ஆதங்கத்துடன் சொன்னாள்.
“நீங்களும் ஊருக்குப் போக வேண்டியதுதானே?” மஞ்சரி கேட்டாள்.
அக்கா என்றும் சொல்லாமல் ராதா என்றும் சொல்லாமல் மொட்டையாக விளித்து அழைத்ததால் ராதாவும் சகஜமாக அவளுடன் பேச ஆரம்பித்தாள்.
“ப்ச்சு. ஊருக்குப் போய் என்ன செய்யறது? அங்கே யார் இருக்கா? பிள்ளைங்க ஹாஸ்டலில். அவரும் வெளிநாட்டில். வீட்டிற்குப் போய் வெறுக் வெறுக்குன்னு மோட்டுவளையை வெறிச்சுப்பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்கு இங்கேயே இருக்கலாம்.”
என்னவோ வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டுப்போன மாதிரி நொந்துகொண்டவளை விசித்திரப் பிறவியைப் பார்க்கிறது போன்று பார்த்து வைத்தாள் மஞ்சரி.
அவள் மீண்டும் ராதாவை சீண்டிவிடக்கூடாதேன்னு கவலையானாள் நேசமலர்.
...
This story is now available on Chillzee KiMo.
...ுன்னகையுடனே ஊட்டி வளர்த்தவளையும் அவளது மறைவையும் எண்ணி இப்போதும் கலங்கினாள்.
அது மட்டுமா? அடுத்து நடந்த இடியும்.
மனதை பாரம் அழுத்தியது.
தனது மடிக்கணினியை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
“மலர். இப்படி அடிக்கடி அதில் என்னதான்டி பண்றே? கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு.”