"அப்படி இல்லைப்பா எனக்கு ரொம்ப நாள் இயற்கை விவசாயம் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை அதன் நம்ம ஊருல நிலம் பெரிய கிடைக்கலை அதன் அந்த பக்கம் பாக்குறேன்"
"சரிப்பா உனக்கு பிடிச்சு செஞ்ச சரிதான்.." என்று சொல்லிவிட்டு ஆபீஸ் கிளம்பி விட்டார். அப்பொழுது தான் அவனுக்கு மூச்சு வந்தது.. அவன் எதற்கு மதுரைக்கு செல்கிறான் என்று அவனுடைய அப்பா தவிர அனைவர்க்கும் தெரியும்.. இப்பொது ஏன் பொய் சொன்னான் என்று குழம்பி கொண்டு இருந்தார்கள்..
அஸ்வின் அவன் குடும்பத்தை ஹாலில் 12 மணிக்கு கூட சொன்னான். எல்லோரும் வந்தார்கள் அவன் அப்பாவை தவிர (ஆபீஸ் போய்விட்டார்).
"எல்லாருக்கும் நான் அப்பா கிட்ட அப்படி ஏன் பொய் சொன்னேன்னு யோசிச்சிட்டு இருப்பிங்க. அப்பா கிட்ட நான் உண்மையா சொல்லிருந்தா இப்போவே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருப்பாரு. எனக்கும் அதிலே இஷ்டம் இல்லை.. அவ என்னை லவ் பண்ணனும் நான் அவளை லவ் பண்ற அளவுக்கு ஆச்சும். அதுனால தான் அப்படி பொய் சொன்னேன் அப்பா கிட்ட.. எனக்கும் மீராக்கும் ஒன்னா தான் கல்யாணம் நடக்கும். இன்னைக்கு நான் மதுரைக்கு போறேன் அவளை பார்க்க அவ குடும்பத்தை பார்க்க.. எல்லாம் நல்லா முடியும். அவளை கூடிய சீக்ரம் என் பொண்டாட்டியா இங்க வருவா."
" எல்லாம் சூப்பரா முடியும் அண்ணா .. பெஸ்ட் ஆப் லக்.." என்றாள் மீரா.
"சீக்கிரம் எங்க மருமகளை கூட்டிட்டு வாடா " என்று பெரியவர்கள் எல்லோரும் சொன்னார்கள்.
"எனக்கு 2 மணிக்கு பிளைட் மதுரைக்கு.. போயிட்டு அவளோட வரேன்."
என்று சொல்லி கிளம்பி விட்டான். விமானநிலையம் வந்ததும் செக்கிங் முடிந்து சீட்டில் பொய் உட்காந்தான். அவளுடைய நினைவுகள் மட்டுமே அவனுக்கு.. என்கிட்ட வந்திடு ஸ்ரீ.. காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டான் அவள் நினைவுகளை மட்டும் சுமப்பதற்கு..
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
கோடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கோடி நான்
என் எண்ணம் எதுவோ ?
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் எண்ணமோ ?
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகத்தை உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ?
டோரா போற மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி ?
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததும் ஏதோ நிம்மதி…
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ..
இவர்கள் இரண்டு பேறும் சிந்திப்பார்களா... சந்திக்கட்டும் அவர்கள் காதல் வாழ்க்கை தொடங்கட்டும்.. அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் சந்திப்போம்..
தொடரும்...
{kunena_discuss:740}