“உன்னைப் பார்த்தா சாதாரண மயக்கத்தில் கிடந்த மாதிரியா இருந்தது. திடீர்னு நீ மயங்கி விழுந்தா என்னன்னு நினைக்கிறது? சரி கிளம்பு போகலாம்.”
மனோரஞ்சன் அவர்கள் தங்குமிடத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றான்.
செல்வதற்கு முன் தேவையென்றால் அவளை மறுநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளச் சொன்னான்.
அங்கே கண்ணம்மா பதட்டத்துடன் வந்தாள்.
“என்னாச்சுக்கா? டியூசன் முடிச்சு வந்தா உங்களைக் காணலை. நேரத்திலேயே வந்துடுற உங்களைக் காணோமேன்னு எனக்குப் பயம் வந்துடுச்சு. உங்க செல்லுக்கு கூப்பிட்டாலும் கிடைக்கலை. பிறகு நீங்க கூப்பிட்டு விவரம் சொன்னதும்தான் எனக்கு நிம்மதியாச்சு. ஆமா மலரக்காவுக்கு என்னாச்சு?”
“ஒன்னுமில்லை கண்ணம்மா. கொஞ்சம் மயக்கம் அவ்வளவுதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
எந்த மாதிரி ஆபத்தில் இருந்து தப்பித்திருக்கிறாள்.
“ஏய்! என்னடி ஆச்சு? கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பேசாம இருக்கே?”
“அதுவா மலர்? இன்டர்வியூன்னுதான் அவனோட கம்பெனிக்குப் போனேன்.”
“நீதான் ஏற்கனவே வேலை பார்க்கறியே?”