சுவேஷன்ல எதுவும் சொல்ல முடியாது….

பட் ஒன்னு மட்டும் கன்ஃபார்மா சொல்லலாம் நம்ம ப்ராப்ளம் இந்த ட்ரீம் மட்டுமில்ல….வேற யாரோ இத வச்சு விளையடுறாங்க…..” என்றவன்….அதற்கான தன் பக்க காரணத்தையும் சொன்னான்…

“சீ  அந்த ஃபயர் இன்சிடென்டுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் இங்க இருந்து பேசிட்டு இருந்தோம்…. அப்ப பார்த்து உன் மேல பல்லி விழுது…..நீ குளிக்க போற…….எனக்கு ஃபோன் வருது…… நான் அத அட்டென் செய்ய போறேன்…..அந்த கால்ல பேசுறப்பவே தெரியும்…..அது நிஜமான பார்சேசிங் இன்ட்ரெஸ்ட்ல வந்த கால் இல்லன்னு….பட் பொதுவா இப்டி கால்ல நாங்க டீடெய்ல்ஃஸ் கொடுத்துதான் வைப்போம்….. .இப்ப இல்லைனாலும்…அடுத்து அவங்களுக்கு தேவை வர்றப்ப நம்மட்ட வருவாங்கன்றது ஒரு ஒபினியன்….ஆக அந்த கால் இழுத்தடிச்சு…..ஒரு வழியா முடிய…..நான் வர்றேன்…..நீயும் வர்ற….இங்க ஃபயர்….அதாவது நம்ம வெளிய அனுப்பிட்டு யாரோ இந்த  ஃபயர்க்கு அரேஞ்ச் செய்திருக்கலாம்ன்றது என் வியூ…”

அவன் கருத்தையும் ரியாவால் முழுதாக மறுக்க முடியவில்லை….இருக்கலாம்தானே என்று தோன்றுகிறது அவளுக்கும்….

“வாட்டவெர் விவன்… இது மனுஷங்க வேலைதான்னே நீங்க நினச்சீங்கன்னாலும்…. அவங்க நம்மள  ரூமவிட்டு வெளிய போக வச்சுட்டுதான வம்பு செய்றாங்க……அப்டின்னா நிச்சயமா தூங்குறப்ப நம்ம எதுவும் செய்திட மாட்டாங்க….அவங்களுக்கு தேவை நாம தென்காசி வர்றது…சோ இங்க எதுவும் மோசமா நடாக்காதுதானபா….நீங்க தூங்கலாம் இல்லையா….?” ரியாவின் இந்த கேள்வியில்…. அவன் முகத்தில் இதமான பாராட்டான ஒரு புன்னகை…

“சரி படு…” என்றபடி….. இப்பொழுது ப்ராப்பர் பொஷிஷனில் இவளை படுக்க அனுமதித்து அவனும் படுக்க…

“என்ன பொறுத்தவரை எவ்ளவோ இழப்புக்கு பிறகு…எனக்கே எனக்குன்னு  கடவுள் உங்கள தந்திருக்கார்…..அப்டி சேர்த்துவச்சுட்டு….உடனே அடுத்து நமக்கு ஏன் கெட்டது செய்ய போறாராம் அவர்…அதனால நமக்கு எதிரா எதுவும் யாரும் ஒன்னும் செய்ய முடியாது….மனுஷங்களோ ஈவில் ஃஸ்ப்ரிட்சோ, மந்திரவாதியோ, பில்லி சூனியமோ…எதுவும் யாரும் கடவுள விட பலமானவங்க கிடையாது….நாம கண்டிப்பா நல்லாதான் இருப்போம்…” அவனுக்காக மட்டுமல்ல தனக்காகவும் சொல்லிக் கொண்டவள்…. அவன் மார்பிற்குள் புதைந்தாள்…

அவளை அணைத்தபடி சற்று நேரத்திற்கெல்லாம் விவன் சூப்பரா தூங்கி இருக்க….காவல் வேலை தேவையா என கேட்ட இவளுக்குத்தான் தூக்கம் வந்திருக்கவில்லை..

காரணம் அந்த ட்ரீம்ஸோ அல்லது ஆவியோ கிடையாது….அவ மன கேள்விதான்…

என்னதான் லவ் பண்ணட்டுமே…..மேரேஜே ஆகி இருக்கட்டுமே…..ஒரு பொண்ணு முதல் நாளே…இவ விவன்ட்ட இழையுற மாதிரி இப்டி இழைய முடியுமா? என்ன இருந்தாலும் கொஞ்சம் தயக்கம்…பயம்…. இப்டி எல்லாம் இருக்கும்னுதானே சொல்வாங்க…

இவ எப்டி இன்னைக்கு இவ்ளவு ஈசியா சேர்ந்துகிட்டா….. ஒரு வேளை விவனும் இவளுக்கும்  முன்னமே மேரேஜாகி…அதுல வந்த பேபியா இது…

ஆவியோ மந்திரவாதியோ…இல்ல விவன் சொல்றாப்ல எதோ வில்லனோ…எதோ பண்ணி இவங்க ரெண்டு பேருக்கும் அதை மறந்து போக வச்சுட்டாங்களா…? நாதன வச்சு ஆதிரன்ல இருந்து இவங்க எல்லோரையும்  நடந்த வெட்டிங் நிஜமில்லன்னு நம்ப வைக்காங்களோ… ? கன்னாபின்னாவென காட்டுவாகாக ஓடுகிறது இவள் கேள்விகள்…

எப்போது தூங்கினாளோ…??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.