அப்படிப்பட்ட திறமை அவளுக்கு இருந்திருந்தால் ஏன் அவள் தன் மேல் உயிராயிருந்த அவனை கோட்டை விட்டு நிற்கப் போகிறாள். அப்போது அவன் பார்வையில், பேச்சில் மிளிர்ந்திருந்த காதலை உணர முடியாமல் எங்கோ புதைகுழியில் சிக்கித்தவித்தது போல் துடித்துக்கொண்டிருந்தாளே. கையில் கிடைத்த சொர்க்கத்தை தவறவிட்டுவிட்டு இப்போது தவியாய் தவிக்கிறாளே.
“பேச்சை திசை திருப்பாதே. நான் கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லு.”
“ஹூம். எப்படி அந்தக் கதையை சொல்றதுன்னுதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்.”
பெருமூச்செறிந்தாள்.
“எப்படியாவது சொல்லித்தொலை.”
“என்னோட கல்யாணத்தை சுவாமிமலை முருகன் கோயிலில்தான் வைக்கனும்னு எங்கம்மா வேண்டிக்கிட்டேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
“சாப்பிடக்கூப்பிட்டு எவ்வளவு நேரமாகுது. அங்கே என்ன கனாக் கண்டுக்கிட்டு இருக்கே? வா.”
சமைத்த உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்தவாறே கூப்பிட்டாள்.
எல்லா நினைவுகளையும் புறந்தள்ளிவிட்டு அவள் சாப்பிடச் சென்றாள். இன்று விடுமுறையாதலால் சுடச்சுட கலகலத்தவாறே சாப்பிட முடிகிறது.