"இந்த நேரத்துல தனியா ஏன் வந்த?யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?"
"நான் என் ஃப்ரண்ட்டோட ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்தேன்!இன்னும் அங்கிருந்து யாரும் கிளம்பலை!நான்தான் நேரமாயிடுச்சுன்னு வந்தேன்!"
"ஓ.."
"தேங்க்யூ!"
"ஏன்?"
"என் உயிரை காப்பாற்றினதுக்கு!"-மகேந்திரன் ஒரு நொடி அவரை உற்றுப் பார்த்தார்.
"அது என் கடமை!"-மீண்டும் அங்கு கனத்த மௌனம்!!
அதே மௌனத்தோடு விடுதியும் வந்து சேர்ந்தது!!
இருமனங்களிலும் இனம் புரியா தயக்கம் குடிக்கொண்டிருந்தது!!
"நான்...அது..உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!"
"சொல்லு!"
"அதுவந்து..."
"சொல்லு!"-அவரது விழிகள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன.
"இல்லை...ஒண்ணுமில்லை!"
"என்கிட்ட என்ன தயக்கம்?"
"ம்??"
"அது..வந்து...நான் என்ன சொல்ல வந்தேனா!எதுக்காக தயக்கம்?தயங்காம சொல்லு!"
"நான்!"
"ஏ..காயு?"-பதறியப்படி வந்தார் சௌமியா.
"என்னடி?என்னாச்சு?போலீஸ்லாம்..?"
"ஒண்ணுமில்லைங்க..உங்க ஃப்ரண்ட் தனியா வந்தாங்க!சரி தெரிந்த பொண்ணாச்சேன்னு கூட்டிட்டு வந்தேன்!"
"தேங்க்யூ சார்!"
"அப்போ நான் கிளம்புறேன்!ஏதோ சொல்ல வந்தீங்க?"
"ஒண்ணுமில்லை!"
"ஏ..இன்னும் எத்தனை நாள் மறைப்ப?சார்..காயு உங்களை விரும்புறா!"-பட்டென உடைத்தார் சௌமியா.
"ஏ..."-சட்டென உடைப்பட்ட குட்டில் எஞ்சிய இருவருமே திடுக்கிட்டனர்.
மகேந்திரனின் விழிகள் கேள்விக்கணைகளை காயத்ரியின் மேல் வீசின.அவரோ அச்சத்தின் விளிம்பையே தொட்டிருந்தார்.
"நான் கிளம்புறேங்க!அப்பறம் பார்க்கலாம்!"-அமைதியாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மகேந்திரன்.
அவர் செல்வதையே ஒருவித இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தார் காயத்ரி!!
"காயு!"-தன் தோழியின் அழைப்பிற்கு அவர் செவிமடுக்கவில்லை.தனது அறைக்கு சென்று மெத்தையில் விழுந்தவர்,கதறி அழ ஆரம்பித்தார்.
மனம் கொண்ட பந்தம் உடைந்து நொறுங்கியதன் அறிகுறியாய்!!!
தொடரும்
{kunena_discuss:1104}