(Reading time: 10 - 19 minutes)

"ந்த நேரத்துல தனியா ஏன் வந்த?யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?"

"நான் என் ஃப்ரண்ட்டோட ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்தேன்!இன்னும் அங்கிருந்து யாரும் கிளம்பலை!நான்தான் நேரமாயிடுச்சுன்னு வந்தேன்!"

"ஓ.."

"தேங்க்யூ!"

"ஏன்?"

"என் உயிரை காப்பாற்றினதுக்கு!"-மகேந்திரன் ஒரு நொடி அவரை உற்றுப் பார்த்தார்.

"அது என் கடமை!"-மீண்டும் அங்கு கனத்த மௌனம்!!

அதே மௌனத்தோடு விடுதியும் வந்து சேர்ந்தது!!

இருமனங்களிலும் இனம் புரியா தயக்கம் குடிக்கொண்டிருந்தது!!

"நான்...அது..உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!"

"சொல்லு!"

"அதுவந்து..."

"சொல்லு!"-அவரது விழிகள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன.

"இல்லை...ஒண்ணுமில்லை!"

"என்கிட்ட என்ன தயக்கம்?"

"ம்??"

"அது..வந்து...நான் என்ன சொல்ல வந்தேனா!எதுக்காக தயக்கம்?தயங்காம சொல்லு!"

"நான்!"

"ஏ..காயு?"-பதறியப்படி வந்தார் சௌமியா.

"என்னடி?என்னாச்சு?போலீஸ்லாம்..?"

"ஒண்ணுமில்லைங்க..உங்க ஃப்ரண்ட் தனியா வந்தாங்க!சரி தெரிந்த பொண்ணாச்சேன்னு கூட்டிட்டு வந்தேன்!"

"தேங்க்யூ சார்!"

"அப்போ நான் கிளம்புறேன்!ஏதோ சொல்ல வந்தீங்க?"

"ஒண்ணுமில்லை!"

"ஏ..இன்னும் எத்தனை நாள் மறைப்ப?சார்..காயு உங்களை விரும்புறா!"-பட்டென உடைத்தார் சௌமியா.

"ஏ..."-சட்டென உடைப்பட்ட குட்டில் எஞ்சிய இருவருமே திடுக்கிட்டனர்.

மகேந்திரனின் விழிகள் கேள்விக்கணைகளை காயத்ரியின் மேல் வீசின.அவரோ அச்சத்தின் விளிம்பையே தொட்டிருந்தார்.

"நான் கிளம்புறேங்க!அப்பறம் பார்க்கலாம்!"-அமைதியாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மகேந்திரன்.

அவர் செல்வதையே ஒருவித இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தார் காயத்ரி!!

"காயு!"-தன் தோழியின் அழைப்பிற்கு அவர் செவிமடுக்கவில்லை.தனது அறைக்கு சென்று மெத்தையில் விழுந்தவர்,கதறி அழ ஆரம்பித்தார். 

மனம் கொண்ட பந்தம் உடைந்து நொறுங்கியதன் அறிகுறியாய்!!!

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.