“ஏன்க்கா? நான் எங்கம்மா மாதிரி இல்லையா?”
“அவங்கதான் உன் அம்மா மாதிரி இல்லை. வெளியில் யாராவது தெரியாதவங்க பார்த்தா அவங்களை உன்னோட அக்கான்னுதான் சொல்வாங்க. எனக்கு கூட அவங்களை எப்படி கூப்பிடறதுன்னு யோசனையா இருக்கு.”
அவளது பேச்சைக் கேட்ட கண்ணம்மாவின் தாய்க்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
“அதுக்கென்னம்மா. நீங்களும் என்னை அம்மான்னே கூப்பிடுங்க.”
“உங்களுக்கு பெரிய மனசும்மா. இப்ப எல்லாம் பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க ஆன்டின்னு கூப்பிட்டாலே சில பேருக்கு பிடிக்கிறதில்லை.”
அப்போதுதான் உள்ளே நுழைந்த ராதாவை ஜாடையாகப் பார்த்தவாறே சாப்பிட செய்திருந்தவற்றை தட்டுகளில் பரப்பி எடுத்து வந்துகொண்டிருந்த மஞ்சரி சொல்ல ராதாவின் முகம் சுருங்கியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்ததும் அவ ஆவலா என்கிட்ட தாவி வர்றப்போ என்னால் தாங்கவே முடியாது. அத்தோட வேலை நேரத்தில் தாய்ப்பால் சுரந்து குழந்தைக்கு கொடுக்க முடியாம டாய்லெட்டில் போய் பீய்ச்சி கீழே விடும்போது மனசு வலிக்கும். என் பிள்ளையோட உணவை இப்படி டாய்லெட்டில் விடறோமேன்னு. பிறகு வேலை நேரத்தில் எனக்கு பால் சுரக்கவே இல்லை.