“வேலை பார்க்கறேன்தான். ஆனால் சம்பளம் பத்தலை. அதான் கொஞ்சம் பெரிய கம்பெனிக்கு முயற்சி பண்ணலாம்னு நினைத்தேன். அப்பதான் இந்த கம்பெனி பத்தி தெரிஞ்சது. ரொம்ப நல்லவன் மாதிரி பேசினான். உடனே வேலைக்கான உத்தரவையும் கொடுத்துட்டான். அப்புறம் நான் கிளம்பும்போது அவனுக்கும் நான் போற வழியில் வேலை இருக்குன்னு சொன்னான். நான் நம்பிட்டேன். ஆனால் அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை.”
“எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்கனும்டி. உன்னை நீ பார்த்துப்பேன்ற நம்பிக்கையில்தான் உன் அம்மா உன்னை இங்கே அனுப்பி வச்சிருக்காங்க. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா அவங்க தன்னையே குற்றவாளியாக்கிக்கொண்டு எவ்வளவு வருத்தப்படுவாங்கன்னு நினைச்சியா? சரி அவனோடுதான் கிளம்பினே? அவன் மயக்க மருந்தை அடிக்கிற வரைக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
யிற்சி மட்டுமல்ல. சரவணனோட வாழ்க்கைக்கான பரிட்சை. நீ நல்லபடியா மதிப்பெண்கள் வாங்கி பாஸ் செய்தாதான் அவருக்கு தன் மேல் நம்பிக்கை வரும். நீ உனக்காக படிக்கிறது இன்னொரு குடும்பத்தை நிம்மதியா வாழ வைக்கிறதுக்குன்னு நினைச்சுக்கிட்டு படி.”
“ஏன்க்கா இப்படி சொல்றே?”
அவள் நடந்ததை சொன்னாள்.