பிரிந்தாலும் என் அன்பு
ஒரு போதும் பொய் இல்லையே
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணிக்காட்டும் கடிகாரம்
தரும் வாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழி ஓரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீறும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமை தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண் ஆனதால்
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒரு போதும் பொய் இல்லையே
மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு”
தொடரும்...
Next episode will be published as soon as the writer shares his episode.
{kunena_discuss:740}