(Reading time: 10 - 19 minutes)

09. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

"மாயா யாரு?எதுக்காக அவ உங்க மேலே இவ்வளவு பகை பாராட்டுறா?"-தனிமையில் மனம் உருத்திய வினாவிற்கு காயத்ரியிடம் விடை தேடினான் அவன்.அவனது வினாவினால் இயற்கையின் சப்த நாடியும் ஒடுங்கி போயிருக்கலாம்!அதுவரை வீசிய தென்றல் காற்றும் சட்டென நின்று காயத்ரியின் பதிலுக்காக தவமிருந்தது.

"சொல்லுங்கம்மா!மாயாக்கும் உங்களுக்கும் என்ன பந்தம்?நீங்க அன்னிக்கு பேசினதோட அர்த்தம் என்ன?"

"நான் அவ வாழ்க்கையை பாழாக்கினவள் ருத்ரா!"-அவன் விழிகளில் ஆயிரமாயிரம் வினாக்கள்!!

"மாயா என் பொண்ணு!என் முதல் வாரிசு!"

"மா??"

"ஆமாம்பா!மகேந்திரகுமாரோட மனைவி நான்!"-அவன் திடுக்கிட்டு போனான்.

"25 வருடத்திற்கு முன்னாடி நடந்தது இது!அவர் சென்னையோட கமிஷ்னர்!"-தனது கடந்த காலத்தை விளக்கி கூறினார் அவர்.

"நான் அப்போ ஒரு காலேஜ்ல எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தேன்.என் ஃப்ரண்ட் ஒருத்தி ஹாஸ்டல்ல தற்கொலை பண்ணிக்கிட்டா!அது சம்பந்தமா அவர் விசாரிக்க வந்தார்.அப்போ தான் அவரை முதல் முறையா பார்த்தேன்!"

25 ஆண்டுகளுக்கு முன்...

சென்னை...

"சார்!அந்தப் பொண்ணோட ஃப்ரண்டை பார்க்கணும்னு சொன்னீங்களே!வந்திருக்காங்க!"

"உள்ளே வர சொல்லு!"

"எஸ் சார்!"-அந்தக் காவலாளி வெளியேறியதும்,சில நொடிகள் கழித்து முகம் முழுதும் கிலியோடு உள்ளே நுழைந்தார் அந்த இளம் வயது காயத்ரி!!

"எக்ஸ்யூஸ்மீ சார்!"

"கம்...!"-என்று நிமிர்ந்தவரின் விழிகளுக்குள் ஆழமாய் பதிந்தது அப்பெண்ணின் பிம்பம்.

"கம் இன்!"-பெரும் தயக்கத்தோடு உள்ளே நுழைந்தார் அவர்.

"ஸிட்!"-தன் எதிரில் இருந்த ஆசனத்தை சுட்டினார்.

"பரவாயில்லை சார்!"

"நான் வேணும்னா நிற்கட்டுமா?"

"சார்?"

"தென் ஸிட்!"-அதே தயக்கத்தோடு அமர்ந்தார்.

"காயத்ரி விஸ்வநாதன்!ரைட்??"

"ம்!"

"எத்தனை வருடமா இங்கே படிக்கிறீங்க?"

"யூ.ஜி.யில இருந்து இங்கே தான் படிக்கிறேன்!"

"ம்!அந்தப் பொண்ணு மீனா எப்படி உங்க கிளாஸா?"

"இல்லை சார்!அவ என்னோட ரூம் மேட்!"

"இது நடந்த போது நீங்க எங்கே இருந்தீங்க?"

"ஊர்ல அத்திம்பேருக்கு உடம்பு முடியலைன்னு வர சொல்லி இருந்தாங்க!அதான் ஊருக்கு போயிட்டேன்!"

"அத்திம்பேரா?"-ஒருவாறு முகம் சுழித்து புரியாமல் வினவினார்.

"அதான் அக்காவோட ஹஸ்பண்ட்!"-மகேந்திரனின் விழிகளில் காயத்ரியின் கபடமற்ற விழிகளை ஆழமாய் ஊடுருவின.

சட்டென நிலை தடுமாறியவர் விழிகளை தாழ்த்திக்கொண்டு,

"என்னை எதுக்காக வர சொன்னீங்க?"என்றார்.

"நத்திங் சீரியஸ்!சின்ன விசாரணை!உங்க ஃப்ரண்டுக்கு எதாவது பிரச்சனையா?இல்லை..எதுக்காவது டிப்ரஸ்ட்டா இருந்தாங்களா?"-காயத்ரி சுற்றும் முற்றும் பார்த்தார்.

"உங்கக்கிட்ட தனியா பேசணும்!"-மகேந்திரகுமார் சொடுக்கிட அவ்வறையில் இருந்தவர்கள் அனைரும் வெளியேறினர்.

"சொல்லுங்க!"

"மீனா ஒரு பையனை லவ் பண்ணா!"

"யாரு?"

"அவன் பெயர் கூட..ஏதோ!ஆங்..கதிரவன்!"

"ஆனா,அவன் நல்லவன் கிடையாது!"

"அவன் நல்லவன் இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்??"

"அவனை ஸ்மக்லிங் கேஸ்ல இரண்டு முறை அரஸ்ட் பண்ணிருந்தாங்க!"

"ஓ.."

"நான் மீனாக்கிட்ட எவ்வளவோ சொன்னேன்!அவ என் பேச்சை கேட்கவே இல்லை!நாளாக,நாளாக அது விஸ்வரூபம் எடுத்தது!அவன் மீனாவையும் டிரக் யூஸ் பண்ண வைத்தான்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.