நிர்பயாவின் முன் ஏதும் பேசாதிருந்தான் எட்வர்ட்.சில நேரம் அங்கு கனத்த மௌனம்!!
"எதுக்காக என்னை பார்க்கணும்னு சொன்னீங்க?"
"அண்ணி ப்ளீஸ்...என்னை சாதாரணமா கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க!என்னை ஒதுக்கி வைக்காதீங்க அண்ணி!"-அவனது கண்கள் துளிர்த்தன.நிர்பயா ஒரு பெருமூச்சை விடுத்தாள்.
"நீ என்னை அண்ணின்னு கூப்பிடாதே எட்வர்ட்!அதுக்கான காலம் முடிந்துவிட்டது!"
"..........."-அவன் தலை குனிந்து நின்றான்.
"நீ எந்த தப்பும் பண்ணலை!எனக்கு உன் மேலே எந்தக் கோபமும் இல்லை!நீ ஏன் வருத்தப்படுற?"
"அண்ணன் அப்படி மாறுவான்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை!அவன் எப்படி உங்களை தூக்கி எறிந்தான்னு புரியலை!"
"வாழ்க்கையில சில விஷயங்களை விளக்கவே முடியாதுப்பா!நான் யோசித்திருக்கணும்!விடு...!அ..அவர் எப்படி இருக்காரு?"-அவளது கேள்வியில் அதிர்ந்துப் போனான் அவன்.
"அண்ணி!அவன்உங்களை தூக்கிப்போட்டவன் அவனைப் பற்றி விசாரிக்கிறீங்க?"
"அவரைப் பற்றி தெரியலை!நான் அவரை உண்மையா நேசித்தேன் எட்வர்ட்!அவருக்கு ஒண்ணுன்னா இப்போக்கூட எனக்கு தான் முதலில் வலிக்கும்!"
"நான் அவனை விட்டு வந்துட்டேன்!"
"என்ன?"
"ஆமாண்ணி!அப்படிப்பட்ட ராட்சசன் கூட எனக்கிருக்க பிடிக்கலை!நான் கெஸ்ட் ஹவுஸ் போயிட்டேன்!"
"எட்!அவர் உங்கண்ணன்!"
"அந்த பந்தமெல்லாம் எப்போதோ அறுந்துவிட்டது!"
"..............."
"அவனை பார்க்கவே எனக்குப் பிடிக்கலை!ஆனா,உங்க மனசு யாருக்கும் வராது!நீங்க என்ன சொன்னாலும் நான் திரும்ப போக மாட்டேன்."
"சரி..அதை விடு!உன் ஜாப் என்னாச்சு?"
"போன மாச டர்ன் ஓவர் மட்டும் 80 லட்சம் ப்ராப்பிட் கிடைத்தது அண்ணி!சீக்கிரமே நல்ல நிலைக்கு வந்துடுவேன்!"
"வெரி குட்!சீக்கிரம் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ!பாவம்..ரொம்ப நாள் காத்திருக்க வைக்காதே!"
"நான் அண்ணன் மாதிரி இல்லைண்ணி!"-அவன் ஜோசப்பை குறை கூறியது இவளுக்கு வலித்தது.
"அப்பறம்!எங்க கல்யாணம் நின்றதைப் பற்றி அதீதி வீட்டில கேட்டா!நான் தான் நிறுத்தினேன்னு சொல்லிடு!அவரை பற்றி எதுவும் சொல்லாதே!இல்லைன்னா,அவங்க அப்பா உனக்கு பொண்ணு தரவும் யோசிக்கலாம்!"
"ம்..உங்களை இழக்க அவனுக்கு எப்படி தான் மனசு வந்ததோ?நான் உங்க மேலே பழி போட மாட்டேன் அண்ணி!அதீதி எனக்கு கிடைக்கிறாளோ இல்லையோ!ஒரு நல்ல அம்மா கிடைத்திருக்காங்க!நான் அவங்க மேலே பழி போட மாட்டேன்!"
"............."
"வரேன் அண்ணி!"-விடைப்பெற்று நகர்ந்தான் எட்வர்ட்.
தொடரும்
{kunena_discuss:1030}