அம்பிகாவை பார்த்ததும் நீரஜா சந்தோஷப்பட்டாள்... "ஆன்ட்டி.." என்றப்படி அருகில் சென்றவளுக்கோ... இதுவரையிருந்த குழப்பங்களும், வருத்தங்களும் தூரச் சென்று, ஒரு இதமான சந்தோஷம் மனதில் பரவியது... ஆனால் அதுவும் சிறிது நேரம் தான் நீடிக்கும் என்று அவள் அறியவில்லை.
"ஆன்ட்டி... திடிர்னு வந்திருக்கீங்க.. உங்களை இங்கப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.." நீரஜா சொல்லிக் கொண்டிருந்த போது ஜானவியும் சமயலறையில் இருந்து வந்தாள்... சஞ்சய், நீரஜா இருவரையும் ஒன்றாக பார்த்ததில் கொஞ்சம் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்...
"பின்ன இந்த ஆன்ட்டிய பார்க்க நீ வர்றதில்ல... அதான் நானே உன்னைப் பார்க்க வந்துட்டேன்.." என்றார் அம்பிகா.
"சாரி ஆன்ட்டி... வேலை பிஸியில அங்க வர முடியல.." <
...
This story is now available on Chillzee KiMo.
...
்டப்பட்ருக்கோம்னு உங்க ஃப்ரண்ட போய் கேளுங்க...
நீங்க தானே ஆன்ட்டிக் கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்க... இப்போ ஏன் தள்ளிப் போட்றீங்க... உங்க விருப்பப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அம்மாக்கு ப்ராமிஸ் பண்ணுங்க.." என்றதும், சஞ்சய் மட்டுமல்ல கூட இருந்த ஜானவியும் அதிர்ந்துப் போனாள்.