“அக்கா! நான் வாராவாரம் ஊருக்குப் போவதே அம்மாவுக்காகதான்க்கா. எங்களுக்குன்னு வேற யார் இருக்கா? தாத்தா பாட்டி கூட நான் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாங்க. என்னை வாரம் ஒருமுறை பார்க்கலைன்னா அவங்க தவிச்சுப் போயிடுவாங்க.”
“இப்ப அவங்களேதானே வேலையிருக்குன்னு சொல்லியிருக்காங்க. வேலைக்கு இடையில் உன்னைப் பத்தி அவங்களுக்கு ஞாபகம் இருக்கோ என்னவோ?”
வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தனர்.
ஆனால் அவள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
அவர்களோடு கலகலப்பாக இருந்தாள்தான். ஆனால் சில நேரங்களில் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
அவளை அதிலேயே மூழ்க விடாமல் வலுக்கட்டாயமாக தங்களோடு இணைத்துக்கொண்டனர்.
வார விடுமுறையும் முடிந்துவிட்டது.
அன்று ஒரு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ா அம்மான்னு லீவு விட்டா ஓடி வந்தர்றான்னு. ஆமா! என்னை நீங்க பார்த்ததில்லையே. எப்படி மலர்னு கண்டுபிடிச்சீங்க?”
“இவளுக்கு ஊருக்கு வந்தாலும் உங்க ரெண்டு பேரைப் பத்திதானே பேச்செல்லாம். அப்படியே உன்னை வர்ணிச்சிடட்டாம்மா.”
“இப்பக் கூட நீங்க கண்ணம்மாவோட அம்மான்னு சொன்னா நம்ப முடியலை.”