(Reading time: 12 - 23 minutes)

03. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

பூர்வியின் கோபத்தை பார்த்து சிரித்து கொண்டே , எதோ குழந்தைகள் கோபப்பட்டால், பார்த்து ரசிப்போமே,  அதே பாவத்துடன் அவளை ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் இந்திரஜித் ..........

பூர்வியும், கோபத்தில்  இந்தரின் (Udhiன் விருப்பத்திற்கிணங்க ஷார்ட்டா இந்தர்) கையிலிருந்த பாதி கிளாஸ் ஜூஸ்ஐ வாங்கி அவன் முகத்தில் ஊற்ற நினைத்த மனதை அடக்கினாள், தான் அவ்வாறு செய்தால் அங்கிருக்கும் அனைவருக்கும், ஏன் என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும், ஆனால் அவனை அப்படியே விடவும் அவளது கோபம் ஒத்து கொள்ளவில்லை.

ஒரு வினாடி தலை குனிந்து யோசித்த பொழுது அவனது Louis Shoes பூர்வியின் கண்களில் பட்டது. உடனே இந்தரின் கைகளிலிருந்த பாதி கிளாஸ் ஜூஸ்ஐ வாங்கி, அவனது ஷூஸ் மேல் ஊற்றினாள் பூர்வி.........

இந்தரும் ஒரு வினாடி திகைத்து தான் போனான். ஆனால் அந்த குறும்பையும் ரசிக்கத்தான் செய்தான்.

அந்த ரசனையுடன் பூர்வியை பார்த்து “ பாத பூஜை பிரமாதம் பூஜா” என கூறி இன்னம் கொஞ்சம் ரசனையோடு அவளது பதிலுக்கு காத்திருந்தான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவனது குறு, குறு பார்வையை கண்டு, எப்படி  ரியாக்ட் செய்வது என அறியாமல் , அவனை சுற்றி கொண்டு , டின்னர் பரிமாற பட்டிருந்த டேபிளை நோக்கி நடந்தாள் பூர்வஜா..............

அனைவரும் அவர்களது தட்டில் உணவை எடுத்து கொண்டிருந்தனர்.  கடைசியாக நின்றிருந்த ஸ்ருதியுடன் சேர்ந்து தட்டை எடுத்தாள்.

ஸ்ருதியும், “என்ன பூர்வி, உன்னிடம் இந்திரஜித், என்ன கேட்டு கொண்டிருந்தார்? அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்”.

இருந்த கோபத்தில், ஸ்ருதியிடம், எப்போதும் துடுக்காக பேசுவது போல் ம்ம்ம்ம்...... கல்யாணம் பண்ணிக்கலாமான்னு , ப்ரப்போஸ் பண்ணார் என்று நக்கலாக கூறினாள்..............

“என்ன சொன்னாங்க உங்க தோழி “ என்ற இந்திரின் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்............

பூர்வி, சிறிது கூட எதிர் பார்க்கவில்லை, அவன் அவர்களுடன் வந்து வரிசையில் நின்று, உணவை  தட்டில் எடுப்பான் என்று......... வெய்ட்டர், அவனிருக்கும் இடத்திற்கே உணவை எடுத்து செல்வார் என நினைத்திருந்தாள்.

“உங்களை பற்றி தான் , என கூறும் பொழுதே ஆ ஆ ................ என கத்தினாள் ஸ்ருதி..........

அவள் சொல்லி முடிக்கும் முன்பே, அவளது காலை மிதித்து இருந்தாள் பூர்வி....... இவள் வேறு , இந்திரின்  முன்பு மானத்தை வாங்குவாள் என நினைத்து கொண்டே......

ஸ்ருதியும், ஆ என்று கத்தி முடித்து, பூர்வியை பார்த்து, ராட்சஷி என திட்டினாள்.

“அழகான ராட்சஷி” என இந்திரஜித்தும் ஒத்து ஊதியது மட்டுமல்லாது , இவள் நடுவில் நிற்க , இவர்கள் இருவரும் ஹைபை கொடுத்து கொண்டனர்........

“போதும், உங்க பாசமலர் ரீலை கொஞ்சம் நிறுத்தரிங்களா” என பூர்வி அவர்களை அதட்டினாள்...........

“ஹேய், நான் எப்ப அவர் எனக்கு அண்ணான்னு சொன்னேன்? என ஸ்ருதி கேட்க ...

“அவங்களை தவிர, உலகத்தில் உள்ள எல்லா பெண்களும் , எனக்கு சகோதரின்னு தான் நினைப்பு  அவங்களுக்கு” ............ என குறும்புடன் கூறினான் இந்திரஜித்..........

இருந்த கோபத்தில், அடுத்து இருந்த அவளுக்கு பிடித்த டிஷ்ஷான பன்னீர் டிக்காவை கூட எடுக்காமல், எடுத்த வரை போதும் என்று தனது இடத்திற்கு திரும்பி விட்டாள் பூர்வி.........

மற்றவர்களும், தங்களுடைய பரிமாற பட்ட தட்டுகளுடன் இருக்கைக்கு திரும்பினர்........... வந்து அமர்ந்த பொழுது, பூர்விக்கு  அடுத்த இருக்கையில் இந்தர் வந்து அமர்ந்தான்.........

அடுத்த சில நிமிடங்களில், வெய்ட்டர் பன்னீர் டிக்காவுடன் வந்து அவளுக்கு பரிமாறி விட்டு இந்தரை பார்த்து தலை அசைத்து விட்டு சென்றார்.

அவளுக்கு பிடித்த டிஷ் கூட அவனுக்கு மறக்கவில்லை இந்த மூன்று வருடத்தில், மனதில் அதை நினைத்து லேசான தென்றல் வீச தான் செய்தது.

இருப்பினும், அவன் தன்னுடன் பேசினால், பதிலே பேசக் கூடாது, என பூர்வி நினைத்து கொண்டிருக்க,

இந்தர், “எத்தனை மணி டைவிங்ல், ஷார்க் feeding க்கு போறீங்க?” என ஹெலனாவிடம் கேட்டான்..........

மதியம் மூன்று மணிக்கு சார்.......... என தனக்கு feed செய்து கொண்டே, ஷார்க் feeding பற்றி கூறினாள் ஹெலனா...........

“நாளைக்கு, குழுவில் எத்தனை பேர் இருக்காங்க?”

“இரண்டு ஜெர்மானிய தம்பதிகள் இருக்காங்க சார்”............

“குட், Hadwin ட்ட சொல்லிடுங்க , உங்களோட இன்னும் மூணு பேர் வர்றாங்க என்று.........

“கண்டிப்பா சார்........... அவங்க டிடெய்ல்ஸ்  மட்டும், sports சென்டர்க்கு, நவைலாவிடம்  அனுப்ப சொல்லிடுங்க சார்”...........

“நவைலாட்ட சொல்லி மெயில் பண்ண சொல்றேன்”.............

ஓகே சார்........... என கூறி டெஸர்ட் எடுக்க சென்றாள்...........

பூர்வி, “இன்னைக்கு என்ன ஸ்பெஷல் டெஸர்ட்ல ஸ்ருதி” என கேட்டாள்..........

சில்டா , பாதாமே இல்லாம ஒரு பாதாம் கீர் , ரெசிபியை செஃப் கிட்ட சொல்லி  செய்ய சொன்னேன். ரொம்ப நல்ல வந்து இருக்கு என்று சொன்னார்...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.