கோவிலின் வாயிலின் முன்பு இருந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்த நந்திதா கையில் இருந்த கடிகாரத்தை பார்த்து விட்டு மீண்டும் சாலை பக்கம் பார்த்தாள்.
அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் காரில் வந்து இறங்கினாள் துளசி.
“எப்போடி வந்த??? என்ன சொல்லிட்டு வந்த???” என்ற கேள்வி கணைகளுடன் நந்திதாவின் அருகே வந்தாள் துளசி.
“முதல்ல நீ ஏன் டிரைவர் தாத்தா கூட வந்தன்னு சொல்லு! சரத் எங்கே???” என்று தன் பங்குக்கு கேள்விகளை வீசினாள் நந்திதா...
சரத் இன்னமும் துளசி மீது கோபமாக இருக்கிறானோ என்று அவளுக்கு சந்தேகம். கூடவே தன்னால் தன் தோழியின் வாழ்வில் சின்னதாக கூட சலசலப்பு வந்து விடக் கூடாதே என்ற அக்கறையும் கூட!
“பத்து மணிக்கு அவர் எப்படி வர முடியும் நந்
...
This story is now available on Chillzee KiMo.
...
தோழி பக்கம் திரும்பி பார்த்த துளசியின் புன்னகை பெரிதானது ஆனால் பேச்சை மாற்ற விரும்பி,
“அப்புறம் ரேவதி அத்தை என்ன சொன்னாங்க....?” என்றாள்.
“ப்ச்... அவங்களை பத்தி கேட்காத ஒசிமம்...”
“ஏன்?? என்ன சொன்னாங்க?”
“ஒன்னும் சொல்லலை...”
“அப்புறம் என்னடி??”