(Reading time: 8 - 15 minutes)

10. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ

 

Poo magalin thedal

ஸ்ரீமதி இல்லம்..

மணி தன் அம்மாவிடம் அஞ்சலியை காதலிப்பது பற்றி சொல்லி கொண்டு இருந்தான். அவன் அம்மா மிகவும் கோபப்பட்டார்.

"டேய் மணி உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா.. உன் தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் முடியல அதுக்குள்ள உனக்கு என்னடா கல்யாணம் பண்ணிக்கிற அவசரம். இது மட்டும் உங்க அப்பா பெரியப்பா காதுல விழுந்திச்சு என்ன கொன்னு போட்ருவாங்க."

"அம்மா ப்ளீஸ்.. நீங்க தான் எல்லாருகிட்டயும் சொல்லனும். எனக்கு அஞ்சலி வேணும்மா.. ப்ளீஸ்மா அவளுக்கு மாப்பிளை பார்க்க போறத அவுங்க வீட்ல சொல்லிட்டாங்கனு சொல்லி என்கிட்ட சொன்னாமா."

"என்னால கண்டிப்பா சொல்ல முடியாது.. இங்க இருந்து போய்ட்டு என்னோட கண்ணு முன்னாடி நீக்காத.." இதை கதவின் வெளியில் இருந்து கேட்டு கொண்டு இருந்த ஸ்ரீ சட்டென்று உள்ளே நுழைந்தாள்..

அவளை கண்டதும் இருவரும் திகைத்து விழித்தனர். பாப்பம்மாள் தான் முதலில் சுதாரித்து

" வாடா ஸ்ரீகண்ணு என்ன வேணும் ? காபி போட்டு தரட்டுமா ?"

"சித்தி நீங்களும் அண்ணனும் பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். கவலைப்படாதீங்க மணி அண்ணா கல்யாண விஷயத்தை நானே வீட்ல எல்லாருக்கும் சொல்றேன்."

" வேணாம்மா. இவன் பார்த்து இருக்க பொண்ணு நல்ல பொண்ணு இல்லனு முன்னமே கார்த்திக்(ஸ்ரீ பெரியம்மா மகன்-மீராவை காதலிப்பவன்) என்கிட்ட சொல்லிட்டான்மா. இவனை நம்பி நான் பேசுனா என்ன விட முட்டாள் இருக்கமாட்டாங்கமா.."

"என்னமா நீ அஞ்சலியை நல்லவா இல்லனு சொல்ற??உனக்கு அவளை எப்படி தெரியும்? அவ அப்படி பட்ட பொண்ணு இல்லம்மா.சும்மா தெரியாம பேசாதீங்க." என்று மணி தாயை கேள்வி கேட்டு எதிர்த்தான்.

" டேய் அவுங்க குடும்பத்தை பத்தி நான் நல்லா விசாரிச்சிட்டு தான் சொல்றேன். அவுங்க உனக்கு அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சிட்டு அவுங்க உதவாக்கரை பையனுக்கு நம்ம ஸ்ரீக்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போட்டு இருக்காங்க.. இது எல்லாம் நானும் கார்த்திக்கும் டிடெக்ட்டிவ் ஏஜென்சி மூலமாக விசாரிச்சோம்.. இப்போ கூட அந்த பொண்ணு பேசிருக்காது அவுங்க வீட்ல யாருனாச்சும் உனக்கு இந்த தகவலை சொல்லிருப்பாங்க.. உங்க அம்மா மேல சந்தேகம் இருந்த இப்போவே அந்த வீட்டுக்கு பொய் தெரிஞ்சுக்கிட்டு வாடா.. பெருசா பேச வந்திட்டான் அவுங்க நல்லவுங்க அது இதுனு.. போடா.."

"சரிம்மா நீங்க சொன்ன மாதிரி அவுங்க வீட்டுக்கு போய் விசாரிக்குறேன். அது மட்டும் உண்மையா இல்லைனா உங்களையும் அவனையும் என் வாழ்க்கை முழுசும் ஒதுக்கி வச்சிருவேன்.." என்று கோபமாக உறுமி விட்டு சென்றான்..

" ஏன் சித்தி அவன்கிட்ட அப்படி பேசுனீங்க? அவன் பாவம் சித்தி.."

" ஸ்ரீகண்ணு அவனும் அந்த பொண்ண பத்தின உண்மையா தெரிஞ்சுக்கணும் அதான் உண்மையா சொல்லி அனுப்புனேன். இவன் பேச கேட்டு நான் எல்லாருகிட்டயும் பேசி இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நாளைக்கு நம்ம குடும்ப நிம்மதியும் போகும் இந்த வீட்டோட ஆணிவேரா இருக்குற உன்னோட வாழ்க்கையும் போகும் தங்கம். அவனுக்கு இந்த கசப்பான மருந்து தேவை. பட்டு திருந்தட்டும்.. நீ கவலைப்படாம இரு தங்கம்..."

" சரி சித்தி கவலைப்படாதீங்க எல்லாம் சரியாய் போகும்.."

"ஹ்ம்ம் ஆனா சரி.. நீ எங்கம்மா கிளம்பிட்ட?"

"அதுவா சித்தி என் பிரண்ட் திவ்யாவை பார்க்க போறேன். பக்கத்துல தான் போறேன் .. "

" அப்படியாமா.. சரி பார்த்து போய்ட்டுவா.. நம்ம தாஸை(டிரைவர்)கூட்டிட்டு போடா.."

"இல்லை சித்தி நானே போய்க்குறேன்.."

"சரிம்மா பார்த்து போய்ட்டு வா கண்ணு..”

ஸ்ரீ கிளம்பி விட்டாள் ஆபத்து அறியாமல்.அஸ்வின் வந்து இறங்கி விட்டான் மதுரைக்கு. வந்ததும் அவன் தொடர்பு கொண்டது அவனுடைய டிடெக்ட்டிவ் நண்பன் கணேஷுக்கு...(?)

ஸ்ரீ காபி ஷாப்க்குள் நுழையும் பொழுது அங்கு இரண்டு மூன்று பேர் இருந்தனர்.அவர்களில் ஒருவன் அஸ்வினும் கூட.கோட் கேப் அணிந்து அமர்ந்து இருந்தான். அஜய் அங்கு வந்து சேரவில்லை. ஒரு கடைசி ஓரத்தில் இடம் கண்டு அமர்ந்தாள். சிப்பந்தி வந்து என்ன வேண்டும் என்று கேட்டான்.. ஆட்கள் வருவார்கள் என்று அனுப்பி விட்டாள். மிகவும் படபடக்க அமர்ந்து இருந்தாள். அஸ்வின் அவளை மட்டும் பார்த்து கொண்டு இருந்தான்..

அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றின.இளைத்து விட்டாள். அவளை எல்லாரும் கல்யாணம் என்ற வார்த்தையால் காயப்படுத்தி வருகிறோம் என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தான். அஜய் வந்து சேர்ந்தான். ஆனால் அவன் மட்டும் வரவில்லை.. நான்கு ஆடவருடன் வந்து இருந்தான்.இதை அஸ்வின் எதிர் பார்த்தான் ஆனால் ஸ்ரீக்கு அதிர்ச்சி.

" ஹலோ ஸ்ரீ.."

" ஹலோ அஸ்வின்.. என்ன நீங்க மட்டும் தான் வரேன் சொல்லிட்டு இவுங்களாம் யாரு?"

" என் பிரண்ட்ஸ் ஸ்ரீ. உன்ன பாக்கணும் சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.