இங்கயோ திராஸ், tiger ஹில் மலை பகுதிகளை கைப்பற்றிய நம் வீரர்கள் அடுத்து சியாசின் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
லே பகுதியில் இருந்து நிஷா CSD மூலம் வீரர்களுக்கு உணவு, காலநிலைக்கு ஏற்ற சாதனங்கள் எல்லாம் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டாள். அதோடு தேவையான அளவு டாக்டர் , முதலுதவி எல்லாமும் கிடைக்க ஏற்பாடு செய்தாள்.
இங்கே நம் மக்கள் அனைவரும் வீரர்களுக்காக நிதி திரட்ட ஆரம்பித்து , அதோடு நிறைய டாக்டர்ஸ், nurses எல்லோரும் volunteer ஆக சேவை செய்ய சென்றனர்.
சோசியல் மீடியாக்களின் தாக்கம் அணைத்து மட்ட மக்களுக்கும் தாக்குதல் பற்றிய விவரங்கள் கொண்டு சேர்த்தது. அதோடு இது உலக மக்களும் நமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவே ,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
எதிரி அரசாங்கம் முற்றிலும் நமக்கு பணிந்து தங்கள் படைகளை இந்திய எல்லையில் இருந்து திருப்பி கொண்டனர்.
இரு தரப்பிலும் உயிர் சேதம் இருந்தாலும் , நம் பக்கம் பெற்ற வெற்றி வீரர்களை உற்சாகம் கொள்ள வைத்தது.
இந்த வெற்றியின் முடிவில் நம் வீரர்கள் அனைவரையும் சியாசின் மலை பகுதிக்கு சென்று பிரதமர், குடியரசு தலைவர் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்தினர்.
வீரர்கள் உற்சாகபடுத்த நம் சினிமா, television மீடியா பிரபலங்கள் நேரில் சென்றனர். அதோடு மீடியாவும் கிட்டத்தட்ட இந்த கொண்டாட்டங்களை லைவ் coverage ஆக கொடுத்தனர்.
எல்லாம் முடிந்த பின் உயர் அதிகாரிகளுக்கான மீட்டிங் கார்கிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சுறா, நிஷா, பரத், மிதுன் அனைவரும் சென்றனர்.
மீடிங்கில் எல்லோரையும் பாராட்டி அவர்களுக்கு கை கொடுத்தனர். இவை எல்லாம் முடிந்த பின் அங்கே இரண்டு நாட்கள் ஓய்வு இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது அர்ஜுன் தன் மனதை சுபத்ராவிடம் தெரிவித்தான்.
அதற்கு சுராவின் பதில் என்ன?
ஹாய் friends..
இந்த போர் பற்றின விவரங்கள் முடிந்த வரை கொடுத்துட்டேன்.. இன்னும் நிறைய விஷயங்கள் இதில் ஷேர் செய்ய எண்ணினேன்.. ஆனால் அது எவ்ளோ தூரம் சரி, தவறு என்று தெரியவில்லை. அதான் மேலோட்டமா கொடுத்து விட்டேன். படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க. இன்னும் இரண்டு அப்டேட் க்களில் பாயும் மழை நீயே முடிக்கலாம்நு நினைச்சு இருக்கேன் friends..
மழை பொழியும்
{kunena_discuss:1031}