(Reading time: 6 - 12 minutes)

09. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ

 

Poo magalin thedal

ஹாய் பிரண்ட்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப சாரி போர் தி லேட் அப்டேட்.. கொஞ்சம் என் கல்யாணத்தில் பிஸி ஆகிட்டான்.. இனிமே ரெகுலரா அப்டேட் போடறேன்.. இந்த எபிசோடு படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..

ஸ்ரீமதிக்கு போன் எடுக்க பயமாக இருந்தது.கூப்பிடுவது யாரு என்று தெரியவில்லை. அஜய் கூப்பிட்டால் என்ன சொல்வது? அவனை பிடிக்கவில்லை வேறு ஒருவனை விரும்புகிறேன் என்றா? புரியவில்லை. தவித்து கொன்டே போன் எடுத்தாள். அவள் கணித்தது சரியாக இருந்தது அஜய் தான் கால் செய்து இருந்தான்.

"ஹலோ ஸ்ரீ நான் அஜய் பேசுறேன். எப்படி இருக்க? நான் சொன்னது யோசிச்சியா? என்ன சொல்ற ? கல்யாணம் பண்ணிக்கலாமா?"

அவளுக்கு பயமாக இருந்தது என்ன பதில் சொல்வது என்று.. ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு

" எனக்கு உங்க மேல லவ் எல்லாம் இல்லை. இந்த சம்பந்தம் முடிஞ்சது முடிஞ்சது தான்.இனிமே இப்படி கூப்பிட்டு பேசாதீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்."

"ஐயோ என்ன ஸ்ரீ இப்படி சொல்றிங்க? நான் உங்கள ரொம்ப விரும்புறேன் அதை இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன். ப்ளீஸ் என்ன வெறுத்திடாதீங்க.."

"உங்க மேல எனக்கு எந்த உணர்வும் இல்லை. ப்ளீஸ் டோன்ட் கால் மீ குட் பை" என்று போன் கட் செய்ய போனாள். அவன்

" கடைசியா ஒரு முறை உங்கள ஒரு முறை பார்க்கணும் ப்ளீஸ் எங்கையாச்சும் மீட் பண்ணுவோம். நீ வரலைனா நான் செத்து போய்டுவேன்" என்று மிரட்டினான். ஸ்ரீயும் அவன் எதாவது செய்து விடுவான் என நம்பி அவனை பார்க்க ஒத்துக்கொண்டாள் பின் வர போகும் பிரச்சனைகள் அறியாமல்.

"சரி எங்க பாக்கலாம்?"

" உங்க வீடு கிட்ட இருக்க காபி ஷாப் 4 மணிக்கு வந்திடு".

" சரி வரேன் பை". இவன் சூழ்ச்சி தெரியாமல் செல்ல போகிறாள். அஜய் ஸ்ரீமதியை காதலிக்கவில்லை அவனுடைய நண்பர்களின் தூண்டுதலால் அவளை அடைய விரும்புகிறான்.காசுக்காக அவளை மணக்க தயாராகிறான்.

ஞ்சலியிடம் இருந்து மெசேஜ் வந்தவுடன் தங்கையுடன் பேச வந்ததை மறந்தான்.

" ஹலோ செல்லம் "

"ஹலோ பேபி! என்ன செய்யுற இப்போ தான மீட் பண்ணோம் அதுக்குள்ள என்ன மெசேஜ் எனக்கு?"

"ஐ மிஸ் யு சோ மச் .. நாம கல்யாணம் கண்டிப்பா தள்ளி போடணுமா?.. எனக்கு இப்போவே உங்கள கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்குது."

"உனக்கு என்னோட சூழ்நிலை தெரியும்ல டார்லிங் அப்புறம் என்ன ?"

"இல்லைங்க அம்மா எனக்கு இங்க மாப்பிளை பார்க்க தரகர் வர சொல்லி இருக்காங்க.. அதான் பயமா இருக்குங்க " என்று அனைத்தையும் ரூபாவை அனுப்ப சொன்னாள் அவள் அம்மா காவேரி. இவை அனைத்தையும் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் நின்றாள் அஞ்சலி.

அஞ்சலி நல்ல பெண் தான் அவளை முதலில் காதலிக்க சொல்லும் பொழுது காசுக்காக மணியை காதலித்தாள். பின்பு அவனின் உண்மையான காதலை உணர்ந்து அவனிடம் உண்மை அன்பை அவனுக்கும் வழங்கினாள். அவள் குடும்பத்தினரை தன் கல்யாணம் முடிந்து திருத்தி விடலாம் என்று எண்ணி கொண்டு இருந்தவள் இப்படி ஒரு சிக்கலில் மாட்டி கொண்டாள்.

"ஐயோ பேபி என்ன சொல்ற உனக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிக்க போறீங்களா என்ன பண்றது இப்போ நானு?"

"நீங்க ஒன்னும் பண்ண வேணாம் பேபி… நீங்க உங்க தங்கச்சி கல்யாணத்த முடிங்க எனக்கும் கல்யாணம் அதுக்குள்ள முடிஞ்சிடும். சந்தோஷமா இருங்க"

"ஐயோ என்ன பேபி இப்படி சொல்ற? நான் என்ன செய்யணும் இப்போ சொல்லு?"

"நீங்க என்னை உங்க வீட்டு ஆளுங்களோட வந்து சீக்ரம் பொண்ணு கேளுங்க இல்லைனா நான் உங்களுக்கு கிடைக்கமாட்டேன் அவ்ளோதான் சொல்லுவேன் அதுக்குமேல உங்க இஷ்டம். பை" என்று  மெசஜை நிப்பாட்டி விட்டாள்.மணி செய்யவது அறியாது தவித்து நின்றான்.. தங்கையா அஞ்சலியா என்று அவனால் முடிவு எடுக்க முடியவில்லை..

ஸ்வின் வீடு..

அவன் அடிக்கடி தொழில் கவனிக்காமல் வெளியூர் செல்வதை அவனுடைய அப்பா கண்டுகொண்டார்..

"என்ன தம்பி அடிக்கடி கார் எடுத்திட்டு சவுத் பக்கம் போறீங்க? என்ன விஷயம் அங்க புதுசா தொழில் எதுவும் ஆரம்பிக்க பாக்குறீங்களா?" அஸ்வின் என்ன பதில் சொல்வது என்ன திணறிக்கொண்டு இருந்தான். அவன் மதுரைக்கு செல்வது ஸ்ரீமதியை பார்க்க மட்டும் தான் என்றா சொல்லமுடியும் அப்படி சொன்னாலும் உடனே கல்யாணம் பணிக்க சொல்வார். மீரா திருமணம் செய்யாமல் நான் மட்டும் எப்படி செய்வேன் என்று யோசித்து பதில் சொன்னான்.

"ஆமா அப்பா அந்த சைடு விவசாயநிலங்களை வாங்கி போடலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அதன் போய்ட்டு வந்திட்டு இருக்கேன்"

"எதுக்கு தம்பி அதெல்லாம் நமக்கு இருக்க சொத்துக்கு விவசாய நிலத்தை வாங்கி என்ன செய்ய போறோம்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.