இதுக்குமேல இவள விட்டா நமக்கு கவுண்ட்டர் குடுத்தே கொன்றுவா என்று முடிவெடுத்த அனைவரும் அன்றைய டார்கெட்டை கேக் பூசி விளையாடி உண்மையில் அவரவர் செம்புக்கு வாங்கிய பரிசுகளை கொடுத்துவிட்டு எல்லோரும் தூங்க சென்றனர்
மழைக்குள்ளே நனையும் ஒரு வார்த்தை போல அல்லவா என் மனம்
உன்னை பார்க்கும் போது எந்தன் வார்த்தை ஊமை எனவே ஆகும்
நீ நீ என் உயிரில் ஆடும் ஒரு புதிய ராகம் தானடா
ஏன் ஏன் சிறகு நீள்கிறது பறக்கதோனுதே ஏனடா......
ஏய் மகி ஃபோன் எடுடீ
ம்ம்ம்ம்...... அப்றம் எடுக்கலாம்டி நீ தூங்கு
ஹேய் கால்ல கட் பண்ணு இல்ல ஃபோன்ன ஆஃப் பண்ணு...... தூங்கவிடுடி என்று தலயனையில் காதுகளை பொத்திக்கொண்டு இருதயா கத்த
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
முத்துலெட்சுமி சுப்ரமணியனின் "இவள் எந்தன் இளங்கொடி" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
டெய்லி அலாரம் ஆஃப் பண்ண ஆள காணாம் இப்ப கத்துறீங்க பேசாம தூங்குங்கடி
இப்ப ஃபோன் எடுக்குறியா இல்ல ஃபோன்ன உடைக்கட்டுமா – ஷெண்பா
எடுத்து தொலைக்குறேன் என்று தட்டு தடுமாறி கண் மூடி கால் அட்டென்ட் பண்ணினாள்
ஹலோ
சித்ஈஈஈஈஈ ஐ லவ் யு
செல்லக்குட்டி நீங்க தானா ஐ லவ் யு டூ டா செல்லம்
ஆமா
தங்கபிள்ளைக்கு தூக்கம் வரலயா இவ்ளோ காலைல சித்திக்கு கால் பண்ணிருக்கீங்க
தூக்கம் வர்லயே ஓடிபோச்சு......
ஷண்மதியின் அக்கா சமுத்ராவின் கணவர் ஊரும் திருச்சி தான் ஒரே ஊர் என்பதால் மகிக்கும் சமுத்திராவிற்கும் ஒரு நல்ல உறவு இருந்தது அதிலும் சமுத்திராவின் மூன்று வயது மகள் ஸ்ரீநிதி என்றால் மகிக்கு உயிர் சில சமயம் மகியை காலையில் ஃபோன் மூலம் எழுப்புவது ஸ்ரீயாகதான் இருக்கும் இன்றும் செம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டதில் வந்த களைப்பையும் மீறி ஸ்ரீ குட்டி என்ற மகிழ்ச்சியில் பேச ஆரம்பித்தாள்
ஹாஹா அம்மா எங்கடா
அம்மா ஊர்ர்ர்ல
ஊர்லயா??? நீ எங்கடா இருக்க
நானு நானு....... நானும் ஊர்ல
ஷப்பா..... எந்த ஊர்டா
ல..ந்.த..ன்
எங்க????
ல..ந்.த..ன் சித்ஈஈஈ ல..ந்.த..ன்
என்னடா செல்லம் குழப்புரிங்க சித்தி பாவம்ல தூக்கம் வருதுடா
ஹாஹா ஹாஹா ஹாஹா
இவ்வளவு நேரம் தூக்கதில் இருந்தவள் ஸ்ரீநிதி என்று பேசிக்கொண்டு இருந்தவள் திடீரென்று ஒலித்த சிரிப்பொளியில் தூக்கம் கலைந்து ஏய் யாரது??? என்று டிஸ்ப்ளேயில் பார்த்தவள் கண்கள் பளிச்சிட்டது...... அவளிடம் வழிய வந்து குறும்பு பண்ணுபவன் வேற யாராக இருக்க முடியும் அவள் ஹரி கிருஷ்ணன் தான்
லூசு எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்படி பண்ணாதேனு உன் மிமிக்கிரி டெலேண்ட் எல்லாம் ஏன்ட வச்சுக்காதேனு
ஹாஹா நீ என்னைக்கு நிதானத்துல இருக்க அப்ப இப்படி தான் ஏமாறுவ
கொல்ல போறேன்டா உன்ன நீ பேசுறது எல்லாம் ஏர்லி மோர்னிங் என் தூக்கத்த கெடுக்குறதும் இல்லாம என் மேலயே பழி போடுரியாடா கருவாயா
மாம்ஸ்கிட்ட பேசுறத விட உனக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு
டேய்.......
சரி சரி மேட்டர்க்கு வா
என்ன????
எங்க அண்ணன ஏன்டி பதற விட்ட பாவம் அவன் அப்பா கூட பிஸ்சினேஸ்ஸ கவணுச்சுட்டு நானும் கூட இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டு மேனஜ் பண்றான் அண்ணியயும் நல்லா தானே பாத்துக்கிட்டு இருக்கான்
இப்ப யாரு இல்லேனு சொன்னா
அண்ணா இப்ப அண்ணிக்கு வளகாப்பு வேணாம்னு சொன்னா அதுல கண்டிப்பா ஒரு ஸ்ட்ராங்க் ரீஸன் இருக்கும் எல்லாம் உன்ட்ட சொல்ல முடியாது நீயாதான் எல்லாம் புருஞ்சுக்கணும் சும்மா இல்லாம இப்பவே வளகாப்பு பண்ணுங்கணு அடம் பிடுசுருக்க
கொஞ்சம் உள்ளே போன குரலில் “என்னால புருஞ்சுக்க முடியும் நீ தான் புருஞ்சுக்கமா கத்தூற போ” என்றாள்
அந்த குரலில் என்ன உணர்ந்தானோ கொஞ்சம் தனிவாக பேச ஆரம்பித்தான்
ஓ அப்படி நான் என்ன புருஞ்சுக்கல